Sunday 7 April 2019

RTI 19(1) காவல்துறை முதல் மேல் முறையீடு

மனுதாரர் :
N. செந்தில் குமார்
த/பெ நடராஜன்
18/421 MKP லே-அவுட்
சேயூர் ரோடு, சூளை
அவிநாசி -641 654
திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :
மேல்முறையீட்டு அலுவலர் அவர்கள்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005
மாநகர காவல் ஆணையர் அலுவலகம்
அம்மன் கல்யாண மண்டபம் அருகில்
சிறுபூலுவப்பட்டி ரோடு
திருப்பூர் -641 602

அய்யா,

பொருள் : தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 சட்டப் பிரிவு 19 (1)  இன் கீழ் 
முதல் மேல் முறையீடு,

பார்வை ; தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் சில தகவல்களை வழங்கக்கோரி தங்கள் அலுவலக
பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பிய மனு நாள் ;30.03.2019

தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம் -2003 க்கு எதிராக என்னிடம் கூடுதல் வட்டி வசூலித்ததுடன் மேலும் கூடுதல் வட்டி கேட்டு எனது இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்றது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை பெற்று விசாரணை செய்யாத காரணத்தினால் குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவு 154(3) இன் கீழ் புகார் கடிதத்தினை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.

இந்நிலையில் நான் குற்றம் சாட்டப்பட்ட இந்து முன்னனியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரினை திரும்ப பெற வேண்டும். 

சங்கர் கணேஷ் மீது கையை நீட்டினாலே கையை வெட்டுவேன் . போலீசை பற்றி பயப்பட மாட்டேன். .

உன்னை தூக்குவதற்கு ரொம்ப நேரம் ஆகாது .கொலை செய்து விடுவதாக மற்றொரு இந்து முன்னனியை சேர்ந்த நித்யானந்தம் என்பவர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வருகிறார்.

மாநகர காவல் ஆணையர்  அவர்களுக்கு அனுப்பிய புகாரின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் விபரங்கள்  எனது உயிர், வாழ்வாதாரம் ,சுதந்திரம் சம்பந்தப்பட்ட தகவல் உரிமை ஆகிய காரணத்தினால்  பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு7(1)   இன் கீழ் 48 மணி
நேரத்திற்குள்  சில தகவல்கள் வழங்க கோரி இருந்தேன்.

ஆனால் தங்கள் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் நான் கோரிய தகவல்களை வழங்காமல் எனது விண்ணப்பத்தினை நிராகரித்து  விட்டதாக தெரிய வருகிறது.

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் எனது புகாரின் மீது
நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு குற்ற குற்ற விசாரணை முறை சட்டப்பிரிவு 154 (3)  கீழ் புகார் அனுப்பும் நிலை ஏற்பட்டது.

எனது புகாரின் மீது இன்றைய தினம் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கும்  சொல்லொணா துயரத்திற்கும் ஆளாகியுள்ளேன் .

எதிரிகள் தற்பொழுது புகாரினை திரும்பப் பெறவில்லை எனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர் .

எனவே எனது புகார் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விவரங்களை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல் கோரியிருந்தேன் .

கடமை தவறிய தங்கள் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் அவர்களும் தகவல் அளிக்கவில்லை .

எனவே மேல்முறையீட்டு அலுவலர்  ஆகிய தாங்கள் பார்வையில் கோரியுள்ள தகவல்களை குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் தகவல் வழங்க பொதுத் தகவல் அலுவலர் அவர்களுக்கு உத்தரவிடக்கோருகிறேன்.

தாங்களும் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் தகவல் வழங்காமல் எனது மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டாலோ  அல்லது குறைபாடான தகவல் வழங்கப்பட்டாலோ  நீதி வேண்டி மாநில தகவல் ஆணையர் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 19(3) இன் கீழ் இரண்டாவது மேல்முறையீடு செய்வதைத் தவிர பாதிக்கப்பட்ட எனக்கு வேறு வழி இல்லை என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

மேல்முறையீட்டாளர் வாதம் ;
தகவல் வழங்கப்படவில்லை

மேல்முறையீட்டாளர்  வேண்டுகோள் :
மத்திய / மாநில தகவல் ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்புகள் ஆவணங்களின் அடிப்படையில் நிவாரணம் கோருகிறேன்.

இணைப்பு பக்கங்கள் :03

நாள் : 08..04.2019
இடம் : சேயூர்

மேல் முறையீட்டாளர்

N.செந்தில் குமார்

No comments:

Post a Comment