அரசூழியர்கள் ஒரு குறிப்பிட்ட சொத்தை விலைக்கு வாங்கவோ ஏலம் கேட்கவும் கூடாது
இந்திய தண்டனைச் சட்டம்-1860 சட்டப்பிரிவு: 169
ஒரு பொது ஊழியர் அரசு ஊழியர் என்ற நிலையிலும் குறிப்பிட்ட ஒரு சொத்தை வாங்க கூடாது .
ஏலம் கேட்க கூடாது என்ற நியதி இருக்கிறது
அந்த நியதியை மீறி ஒரு பொது ஊழியர் அப்படிப்பட்ட சொத்தை தன் பேரிலாவது தனியாகவோ கூட்டாகவோ வாங்குவதும் ஏலம் கேட்பதும் குற்றமாகும் .
அந்த பொது ஊழியருக்கு அத்தகைய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இதில் சம்பந்தப்பட்ட சொத்தை அவர் விலைக்கு வாங்கி இருந்தால் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும்.
No comments:
Post a Comment