Tuesday 7 May 2019

HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு !

முக்கிய அறிவிப்பு !
LAACO/2019

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓர் ஆண்டு பயிற்சியுடன்  H C L நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு !

கல்விக்கட்டணம் செலுத்த தேவை இல்லை !

மாதம் ₹10,000 ரூபாய் பயிற்சி  உதவி தொகை வழங்கப்படும் .

பயிற்சி கட்டணமாக வங்கி கடன் ₹ 2,00000 வழங்கப்படும்.

பயிற்சி முடிந்த பின்னர் ஆண்டுக்கு ₹2,00000 முதல் ₹2,80,000 வரை ஊதியம் வழங்கப்படும் .

பணியில் இருந்து கொண்டே பட்டப்படிப்புகள் படிக்கலாம் .

தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு !

அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பில் 2018 -2019 ஆம் ஆண்டு கல்வி பயின்று  பொதுத் தேர்வில் கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் 60 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று 60 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தினை பயின்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

மேலும் 84380 02947 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

chennai.hcl@hcl.com என்ற மின்னஞ்சலிலும் சுய விவரக் குறிப்பை அனுப்பி கலந்து கொள்ளலாம்.

அதுமட்டுமன்றி 84483 86390, 84483 86392 என்ற எண்களில் மிஸ்ட் கால் அளித்தால் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் தெரிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹெச்.சி.எல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறியதாவது, "பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் ஏதாவது ஒன்றினை எடுத்து 60 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஒரு வருடப் பயிற்சிக்கு பின்னர் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

பயிற்சி முடித்த பின்னர் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ஐடி இன்ஜினியரிங் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள்.

அவர்களுக்கு ஆண்டிற்கு 2 லட்சம் முதல் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும்.

மாணவர்களுக்குப் பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

மாணவர்கள் மூன்றாண்டு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் போதே சாஸ்த்ரா பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி ஆகிய கல்வி நிறுவனங்களில் பிசிஏ, பி.எஸ்சி(ஐடி), எம்எஸ்சி போன்ற படிப்புகளையும் பயில முடியும்.

மாணவர்கள் முதலாமாண்டு பயிற்சியில் சேரும்போது, எந்தவிதமான கல்விக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

இந்தப் பயிற்சிக்கான கல்விக் கட்டணமான ரூ.2 லட்சம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்துத் தரப்படும்.

மாணவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் ஐந்து ஆண்டிற்குள் இந்த கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது.

பணிபுரியும் போதே பட்டப் படிப்பினை முடித்து விடுவதால் பட்டம் பெறவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஆண்டு அனுபவத்திற்குப் பின்னர் நீங்கள் என்ன பட்டம் பெற்றீர்கள் என்பதை யாரும் பார்க்க மாட்டார்கள்.

உங்களின் பணி அனுபவம் மற்றும் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தீர்கள் என்பது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றார். 

பத்திரிக்கை செய்தி .
28.04.2019

கல்வி விழிப்புணர்வு பணியில்...
நாஞ்சில் கோ. கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
3 63,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலா பேசி :98 655 90723

No comments:

Post a Comment