Sunday 27 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி ;0042 ஜாக்டோ ஜியோ போராட்டம்


ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO :0042/2019 ;நாள் : 05.02.2019

குற்றம் நடைபெற்றது என்ன?

ஆசிரியர்கள் அரசூழியர்கள் இணைந்து  போராட்டம் !

உண்மை சம்பவங்கள்!

தமிழக அரசு அறிவிப்பு!!

எச்சரிக்கை!!

ஜாக்டோ ஜியோ வினர் கோரிக்கை முழுவதினையும்  செயல் படுத்த இயலாது!

தமிழக அரசிடம் அதற்கான நிதி ஆதாரம்  இல்லை!

தமிழக அரசின் மொத்த வருவாயில் 71% நிதியினை அரசூழியர்களுக்கு ஊதியமாக வழங்குகிறோம்.

மீதம் உள்ள 29 % நிதியுடன் கடன் பெற்று தான் ஒட்டு மொத்த மக்கள் நல திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம்.

போராட்டத்தினை கைவிட்டு விட்டு  உடனடியாக பணிக்கு திரும்ப அரசின் சார்பாக வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் கோரிக்கையினை நிராகரித்து தொடர்ந்து போராடி வந்தார்கள் .

சட்ட விரோதமாக செயல் பட்ட சுமார் 1200  க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி இடை நீக்கம்.

இந்நிலையில் இறுதியாக அரசு ஒரு நாள் கெடு விதித்தது .பணிக்கு வராத ஆசிரியர்கள் பணி நீக்கம் என எச்சரிக்கை!

மாதம் ₹ 10000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!

பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள்
குவிந்தன.

பீதியில் ஜாக்டோ ஜியோ!

ஒன்பது நாள் போராட்டம் நிறைவேறாமல் தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்ததாக ஜாக்டோ ஜியோ திடீர் அறிவிப்பு.

போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டு  பணிக்கு செல்வதாகவும் அறிவிப்பு!

இவர்கள் மீது காவல் துறையில் உள்ள வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற வேண்டுமாம்!

பணி புரிந்த அதே  இடத்தில் மீண்டும் அனைவருக்கும் பணி வழங்க வேண்டுமாம்!

அடங்கொய்யால ........!!

ஒன்பது நாள் போராட்டம்!

எத்தனை எத்தனை பாதிப்புகள்!

300 இடங்களில் ஒரே நாளில் சாலை மறியல்!

போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பொது இடையூறு!

பொது தேர்வு நெருங்க இருக்கும் நிலையில்
பல அரசு பள்ளிகளுக்கு பூட்டு!

நாடு முழுவதும் பள்ளி வாசலில் காத்து
கிடந்த மாணவர்கள்!

ஒன்பது தினங்கள் மாணவர்களுக்கு
பாதுகாப்பில்லை!

மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிப்பு!

தினசரி போராட்டம்!
காவல் துறையினருக்கு சொல்லொணா துயரம்!

இவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில்  அடைக்க காவல் துறை வாகனங்கள்  மற்றும் அரசு பேருந்துகள்!

குடிநீர் சாப்பாடு செலவுகள்!
வாகன. டீசல் செலவுகள்

அரசு பணிகள் நடை பெற வில்லை!
மக்கள் பணிகள் நடைபெற வில்லை!
மாணவர்களுக்கு கல்வி இல்லை!
பொது இடையூறு!

யார் இந்த ஜாக்டோ ஜியோ!

இது என்னமோ வாயில் நுழையாத புரியாத மொழியாக இருக்கிறதே ?

இல்லை!

JACTO-GEO
ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி ஆப் டீச்சர்ஸ் ஆர்கனிசேசன்  Vs கவர்ண்மென்ட்  எம்ப்ளாயீஸ் ஆர்கனிசேசன்

அரசு ஊழியர் சங்கம் அரசு ஆசிரியர்களையும் இணைத்து ஜாக்டோ ஜியோ என சங்கம் அமைத்துள்ளனர் . 

ஒட்டு மொத்த  அரசூழியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி  அரசை எதிர்த்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  அரசுக்கு நெருக்கடி கொடுத்து எப்படியாவது தங்கள் கோரிக்கைகள் நிறைவேறி காட்ட வேண்டும் என போராடி வருகிறார்கள்.

அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு படி தங்களது கோரிக்கைகளுக்காக அறவழியில்  போராட உரிமை உண்டு!

ஆனால் பொது மக்களுக்கு பொது இடையூறு ஏற்படுத்தியும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் சட்ட விரோதமாக போராட அரசூழியர்களுக்கு உரிமை இல்லை.

இரண்டு சதவீதம் அரசூழியர்களுக்கு அரசின் மொத்த வருவாயில் 71 %  சதவீதம் ஊதியம் மற்றும் சலுகைகளாம்.

அரசால் வழங்க இயலாத சலுகைகளை கட்டாயம் வழங்க  கேட்டு அரசுக்கும் பொது மக்களுக்கும் பொது இடையூறு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஜாக்டோ ஜியோ சுய நல அமைப்பினர் பொது மக்கள் நலனில் அக்கறை கொள்ள மாட்டார்கள்.

மக்கள் விரோதமாகவும் சட்ட விரோதமாகவும் செயல் படும் இவர்கள் அரசு பணிக்கும் மக்கள் பணிக்கும் கொஞ்சமும்  தகுதியற்றவர்களே!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசியல் கட்சிகளின் சிபாரிசு படியும் லஞ்சம் கொடுத்தும் குறுக்கு வழியில் அரசு பணிக்கு வந்தவர்களே!

இவர்களில் பலர் லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும் சொத்துக்கள் பல குவித்து மாட மாளிகைகளுடன் வாழ்கின்றனர்.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும் அரசு அலுவலக நடைமுறை விதிகளையும் அரசூழியர்கள் நடத்தை விதிகளையும் அரசாணைகளையும் மதிக்காமல் அரசுக்கு எதிராக செயல் படும் இவர்கள் தேச துரோகிகளே!

அரசியல் கட்சிகளின் முகமூடியுடன் போராடும் இவர்களை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர்கள்.

மாதா
பிதா
குரு
தெய்வம்
என குருவுக்கு மூன்றாம் இடம்.

இந்த குரு ஸ்தானத்தில் இருந்து மாணவர்களுக்கு நல்வழி காட்டும்  ஆசிரியர்கள் சாலைகளில் இறங்கி மறியல் செய்து போராடி வருகிறார்கள்.

இவர்கள் எப்படி சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்?

அரசு பள்ளிகளின் கல்வி தரத்தினை பார்த்தாலே புரியும் இவர்களின் கல்வி சேவையை.

இவர்களது குழந்தைகள் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளுடன்  பாதுகாப்பான முறையில் நல்ல தரமான கல்வி பயின்று வருகிறார்கள்.

அனைத்து அரசுத்துறைதளிலும் லஞ்சம் கொடுத்தால் தான் மக்கள் கோரிக்கை நிறை வேற்றப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலக  கிராம உதவியாளர் முதல் தலைமை செயலக உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பெறுகின்றனர்.

எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இவர்கள் அவர்களுக்கு சாதகமாக தங்களை மாற்றி கொள்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டங்களில் வரும் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை பார்த்தாலே தெரியும் இவர்கள் மக்கள் விரோதமானவர்கள் என்று.

நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பார்த்தாலே தெரியும் இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்று.

வாழ்நாள் முழுவதும் அரசின் ஊதியங்களையும் ஓய்வூதியங்களையும் சலுகைகளையும் பெற்று கொண்டு மக்கள் விரோதமாக செயல் படும் இவர்கள் மக்கள் விரோதிகளே!

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்!
வருவாய் துறையினர் போராட்டம்!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டம்!
வங்கி ஊழியர்கள் போராட்டம்!
தொலை தொடர்பு துறையினர் போராட்டம்!
அஞ்சலக ஊழியர்கள் போராட்டம்!
செவிலியர்கள் போராட்டம்!
அரசு மருத்துவர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்

இப்படி அரசின் ஒவ்வொரு துறைகளை சார்ந்த ஊழியர்களும்  தங்களது கடுமையான போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கையினை ஒவ்வொருவரும் போராடி பெற்று விட்டால் இனி நாடு முழுவதும் போராட்டங்களுக்கு பஞ்சமிருக்காது.

அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தான் இவர்களின் பின்னால் இருந்து போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் .

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசூழியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக ஸ்டாலின் பேச்சு!

எங்கிருந்து அள்ளி வழங்குவார்

இது போன்ற கேடு கெட்ட அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும்
அடையாளம் காணுங்கள்

ஒட்டு மொத்த மக்களும்  தங்களது கோரிக்கைகளுக்காக போராட்ட களத்தில் இறங்கி விட்டால் என்ன ஆவது?

அரசின் உத்தரவினை மதிக்காத அரசு ஊழியர்கள் இனி நமக்கு தேவை இல்லை!

தூக்கி எறியுங்கள்.

தற்காலிக வேலை நிறுத்தம் என்பது  ஏமாற்று வேலை!

ஒன்பது அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி போராடி விட்டு ஊதிய உயர்வு கேட்டு போராடவில்லையாம்!

பிடித்தம் செய்த ஓய்வூதிய பணம் எங்கே எனக்கேட்டு தான் போராடினார்களாம்.

எங்கே இருக்கும் என தெரியாமலா போராடினார்கள்?

அரசை சிறந்த வழியில் நடத்தி செல்ல படித்து பட்டங்கள் பெற்ற பல லட்சக்கணக்கான இளைஞர்கள்  திறமையானவர்கள பொறியாளர்கள்   ் ஆசிரியர்கள் நம் தமிழகத்தில் காத்து கிடக்கின்றனர்.

ஆட்சியாளர்களே!

சிறந்த மக்கள் நல ஆட்சி வழங்குவீர்கள் என நம்பி தான் மக்கள் உங்கள் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நீங்கள் மக்கள்நல பணி செய்ய நேர்மையான திறமையான  ஊழியர்களை உடனடியாக  தேர்ந்தெடுங்கள்.

இதுவே நீங்கள் தமிழக மக்களுக்கு செய்யும் நன்றி கடன்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர் மாவட்டம்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ......!

No comments:

Post a Comment