லஞ்சம் தவிர் ! நெஞ்சம் நிமிர்!!
நீங்கள் யார் ?
தேச பற்று உள்ளவரா நீங்கள் ?
நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவரா நீங்கள் ?
நமது தேசம் வல்லரசு நாடாக , ஆக வேண்டும் என நினைப்பவரா நீங்கள் ?
சமூக ஆர்வலரா நீங்கள் ?
சட்ட ஆர்வலரா நீங்கள் ?
சமுதாய சீர்திருத்தவாதியா நீங்கள் ?
சட்ட வல்லுநரா நீங்கள் ?
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிய வேண்டும் என நினைப்பவரா நீங்கள் ?
மக்கள் நலனில் அக்கறை உள்ளவரா நீங்கள் ?
சமுதாய சீர்கேடுகளை கண்டு கொதித்து எழுபவரா நீங்கள் ?
எதேனும் அரசியல் கட்சியை சார்ந்து இருப்பவரா நீங்கள் ?
தன்னார்வ தெnண்டு நிறுவனத்தை சார்ந்த வரா நீங்கள் ?
பட்ட படிப்பு , பட்டய படிப்பு படித்தவரா நீங்கள் ?
முற்றிலும் சுயநலம் இல்லாதவரா நீங்கள் ?
மாற்றத்தை விரும்புவரா நீங்கள் ?
தன்னம்பிக்கை உடையவரா நீங்கள் ?
மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுபவரா நீங்கள் ?
லஞ்சம் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் ஆனால் அதற்கான வழிமுறைகளும் , வழிகாட்டுதல்களும் தெரிய வில்லை என கவலை படுபவரா நீங்கள் ?
அநீதிகளுக்கெதிராக சமூக வலைதளங்கள் மூலம் மட்டும் குரல் கொடுப்பவரா நீங்கள் ?
அனைத்து தரப்பு மக்களும் சாதி , மத .இன , மொழி பாகுபாடின்றி சகோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என நினைப்பவரா நீங்கள் ?
அப்படியானால் ,
நாட்டிற்காகவும் , நாட்டு மக்களுக்காகவும் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி எறிய வேண்டாம் நீங்கள் !!
எதுவுமே செய்ய வேண்டாமா ?
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ?
பின்னர் எப்படி நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவர் ?
கவலை வேண்டாம் !
உங்களுக்காக மட்டும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான் !!
ஒரே ஒரு தியாகம் செய்யுங்கள் !!
உங்களின் எந்த தேவையாக இருந்தாலும் ஒரு ரூபாய் கூட எவனுக்கும்" லஞ்சம்" கொடுக்காதீர்கள்!!
இந்த மாபெரும் மகத்தான தியாகத்தை செய்ய தயாரா நீங்கள் ?
என்ன செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?
நீங்கள் நீங்களாகவே இருங்கள் !
மாறுங்கள்! மாற்றுங்கள் !!
லஞ்சம் கொடுக்காமல் எனது தேவைகள் நிறைவேறாது என நினைப்பவரா நீங்கள் ?
சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் லஞ்சம் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?
தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள் ?
சட்ட அறிவும் வழிகாட்டுதலும் இல்லையே என கவலை படுபவரா நீங்கள் ?
எனக்கு எழுத படிக்க தெரியாது அதனால் எனது தேவைக்கு லஞ்சம் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?
நான் சட்ட படி வாழவில்லை அதனால் தான் லஞ்சம் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?
தாழ்வு மனப்பான்மையுடன் கோழையாக வாழ்பவரா நீங்கள் ?
லஞ்சம் கொடுக்கா விட்டால் உங்களது உரிமைகள் கிடைக்காது என நினப்பவரா நீங்கள் ?
எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள் அதனால் நானும் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?
லஞ்சத்தை ஒழிக்க முடியாது என நினைப்பவரா நீங்கள் ?
அரசு பணியாளர்களையும் ,அதிகாரிகளையும் கண்டு பயப்படுபவரா நீங்கள் ?
எதற்கும் எவனுக்கும் பயப்படப் தேவை இல்லை ,!!
ஏன் ? எதற்கு ? கொடுக்க வேண்டும் லஞ்சம் ?
சட்ட விழிப்பறிவுணர்வு பெற விரும்புபவர்களுக்கு நாங்கள் வழி காட்டுகிறோம் !!
வாருங்கள் நண்பர்களே !!
முதலில் உங்களில் இருந்து லஞ்சத்தை முற்றிலும் ஒழியுங்கள் !!
நாம் ஒவ்வாருவரும் லஞ்சம் கொடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டால் லஞ்சம் என்ற சொல்லே இருக்காது !!
தனி மனித மாற்றத்தினால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியம் !!
என ,
" சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
363 , காந்தி ரோடு ,
பெரியார் காலனி
திருப்பூர் _641 652
தமிழ்நாடு.
நேர்மை திமிருடன் .,,,,,,,,,,,,,,
நாஞ்சில் K. கிருஷ்ணன்
நிறுவனர் .
98655 90723
அரியலூர் R .சங்கர்
மாநில தலைவர்
98655 43303
V.சுப்பிரமணியன்
பொது செயலாளர்
98420 17989
நல்ல சமுதாயம் மலர நாமும் துணை நிற்போம்!!
இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல் !!
உரிமைக்கு குரல் கொடுப்போம் !
ஊழலுக்கு விடை கொடுப்போம் !!
No comments:
Post a Comment