Sunday 12 May 2019

நீதிபதிகள் வக்கீல்கள் குறித்து மகாத்மாவின் கருத்து!

வக்கீல்கள் நீதிபதிகள் குறித்து வழக்கறிஞரான மகாத்மா காந்தி அவர்களின் கருத்து :

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டை போதிக்கிறது .

வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை .

பணக்காரர் ஆவதற்கான தொழில்களில் வக்கீல் தொழிலும் ஒன்று .

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன் .

இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை .

இவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள்.

இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் என்னும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர் .

இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன .

கோர்ட்டுகளுக்கு போக தலைப்பட்ட பிறகே வக்கீல்கள் மனிதத் தன்மையில் குறைந்தவர்களாகவும்  கோழைகளாகவும் மாறினார்.

மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு !

தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்வதாக இருந்தால் அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்தவித ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது .

மேலும் ,எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் .

எனவே அதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிடப் போவதில்லை என்பது நிச்சயம் .

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர் .

அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன. என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறகு இத்தொழிலை குறித்து எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் பெரிய  தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை இங்கே பலப்படுத்தி இருப்பதே ஆகும் .

விபச்சாரத்தை போல
இத்தொழிலும் இழிவானது என்று வக்கீல்கள் கருதி விட்டால் ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும் .

வக்கீல்களைப் பற்றி நான் கூறியன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் .

நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்

வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள் .

ஒவ்வொருக்கு ஒருவர் பக்க பலமாக இருப்பார்கள் .

இவைகள் முற்றிலும் உண்மை. இதற்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்காகும்.

ஆதாரம் : மகாத்மா காந்தி தனது நாற்பதாவது வயதில் எழுதிய "இந்திய சுயராஜ்யம்" என்ற நூலில் 11 -ஆவது கட்டுரை
தமிழ் வெளியீடு
காந்திய இலக்கியச் சங்கம்
மதுரை - 62 50 20

நன்றி
நீதியைத்தேடி ......
சட்ட அறிவுக்களஞ்சியம்
ஆசிரியர் ; சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள்.
வெளியீடு; கேர் சோசைட்டி ,ஓசூர்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு  அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641652
உலா பேசி  :98655 90723

No comments:

Post a Comment