Saturday 16 September 2017

பொது நல வழக்குகள் -ரிட் மனுக்கள் :

பொது நல வழக்குகள்! – ரிட் மனு 

PUBLIC INTEREST LITIGATION - WRIT PETTITION

★இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 INDIAN CONSTITUTION ACT - 1950 கோட்பாடு 226 (1)  ன் கீழ்  நீதிபேராணை வழக்குகளை தொடுக்கும் உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

★அரசாங்கம், மற்றும் அரசு துறை சார்ந்த,  நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டாலோ கடமை தவறிய அரசூழியர்களினால் பாதிக்கப்பட்டவர்கள்
இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு நீதி வேண்டி நீதி பேராணை வழக்குகளை பதிவு செய்யலாம்.

★அதென்ன ரிட்?

★‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, உயர்நீதிமன்றத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யும் மனு தான் ரிட்!

★எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

★பொது நலன் பாதிக்கப்படும் போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation)  தொடரலாம்.

★உதாரணமாக உங்கள் பகுதியில்  சாலை  மோசமாக இருந்தாலோ அல்லது புதிய சாலை அமைக்க கோரி  அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு சாலை அமைக்க உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

★தொழிற்சாலைகளிலிருந்து  வெளியேறும் கழிவு நீர், கழிவுகள்,  புகையினால் பொது மக்களுக்கும்  சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டால்  அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

★தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின்  21.09.2015. நாளிட்ட அரசாணை எண் :99 ன் படி முப்பது   நாட்களுக்குள் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது  அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்தந்த துறைகள் நடவடிக்கை எடுக்கச் உத்தரவிடச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

ஐந்து வகைகளில் ரிட் மனுக்களை  தாக்கல் செய்யலாம்.

1. ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’.  WRIT OF MANDAMUS
கீழ் நீதிமன்றங்களுக்கு ஆணையிடுதல்

★அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாமல்  விட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

★சாலைகள் , நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

‘2. செர்ஷியோரரி (certiorari) ரிட் மனு
நெறிமுறை உணர்த்துதல்

★உயர்நீதிமன்றத்தின்  அதிகாரத்தில் உள்ள, ஒரு நீதிமன்றம் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவிட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான நெறி முறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பது தான் செர்ஷியோரரி ரிட் மனு .

★உதாரணமாக, ஒரு திரையரங்கம்  கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் "நோ அப்ஜக்ஷன் " ஒருவர் கேட்கிறார்.

★அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், கோவில், மதுபானக்கடை  இருக்கிறது.

★மருத்துவமனை நோயாளிகள், பள்ளி மாணவர்கள், கோவிலுக்கு வரும் பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

★அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷப ணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை மாவட்ட ஆட்சியர் தந் தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3. ‘கோவாரண்டோ’ (Quo warranto) ரிட் மனு
தகுதி முறை வினவுதல்

★எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித்தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ மனு  தாக்கல் செய்யலாம்.

4. பிரொகிபிஷன் (Prohibition) ரிட். மனு 
தடை விதித்தல்

★ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பை  மீறி செயல் படாதவாறு தடை விதிக்கக்கோரி இந்த ரிட் மனுவினை தாக்கல் செய்யலாம்.

5 .‘ஹெபியஸ் கார்பஸ்’ (Habeas corpus) ரிட் மனு
ஆட்கொணர்வித்தல்

★இதற்குத்  ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள்.

★நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி  அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம்.

★இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல் துறைக்கு அந்த நபரை கண்டு பிடித்து  நீதிமன்றத்தில்  நேரில் ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

★இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டுமானாலும்
தாக்கல் செய்யலாம்

★ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும் .

★இந்திய தண்டனைச்சட்டம் -1860 சட்டப்பிரிவு 2 (2)  ன் படி ஒரு குற்றத்தினை பணியில் உள்ள அரசூழியர் ஒருவர் தெரிந்து செய்தாலோ அல்லது தெரியாமல் செய்தாலோ குற்றம்  குற்றமே.

★கடமை தவறிய குற்றம் செய்யும் அரசூழியர்களுக்கு இந்தியத்தண்டனைச்சட்டப்பிரிவு -166 ன் கீழ் ஒரு வருடம் சிறை தண்டணை உண்டு. 

★ஆனால் நடைமுறையில் நீதிமன்றங்கள் அவ்வாறான தண்டனை வழங்காத காரணத்தினால்  பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றதை நாடி நீதிபேராணை வழக்குகள் தொடுத்து பரிகாரம் பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

★மக்கள் வரிப்பணத்தில் ஊதியங்களையும், சலுகைகளையும், பெறும்  அரசூழியர்களும், காவலூழியர் களும் கடமையை சரிவர செய்தால் நீதிமன்றங்களை பாதிக்கப்பட்ட மக்கள் நாடி செல்லும் நிலை ஏற்படாது.

சட்ட விழிப்பறிவுணர்வு பணியில்.,

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்திரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723

Friday 8 September 2017

அரசு அலுவலர்கள் கவனத்திற்கு

" அரசு அலுவலர்கள் கவனத்திற்கு "
என்ற வாட்ஸ் ஆப் குரூப் அரசு அலுவலகம்  சம்பந்தப்பட்டதல்ல!

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு (LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION)  சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின்  மூலை முடுக்கு எங்கும் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழித்து நமது இந்திய. தேசத்தை வளர்ச்சி மிகுந்த  வல்லரசு நாடாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடனும்  இந்திய அரசியலமைப்பு சாசனக் கோட்பாடு 51 (A) ஓ வின் கீழ் நமது கடமையாக கொண்டு சிறப்புடன் செயல் பட்டு வருகிறோம்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக பல்வேறு அரசு துறைகள் தனித்தனியாக  உருவாக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகளையும், பணியாளர்களையும் அரசு நியமித்துள்ளது .

ஒவ்வொரு சேவைக்கும் ஒரு கால அளவினையும் ஏற்படுத்தி உள்ளனர்.

ஆனால் பல அரசுத்துறைகளில் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்க லஞ்சம் பெறுகின்றனர் .

லஞ்சம்  பெற்று கொண்டு சட்ட விரோதமாக செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் படுகின்றனர்.

எந்த ஒரு மக்கள் நல பணிகள் செய்தாலும், அதில் பெருமளவு முறைகேடுகளும், ஊழல்களும் நடை பெற்று வருகிறது.

எந்த ஒரு அரசுத்துறையும் லஞ்சம் பெற சொல்ல வில்லை!

மாறாக லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என தான் சொல்கின்றனர்.

ஆனாலும் அரசு வழங்கும் ஊதியங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு லஞ்சம் பெற்று   கடமை தவறுகின்றனர்.

லஞ்சம் வாங்குபவர்களை கண்காணிக்கவும், ஊழலை தடுத்து நிறுத்திடவும் மத்திய  மற்றும் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகங்கள் செயல் படுகிறது.

இவர்களால் எந்த ஒரு ஊழலையும் தடுத்து நிறுத்த முடிய வில்லை.

லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் நமது அமைப்பினை நாடி வருகின்றனர்.

எந்தெந்த துறைகளில் எப்படி யார் யார்  மூலம் எவ்வளவு ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதினை ஆதாரங்களுடன் புகார் அளித்து வருகிறனர்.

இதில் சட்ட விதிமுறைகள் மீறி செயல்படுபவர்கள் தான் பெருமளவில் லஞ்சம் கொடுக்கிறார்கள்
இவர்கள் கடமை தவறிய அதிகாரிகளை காட்டி கொடுக்க தயங்குகின்றனர்.

லஞ்ச அதிகாரிகள் அதனை பயன்படுத்தி கொள்கின்றனர்.

ஒவ்வொரு அரசு துறைகள் தனித்தனியாக செயல் பட்டாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக தான் காணப்படுகிறது. 

ஆனால் மாவட்ட நிர்வாகம் என்பது அனைத்து துறைகளையும் உள்ளடக்கி செயல் படுகிறது.

இதன் செயல்துறை நடுவராக மாவட்ட ஆட்சியர் செயல் பட வேண்டும்.

எந்த ஒரு துறையில் ஊழல் நடைபெற்றாலும்  மாவட்ட ஆட்சியருக்கு முழு பொறுப்பு இருக்கிறது.

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல் படும்
அரசுத்துறைகளில் நடைபெற்று வரும், முறைகேடுகள், விதிமீறல்கள், ஆக்கிரமிப்புகள், இழப்பீடுகள், லஞ்சம் ஊழல், மற்றும் சட்ட விரோத, தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், குறித்த தகவல்களை நேர்மையான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தினை சிறப்பாக செயல்பட வைப்பதே  நமது முக்கிய நோக்கமாகும்.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும், விதிகளையும், அரசாணைகளையும், உத்தரவுகளையும்  நாடு முழுவதும் சென்று பொது மக்களுக்கு  இலவச சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அரசு துறையில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலர் மற்றும் மேல்நிலை அலுவலர்களுக்கு அரசு வழங்கி உள்ள தொடர்பு எண்களை இணைத்துள்ளோம்.

அலுவலர்கள்  பணி இடம் மாறலாம்! ஆனால் தொடர்பு எண்கள் மாறாதது.

காவலூழியர்கள் உள்பட ஒரு சில அரசூழியர்களின்  தனிப்பட்ட எண்களையும் இணைத்துள்ளோம்.

இதில் ஒரு சில பணி, ஓய்வு பெற்ற  அலுவலர்களின் தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தின் இணைய தளத்தில் இருப்பதும்  அறிய முடிகிறது.

எது எவ்வாறு இருப்பினும் இந்த குரூப்பில் இணைத்தது இடையூறு எனக்கருதும் அலுவலர்கள் வெளியேறி விடலாம்.  அனைத்து அலுவலர்களும் குரூப் அட்மின் ஆகையால் தங்களின் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் தொடர்பு எண்களை  இணைக்கலாம்.

தங்கள் துறைகளின் மூலம் பொது மக்களுக்கு வழங்கும்  சேவைகள், அறிவிப்புகள் குறித்த செய்திகளை தெரிய படுத்த வேண்டுகிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும்   அரசு அலுவலர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப் செயல் படுத்த முயற்சி எடுத்து வருகிறோம் .

வாழ்த்துக்களுடன் ...

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723
  

Thursday 7 September 2017

ஊழல் ஒழிப்பு செய்தி;0023 பேருந்து நிலைய விபத்து!!

ஊழல் ஒழிப்பு செய்தி :023/07.09.2017

குற்றம் நடந்தது என்ன?

நெஞ்சம் பதற வைக்கும் உண்மை சம்பவம்!

குற்றவாளிகள் யார்?

வருந்துகிறோம்!!

07.09.2017 இன்று  கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையத்தில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து கோர விபத்து!

JCB இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டது.

பேருந்துகளுக்காக காத்து நின்ற பயணிகளின் மீது மேற்கூரை  விழுந்த காரணத்தினால் இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலி!

படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!  இதில் ஒரு சிலர் கவலைக்கிடம்!

இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் இருபது வருடங்கள் தான் ஆகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கூரைகளில் விரிசல் காணப்பட்டதாக. தெரிய வருகிறது.

தரமற்ற கட்டுமானம் தான் இந்த கோர விபத்திற்கு காரணம் என பலரும் சொல்கின்றனர்.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலான கட்டிடங்கள் உறுதியுடன் இருக்கையில் கான்ங்கிரீட்டிலான மேற்கூரை இடிந்து விழ காரணம் என்ன?

கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் யார்? அவர் தற்பொழுது உயிருடன் இருக்கிறாரா?

ஒரு வேளை உயிருடன் இருந்தால் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடும்!

அந்த வழக்கு முடிவுக்கு வர  பல ஆண்டுகள் ஆகலாம்! 

வழக்கு தீர்ப்பு வரும் போது அவர் உயிருடன் இருக்க மாட்டார் . எனவே அந்த வழக்கு முடித்து வைக்கப்படலாம்!

அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்து உயிர் இழந்தவர் குடும்பங்களுக்கும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும் வழக்கம் போல் உதவி தொகைகள் வழங்கப்படும் .

இந்த உதவி தொகையின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இழப்பீட்டினை சரி செய்ய முடியுமா?

இயற்கை சீற்றங்களின் காரணமாக இது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட  விபத்து அல்ல! 

இது உறுதி தன்மை இல்லாத கட்டுமானத்தின் காரணமாக நடைபெற்ற கொலையாக தான் இருக்க வேண்டும்.

# கோரிக்கை :

குற்றவாளிகள் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.!

1. கட்டிட ஒப்பந்ததாரர்

2 அரசு விதிமுறைகள் படியும் ஒப்பந்தத்தின் படியும் நல்ல முறையில் கட்டி முடிக்கப்பட்டது  என உறுதி மொழி வழங்கிய பொறியாளர்

3. கட்ட உறுதி தன்மைக்கு சான்று வழங்கிய பொறியாளர்.!

4. அதற்கு ஒப்புதல் வழங்கிய ஊழல்  அதிகாரிகள் அனைவர் மீதும் கடமை தவறிய குற்றத்திற்காகவும், அரசுக்கு இழப்பீடு மற்றும் கொலை குற்ற வழக்கு பதிவு செய்து பணி இடை நீக்கம் செய்ய வேண்டுகிறோம்

அன்று மவுலி வாக்கம்!  அது போல இன்றும்  பல கட்டிடங்கள் உறுதி தன்மை இல்லாமல்  இடிந்து விழுந்து மக்கள் மடிந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்து குற்ற செயல்களுக்கும் முக்கிய காரணம் லஞ்சம் வாங்கி தனது குடும்பத்தினருடன் சுகபோக வாழ்க்கை நடத்தும் கடமை தவறிய அரசூழியர்கள்
தான் என்பதினை பகிரங்கமாக பதிவு செய்கிறேன்,

கும்பகோணம் தனியார் பள்ளி தீவிபத்தில் 94 மழலை குழந்தைகளை பலி கொடுத்தோம். குற்றவாளிகள் இன்று சுதந்திராமாய்.  

நீதி அரசர் சம்பத் தலைமையிலான குழு 2661 தனியார் பள்ளிகளை மட்டும்  ஆய்வு செய்ததில் 1557 பள்ளிகள் கட்டிட உறுதி தன்மை இல்லாமலும், 1670 பள்ளிகள் கட்டிட உரிமம் பெறாமலும்,  தகுதியற்ற ஒயரிங் வேலைகள் உள்ளதாக  1281 பள்ளிகளும், முறையான தீ தடுப்பு சாதனங்கள் இல்லாமல் 2386 பள்ளிகள் இயங்கி வருவதாகவும் ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கையினை அளித்தார்கள்!

ஆனால் அந்த பள்ளிகள் இன்றும் இயங்கி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்கு காரணம் யார்?  போலியான சான்றிதழ் வழங்கிய லஞ்ச அதிகாரிகள் தான்!

எத்தனை எத்தனை விபத்துகள் ஏற்பட்டாலும அனைத்தையும் மக்கள் மறக்கும் மன நிலையில்  இருப்பதால் தொடர் கதையாய் நடை பெற்று வருகிறது.

இதுவும் கடந்து போகும்!

இதற்கு முடிவே கிடையாதா? 

நண்பர்களே!  மாறுங்கள்! மாற்றுங்கள்!

ஆம். 
இந்திய அரசியலமைப்பு சாசனம் நமக்கு சில கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது.

அந்த கடமைகளை நாம் ஒவ்வொருவரும் சிறப்புடன் செய்தால் அனைத்தும் மாறும்!

அரசுத்துறை சார்ந்த  பணிகள் எங்கு நடைபெற்றாலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளுங்கள். 

தவறு நடந்தால் சுட்டி காட்டுங்கள்!  ஊழல் பேர்வழிகளையும் லஞ்சம் வாங்கும் கயவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தாருங்கள்! 

இந்த அரசூழியர்கள் கடமை தவறி செயல்பட முக்கிய காரணம் கேடு கெட்ட  ஆட்சியாளர்களே!

நேர்மையான நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்காத வரையில் இந்த லஞ்ச அதிகாரிகளும் அவர்களது கைப்பாவைகளாய் தான் செயல் படுவார்கள்! 

சிந்தியுங்கள்! செயல் படுங்கள்! 

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! 

நல்ல நேர்மையான சமுதாயம் மலர நாமும் துணை நிற்போம்!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!
ஊழலுக்கு விடை கொடுப்போம்!

சட்ட விழிப்பறிவுணர்வு பணியில்.,...

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி : 98655 90723

உண்மை சம்பவங்கள் தொடரும் ...!!

Monday 4 September 2017

பான்கார்டு பற்றிய தகவல்!

பான் கார்டு பற்றிய தகவல்கள்!

★பான் கார்டில் உள்ள எண்கள் மற்றும் எழுத்துகள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும்.

★உதாரணத்திற்கு பான் கார்ட் எண் ACHPL4565B என்று
வைத்துக்கொள்வோம்.

★இதில் முதல் மூன்று எழுத்துக்கள் வரிசைப் பதிவு ஆகும்.

★நான்காவது எழுத்து என்பது தனிப்பட்ட நபரையோ, ஒரு நிறுவனத்தையோ அல்லது கீழே கொடுக்கப்பட்ட துறைகளில் ஒன்றையோ குறிக்கும்.

C – Company (நிறுவனம்)
P – Person (தனி நபர்)
H – Hindu Undivided Family (இந்து கூட்டுக்குடும்பம்)
F – Firm (தொழில்)
A – Association of Persons (கூட்டிணைவு/கூட்டாளிகள்)
T – Trust (அறக்கட்டளை)
L – Local authority (உள்ளூர் அதிகாரத்துறை)
J – Juridical Person (நீதித்துறையை சேர்ந்தவர்கள்)
G – Government Personnel (அரசு பணியாளர்கள்/அதிகாரிகள்)

★ஐந்தாவது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவருடைய பெயரின் முதல் எழுத்தாக இருக்கும். உங்கள் பெயர் அருண்(ARUN) என்றால் ஐந்தாவது எழுத்து A என்று வரும்.

★அடுத்து வரும் எண்கள் வரிசை எண்கள் ஆகும். இவை 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையதே.

★எனவே உங்கள் பான் கார்டில் நான்காவது மற்றும் ஐந்தாவது எழுத்துக்கள்தான் முக்கியமானவை. இந்த எழுத்துக்களை உங்களால் எளிதாக சரிபார்க்க முடியும். இந்த பின் நம்பர் சரியாக இருந்தாலே உங்களது பான் கார்ட் உண்மையானது.

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண கொள்ளையை கண்டித்து சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம்.

http://www.dailythanthi.com/News/Districts/2017/07/31014619/Private-schoolsCondemned-more-charges--On-behalf-of.vpf

நீதிமன்ற நடைமுறைகள் சுருக்கமாக குறிப்புகள்!

# நீதிமன்ற மிக முக்கிய நடைமுறைகள் :
*******************************************
ADP :- Assistant Director of Prosecution.
APP :- Assistant Public Prosecutor.
CC No :- Calendar Case. Number.
CJM :- Chief Judicial Magistrate.
DDP :- Deputy Director of Prosecution.
DJ :- District Judge.
DW :- Defense Witness.
FTC :- Fast Track Court.
JM :- Judicial Magistrate.
MC :- Magisterial Clerk.
NBW :- Non Bailable Warrant.
PP :- Public Prosecutor.
PRC No. :- Preliminary Registration Case Number.
PT :- Pending Trial.
PT Warrant :- Prisoner Transfer Warrant.
PW :- Prosecution Witness.
SC No. :- Sessions Case Number.
STC No :- Summary Trial Case Number.
PENDING TRIAL CASE ( PT ) CASE
---------------------------------------
★STAGE OF CASE
--------------------------------
1.Taken on file
2. Apperence of accused
3. For copies
4. For charge frame
5. For trial Examination of pw1 to io
6. 313 Crpc Questioning
7. Arguments on both side
8. Judgement

★TAKEN ON FILE
----------------------------
1. CC- Calender case
2. STC- Summery trial case
3. PRC- Priliminary register case
4. SC- Sessions case
5. JC- Journial case

★ACCQUTAL CASE IN SECTION
-----------------------------------
255 Crpc In STC case
248 Crpc In CC case
235 Crpc In SC case

★IMPORTANT Crpc SECTIONS IN TRIAL COURT
---------------------------------
317 Crpc - Petition filied for absence of accused
207 Crpc - For copies
311 Crpc - To recall witness at any stage after trial
91 Crpc - To produce documents
205 Crpc - Apperence dispence of accused
239 Crpc - Discharge of accused
257 Crpc - withdrawal of complaint
301 Crpc - To assisting the prosecution
302 Crpc - Private prosecution
156(3) Crpc - Direction to register a case
173(5)(8) Crpc - Additional documents to be filed after filing a charge sheet
167(2) Crpc Bail in mandatory provision in Sessions case -90days Below 3 years punishment cases - 60
days
437 Crpc Lower court bail
438 Crpc sessions bail / Anticipatory bail
439 Crpc High court bail

★Txerms used in Investigation and Police Records :-

AR Copy :- Accident Register Copy.
CD :- Case Diary.
Cr.No. :- Crime Number.
FIR :- First Information Report.
FP :- Finger Print.
FR :- Final Report.
IO :- Investigation Officer.
IP :- In Patient.
LCD :- Last Case Diary.
MO :- Modus Offender.
MO :- Medical Officer.
PM :- Post Mortem.
PMC :- Post Mortem Certificate.
PNR :- Prisoner Nominal Roll.(Prison Record ).
RCS :- Referred Charge Sheet.
r/w :- Read with.
Sec. :- Section.
SOC :- Scene of Crime.
UI :- Under Investigation.
u/s :- Under Section.
WC :- Wound Certificate.
AD :- Action Dropped.
UN :- Undetected.
MF :- Mistake of Fact.
ML :- Mistake of Law.
CSR :- Community Service Register.
GCR :- Grave Crime Report or General Conviction Register.
GD :- General. Diary.
LLI :- Loose Leaf Index.
OP :- Out Post / Out Patient.
PSR :- Prisoners Search Register.
SHO :- Station House Officer.
SHR :- Station House Report.
BC :- Bad Character.
DC :- Dossier Criminal.
HO :- Habitual Offender.
HS :- History Sheet.
KD :- Known Depredator.
LFO :- Local First Offender.
LKD :- Local Known Depredator.
NLFO :- Non Local First Offender.
NLKD :- Non Local Known Depredator.
L & O :- Law and Order.
OD :- Other Duty.
PSO :- Police Standing Order / Personnel Security Officer.
ID :- Illicit Distillation.
IMFL :- Indian Made Foreign Liquor.
IMFS :- Indian Made Foreign Sprit.
GSE :- Good Service Entry.
MSE :- Meritorious Service Entry.
............................................................

Case  Type         Description

DC           Special Leave Petition (Civil)                   
SR            Special Leave Petition (Criminal)                
WC           Writ Petition (Civil)                            
WR           Writ Petition(Criminal)                          
AC           Appeal Civil                                     
AR          Appeal Criminal                                  
TC            Transfer Petition (Civil)                        
TR            Transfer Petition (Criminal)                     
RC            Review Petition (Civil)                          
RR           Review Petition (Criminal)                       
OC           Original Suit                                    
NC           Transfer Case (Civil)                             
NR           Transfer Case (Criminal)                         
BC            Writ Petition (Civil)...                         
BR            Writ Petition (Criminal)...                      
PC            SLP (Civil) CC No.            
PR           SLP (Criminal) CRLMP No.          
MC          Motion Case(Civil)                               
MR           Motion Case(Crl.)                                
CC            Contempt Petition (Civil)                        
CR           Contempt Petition (Criminal)                     
XC           Tax Reference Case                               
LC            Special Reference Case                           
EC            Election Petition (Civil)                        
QC           Curative Petition(Civil)
QR           Curative Petition(Criminal)                   
FC           Arbitration Petition 
RA           REF. U/A 317(1) 
DR           Death Ref. Case(Criminal) 
DCD       Special Leave Petition (Civil) D. No.[D=Diary]                                  
SRD        Special Leave Petition (Criminal)  D. No.                     
WCD        Writ Petition (Civil)   D. No.                                
WRD        Writ Petition(Criminal) D. No.                                
ACD        Appeal Civil   D. No.                                         
ARD        Appeal Criminal    D. No.                                     
TCD         Transfer Petition (Civil) D. No.                              
TRD         Transfer Petition (Criminal)    D. No.                        
RCD         Review Petition (Civil)       D. No.                          
RRD         Review Petition (Criminal)  D. No.                           
OCD        Original Suit   D. No.                                        
NCD        Transfer Case (Civil)   D. No.                  
NRD        Transfer Case (Criminal) D. No.                               
BCD         Writ Petition (Civil)...     D. No.                           
BRD         Writ Petition (Criminal)... D. No.                            
PCD         SLP (Civil) CC No.   D. No.                
PRD         SLP (Criminal) CRLMP D. No.      
MCD        Motion Case(Civil)   D. No.                                   
MRD        Motion Case(Crl.)     D. No.                                  
CCD        Contempt Petition (Civil)  D. No.                             
CRD        Contempt Petition (Criminal)   D. No.                         
XCD        Tax Reference Case      D. No.                                
LCD         Special Reference Case  D. No.                                
ECD         Election Petition (Civil)  D. No.                             
QCD        Curative Petition(Civil) D. No.      
QRD        Curative Petition(Criminal)  D. No.                        
FCD         Arbitration Petition  D. No.      
RAD        REF. U/A 317(1)  D. No.                                       
DRD       Death Ref. Case(Criminal)    D. No.
★★★★★★★★★★★★★★★★★★★★★
Nanjil K.KRISHNAN
Founder
LEGAL AWARENESS AND ANTI CORRUPTION ORGANIZATION
363, GANDHI ROAD,
PERIYAR COLONY,
TIRUPUR -641 652
Cell :98655 90723
E-mail :nanjillaacot@gmail.com