வக்கீல்கள் நீதிபதிகள் குறித்து வழக்கறிஞரான மகாத்மா காந்தி அவர்களின் கருத்து :
வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது .
வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை .
பணக்காரர் ஆவதற்கான தொழில்களில் வக்கீல் தொழிலும் ஒன்று .
மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன் .
இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள்.
வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை .
இவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள்.
இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் என்னும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர் .
இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன .
கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்ட பிறகே வக்கீல்கள் மனிதத் தன்மையில் குறைந்தவர்களாகவும் கோழைகளாகவும் மாறினார்.
மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு !
தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்வதாக இருந்தால் அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்தவித ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது .
மேலும் ,எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் .
எனவே அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிடப் போவதில்லை என்பது நிச்சயம் .
முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர் .
அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன. என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறகு இத்தொழிலை குறித்து எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்
வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை இங்கே பலப்படுத்தி இருப்பதே ஆகும் .
விபச்சாரத்தை போல
இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும் .
வக்கீல்களைப் பற்றி நான் கூறியன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் .
நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்
வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள் .
ஒவ்வொருக்கு ஒருவர் பக்க பலமாக இருப்பார்கள் .
இவைகள் முற்றிலும் உண்மை. இதற்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்காகும்.
ஆதாரம் : மகாத்மா காந்தி தனது நாற்பதாவது வயதில் எழுதிய "இந்திய சுயராஜ்யம்" என்ற நூலில் 11 -ஆவது கட்டுரை
தமிழ் வெளியீடு
காந்திய இலக்கியச் சங்கம்
மதுரை - 62 50 20
நன்றி
நீதியைத்தேடி ......
சட்ட அறிவுக்களஞ்சியம்
ஆசிரியர் ; சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள்.
வெளியீடு; கேர் சோசைட்டி ,ஓசூர்.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641652
உலா பேசி :98655 90723
No comments:
Post a Comment