Friday 10 May 2019

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 169 என்ன சொல்கிறது ?

அரசூழியர்கள் ஒரு குறிப்பிட்ட சொத்தை விலைக்கு வாங்கவோ  ஏலம் கேட்கவும் கூடாது

இந்திய தண்டனைச் சட்டம்-1860 சட்டப்பிரிவு:  169

ஒரு பொது ஊழியர் அரசு ஊழியர் என்ற நிலையிலும் குறிப்பிட்ட ஒரு சொத்தை வாங்க கூடாது .
ஏலம் கேட்க கூடாது என்ற நியதி இருக்கிறது

அந்த நியதியை மீறி ஒரு பொது ஊழியர் அப்படிப்பட்ட சொத்தை தன் பேரிலாவது தனியாகவோ கூட்டாகவோ வாங்குவதும் ஏலம் கேட்பதும்  குற்றமாகும் .

அந்த பொது ஊழியருக்கு அத்தகைய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதில் சம்பந்தப்பட்ட சொத்தை அவர் விலைக்கு  வாங்கி இருந்தால் அந்த சொத்தும் பறிமுதல் செய்யப்படும்.

No comments:

Post a Comment