#தகவல் #அறியும் #உரிமைச்சட்டத்திற்கு #
#கட்டுபடாத #அனைத்து #அரசியல் #கட்சி #தலைவர்களின் #மீது #பகிரங்க #குற்றச்சாட்டு! "
நீங்கள் ஏன் தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பிற்குள் வர மறுக்கிறீர்கள்?
மக்களிடம் கையேந்தி வீடு வீடாக சென்று எனக்கு வாக்களியுங்கள் என யாசிப்பது எதனால்?
மக்களிடம் இருந்து நன்கொடையாக கட்சி நிதி என்று பல்லாயிரம் கோடிகளை வசூலிப்பது யாருக்காக?
அயல் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம் யாருடையது?
அனைத்து வசதிகளுடன் சுக போக உல்லாச வாழ்க்கை வாழ்வது யாருக்காக?
அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்வது யாருக்காக?
இதுவரை நீங்கள் ஊழலே செய்ய வில்லை என உங்களால் சொல்ல முடியுமா?
ஒரே ஒரு நாள் மட்டும் சாதாரண ஏழை மக்கள் வாழும் வாழ்க்கையினை உங்களால் வாழ முடியுமா?
ஏழையாக இருந்து தான் கட்சி ஆரம்பித்தேன்! ஆனால் இன்றும் ஏழையாகத் தான் இருக்கிறேன் என உங்களால் சொல்ல முடியுமா?
அசியலமைப்பு சாசன கோட்பாடு 47 க்கு எதிராக அரசின் கொள்கை முடிவு என மது பானம் தயாரித்து விற்பனை செய்கிறீர்களே இது யாருக்காக?
அரசின் அனைத்து துறைகளிலும் நடை பெறும் லஞ்சத்தை ஏன் உங்களால் ஒழிக்க முடியவில்லை?
மக்களுக்காக தான் கட்சி நடத்துகிறோம் என பாசாங்கு செய்து மக்களை முட்டாளாக்குவது எதனால்?
நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் வாக்குக்கு பணம் கொடுப்பது எதனால்?
நீங்கள் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் உங்கள் கட்சியினர் ஈடுபட்டதில்லை என உங்களால் சொல்ல முடியுமா?
நீங்கள் இதுவரையிலும் செய்த ஊழல்களை உங்களால் பட்டியலிட முடியுமா?
உங்களை நம்பி பல தொண்டர்கள் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்ற ஆணவமா?
மக்களுக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?
அனைத்தும் உங்களுக்காக தான்!
பொது மக்களிடம் வசூல் செய்யும் நிதி
மற்றும் கட்சி வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் தெரிந்து விட கூடாது என்ற காரணத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் வர பயப்படுகிறீர்கள்!
எனவே அதனை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சேர்ந்து எதிர்க்கிறீர்கள்?
வெளிப்படை தன்மை இல்லாத உங்களிடம் இருந்து பொது மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை!
நான் கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள்?
மக்களை எப்போதும் முட்டாளாக. நினைக்க வேண்டாம்!
என.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
No comments:
Post a Comment