Sunday 25 December 2016

காவல் துறையா? கொலைகார துறையா?

காவல் துறையா?
களவானி துறையா?
கொலைகார துறையா?

குற்ற விசாரணை முறைச்சட்டம் -1973. சட்டப்பிரிவு 36 மற்றும் 149. ன் படி  காவல்துறை  கீழ் நிலை அதிகாரிகளும்   உயர் அதிகாரிகளும்  ஒரு குற்றம் நடை பெறும் முன்னர்  அதனை தடுத்து நிறுத்த. அனைத்து விதத்திலும் முயற்சி  செய்வதை  தனது கடமையாக கொள்ள வேண்டும் என. உத்தரவிடப் பட்டுள்ளது.

இதை எவனாவது எங்கேயாவது  செய்திருக்கிறானா?

மது கடையை அகற்றக் கோரி செல் போன் கோபுரத்தில் ஏறி ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்ற துப்பில்லாத கேடு கெட்ட கடமை தவறியவர்கள் யார்?

துணை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா  மரணத்திற்கு யார் காரணம்?

காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப் படுபவர்கள்  மரணம் அடைவதற்கு  காரணம் யார்,?

சிறை சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின்  திடீர் மரணத்திற்கு காரணம் யார்?

ஒரு பாவமும் அறியாத நிரபராதிகள் மீது பொய் வழக்கு போடுவது யார்?

 தகவல் அறியும் உரிமைச்சட்டம்  மூலம்   ஆக்கிரமிப்புகளை  கண்டறிந்து  வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காரணத்தினால்  கஞ்சம் பள்ளி பிரிவில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த ராமசாமி என்பவர் மீது  கஞ்சா, சாராய வியாபாரம்  என அவிநாசி காவல் நிலையத்தில்  பொய் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியது யார்?

இவர்கள் லஞ்சம் பெற்று கொண்டு பொய் வழக்கு  போடுவதில்  கில்லாடிகள்.

நாமக்கல் வட்டாட்சியரை கண்டித்து தனி மனிதனாக உண்ணாவிரதம்  இருக்க காவல் துறையில் அனுமதி   பெற்ற  சமூக ஆர்வலர், இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் அறங்காவலர் , 74 வயது இளைஞர் நாமக்கல் செல்லப்பன் அவர்கள்  இல்லத்திற்கு அதிகாலை மூன்று மணிக்கு சென்று கிராம நிர்வாக அலுவலரை  ஜாதி பெயர் சொல்லி திட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை முயற்சி செய்ததாகவும், பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது யார்?

முக நாலில் தன் மகளை பற்றி ஆபாசமான பதிவு வந்துள்ளது என புகார் கொடுத்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அங்கும், இங்கும் அலையவிட்டு  சேலம் வினு பிரியா  என்ற  ஒரு இளம் பெண்ணின்  மரணத்திற்கு காரணம் யார்?

பல சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குகள் போட்டவர்கள் யார்?

இவர்களா!
பொது மக்களின் பாது காவலர்கள்?

இந்த கடமை தவறிய காவல் ஊழியர்களை தண்டிப்பது யார்?

இதற்கு யார் பொறுப்பு?

இது போல் பல மரணங்கள்  நடந்து கொண்டு  தான் இருக்கிறது.

ஒன்றன் பின் ஒன்றாக பல மரணங்கள்  !

அனைத்தும் கால ஓட்டத்தில் காற்றில் கரைந்து  மறைந்து  விடுகிறது .

அடுத்து ? ? ?

காவல் துறையினர் பொது மக்களின் பாது காவலர்கள் என்பதினை மறந்து காக்கிச் சட்டைக்குள்  வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என பொது மக்களுக்கு எதிரான  சட்ட விரோதமான செயல்களை செய்வது வன்மையாக கண்டிக்க தக்கது.

LAACO Nanjil. .

தனியார் பள்ளிகளின் முறைகேடுகள் -ஊழல்கள்! துணை போகும் மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்! செயல் இழந்து கிடக்கும் மெட்ரிக்பள்ளிகள் இயக்குநரகம் Vs பள்ளிக்கல்வித்துறை!!


# அதிர்ச்சி ரிப்போர்ட்!!
*************************
மெட்ரிக்பள்ளிகள் இயக்குநரகம் Vs பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் தனியார் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது.

★உத்தரவு!
*************
தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என சட்ட  விதிமுறைகளையும் பல அரசாணைகளையும், உத்தரவுகளையும்  பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது.

★அனுமதி!
*************
இந்த உத்தரவுகள் அனைத்தும் சரியாக கடை பிடிக்கும் பள்ளிகளை மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் ஆய்வு செய்வதுடன்  பள்ளிகளின் மூலம் பெறப்பட்ட உண்மை சான்றிதழ்களை  இயக்குநரகத்தில்  வழங்கி பள்ளிக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

★ஆய்வறிக்கை!
*******************
ஆண்டு தோறும் அனைத்து பள்ளிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து ஆய்வறிக்கையினை அளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.

★தீ விபத்து!
**************
இந்நிலையில் கும்பகோணத்தில்   சட்டத்திற்கு புறம்பாக செயல் பட்டு வந்த தனியார் பள்ளியில் 94 மழலை குழந்தைகள் தீயில் கருகி சாம்பலான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையையும்  ஏற்படுத்தியது.

★விசாரணை கமிஷன்!
**************************
கும்பகோணம் பள்ளி தீவிபத்து தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் அவர்களின் தலைமையிலான  கமிஷன் 2661 பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

★அதிர்ச்சி தகவல்!
*********************
இதில் கட்டிட உறுதி தன்மை இல்லாமல் 1557 பள்ளிகளும், கட்டிட உரிமம் இல்லாமல் 1670 பள்ளிகளும், தகுதியற்ற மின்சார ஒயரிங் உள்ள 1281 பள்ளிகளும், தீயணைப்பு சாதனங்கள் இல்லாமல் 2386 பள்ளிகளும்  இயங்கி வருவதாக அதிர்ச்சி தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணாக்கர் பாதுகாப்பு நலன்களை இந்த பள்ளிகள்  கடைபிடிக்க வில்லை என நிரூபணம் ஆகி உள்ளது.

முறை கேடாக இயங்கும் பள்ளிகளின் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

★மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்!
*******************************
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் செயல் படும் 12000 க்கும் மேற்பட்ட  பள்ளிகளுக்கும் 15 மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களே உள்ளனர்.

இவர்களால் ஒரு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய இயலாது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் .

★சான்றிதழ்கள்!
********************
சுகாதாரச்சான்று,  தீ தடுப்பு தடையின்மைச்சான்று, கட்டிட உறுதிச்சான்று, என அனைத்து சான்றிதழ்களையும் லஞ்சம் கொடுத்து வாங்கி பள்ளி நிர்வாகிகள் மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களிடம் வழங்கி பள்ளி உரிமத்தினை தொடர்ந்து புதுப்பித்து கொள்கின்றனர்.

மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களும் பள்ளியை முழுமையாக ஆய்வு செய்யாமல் நற்சான்றிதழ் வழங்குகின்றனர்.

இந்த கடமை தவறிய அதிகாரிகளினால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு யார் பொறுப்பு?

★அரசுடமை!
***************
சட்டத்திற்கு புறம்பாக செயல் படும் பள்ளிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும்.

★இலவச கட்டாய கல்வி
உரிமைச்சட்டம் -2009

★தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம்  முறைப்படுத்துதல் சட்டம் -2009

★கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டம் -1992

95 சதவீதம்  பெற்றோர்களுக்கு  இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்  பற்றியும்,

தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டண நிர்ணய குழு நிர்ணயித்துள்ள அரசு கல்விக்கட்டணம் குறித்தும் எதுவும் தெரியாதாம்!

அய்யகோ! 

★இதற்கு காரணம் யார் ?
****************************
அமலில் உள்ள சட்டங்களையும், அரசாணைகளையும்  மதிக்காத கல்வியை வியாபார மாக்கிய தனியார் பள்ளி நிர்வாகிகள் தான்.

★கடமை தவறிய அதிகாரிகள்!
**********************************
இதனை கண்காணிக்க வேண்டிய மெட்ரிக் பள்ளிகள்  ஆய்வாளர்களும், முதன்மைக்கல்வி  அதிகாரிகளும்  தான்  பொறுப்பேற்க வேண்டும்.

★தகவல் பலகை!
*******************
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஆண்டு தோறும்  25 சதவீதம்  ஏழை எளிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்கப்படும் விபரங்களை பள்ளிகளில் தகவல் பலகை வைக்க வேண்டும்.

அது போல்  அரசு நிர்ணயம் செய்துள்ள LKG முதல் பன்னிரண்டாம் வகுப்புக்கான கல்விக்கட்டண விபரங்களை பெற்றோர்கள் பார்வைக்கு தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும்!

எந்த பள்ளி நிர்வாகியாவது வைத்திருக்கிறானா?

★அரசாணைகள்!
********************
மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணை : - 48 பள்ளிக்கல்வி (எக்ஸ்) -2004. மற்றும் அரசாணை :270. 22.10.2012 ன் படி ஏதாவது ஒரு பள்ளிக்கூடம்  இயங்குகிறதா?

இல்லை!  இல்லை!  இல்லவே இல்லை!

★பொய்யான உறுதி மொழி! போலிசான்றிதழ்!
*******************
அனைத்தும்  அரசு விதிமுறை  படி தான் உள்ளது என பொய்யான உறுதி மொழி வழங்கியும்  சான்றிதழ்களை லஞ்சம் கொடுத்து வாங்கியும்  பள்ளி உரிமத்தை  புதுப்பித்து கொள்கின்றனர் .

இதற்கு கடமை தவறிய மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள்  துணை போகின்றனர்.

★பெற்றோர்களே!  நண்பர்களே!
சகோதர, சகோதரிகளே!

94 மழலை குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் தீவிபத்து  இன்னும் நெஞ்சை விட்டு மறையவில்லை.!

★உங்கள்  அன்பு குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் முன் அந்த பள்ளியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்  .!
*******************************************
1.  அரசு அனுமதி பெற்றுள்ளார்களா?
அனுமதி எண் என்ன?

2.  பள்ளியின் நான்கு புறமும் பாதுகாப்புக்கான  சுற்றுச்சுவர் உள்ளதா?

3. ஓடு,  ஓலை, தகரம், ஆஸ்பெட்டாஸ் சீட்டிலான கூரைகள் இல்லாமல் கான்கிரீட்டிலான கூரைகள்(RCC Roof)  உள்ளதா ?

3. வகுப்பறையின் அருகில் கழிவறைகள் உள்ளதா?

4. கழிவு நீர் மற்றும் மழைக்காலங்களில் மழை நீர் வெளியேறும் விதத்தில் வடிகால் வசதி உள்ளதா?

5. சுத்தமான குடிநீர் வழங்கப் படுகிறதா?

6. இடி தாங்கி பொறுத்தி உள்ளனரா?

7. தள்ளு கதவுகள்  இழுவை  கதவுகள்  உள்ளதா?

8. குறைந்த பட்சம்  ஒரு ஏக்கரில் விளையாட்டு மைதானம்  உள்ளதா?

9. LKG முதல் மூன்றாம்  வகுப்பு வரை தரை தளத்தில் செயல் படுகிறதா?

10. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும்  30  மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 

ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும்  35. மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும்,

ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும்  கல்வி கற்று கொடுக்கிறார்களா?

11. கல்வி திறமை வாய்ந்த ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக  பாடம் நடத்துகிறார்களா?

12. ஒவ்வொரு வகுப்பிற்கும் அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை மட்டும் வசூலிக்கிறார்களா?

13.  வசூலிக்கும்  அனைத்து கட்டணங்களுக்கும் பற்றுச்சீட்டு (ரசீது)  வழங்குகிறார்களா?

14. தீத்தடுப்பு நடவடிக்கைகள், முதலுதவி பெட்டிகள் வைத்துள்ளனரா?

15. கழிவறைகள் சுகாதாரமான முறையில் உள்ளதா?

16. இலவச கட்டாயக்கல்வி பயிலும் மாணவர்களிடம்  அரசிடம் இருந்து பணம் வரவில்லை, எனவே கல்விக்கட்டணங்களை செலுத்த சொல்கின்றனரா?

17. உங்கள் குழந்தை படிக்க வில்லை என்றோ அல்லது கல்விக்கட்டணம் கட்டாத காரணத்தினால்  மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லுங்கள் என நிர்பந்தம் செய்கிறார்களா?

18.  அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத்தில் பள்ளியை நடத்த முடியாது  என்று கூறி அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா?

19. பள்ளி பேருந்துகள், சிற்றுந்துகள் நல்ல முறையில் பராமரிக்க படுகிறதா?

20. சொந்த கட்டிடத்தில் இயங்காத பள்ளிகள்  முப்பது ஆண்டுகளுக்கான வாடகை ஒப்பந்தம்  செய்துள்ளனரா?

21.  பள்ளி கட்டிடங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா?

22. எங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நாங்களே பொறுப்பு என உறுதி மொழி அளிக்கின்றனரா?

23.ஆசிரியர்கள் வகுப்பறையில் செல் போன் உபயோகிக்கின்றனரா?

24.  பள்ளி நடைபெற்று கொண்டிருக்கும் போது  பாதுகாப்பற்ற முறையில்  கட்டுமான பணி செய்கின்றனரா?

25. பள்ளி நிர்வாகிகள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

26. மெட்ரிக் மேல் நிலை பள்ளிகளில் ப்ரீ -கேஜி வகுப்புகள் நடத்துகின்றனரா?

27.  பள்ளி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தீ அணைப்பு வாகனம் பள்ளி கட்டிடத்தை சுற்றி வந்து தீயை அணைக்க சுற்றிலும்  போதுமான இட வசதி செய்துள்ளார்களா?

28. 20 மாணவர்களுக்கு  ஒரு குடிநீர் குழாய் உள்ளதா?

29. 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் உள்ளதா?

30. 50 மாணவர்களுக்கு ஒரு கழிவறை உள்ளதா?

31. மாணவர்கள் அமர்வதற்கு சாய்வான இருக்கை உள்ளதா?

32. பள்ளி அறைகளில் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளதா ?

33. கட்டிட உறுதி தன்மை சான்று பெற்றுள்ளனரா?

34. கட்டிட உரிமம் பெற்றுள்ளனரா?

35.  ஆய்வக பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை தனி அறையில் பாது காப்பாக உள்ளதா?

36. உயர் அழுத்த மின் கம்பிகள் பள்ளியினூடே செல்கிறதா?

இதைப்பற்றி எல்லாம் ஆராய்ச்சி  செய்ய நேரமும் இல்லை !
எங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை. 
தேவையும் இல்லை! என நினைக்கிறீர்களா?

அய்யோ!  எனது குழந்தைக்கு பள்ளியில் அனுமதி கிடைத்தால் போதும் எப்படியாவது கஷ்டப்பட்டு கடன் வாங்கியாவது அந்த பள்ளியில் சேர்த்து விட வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?

அல்லது,
நமது குழந்தையின் பாதுகாப்பு நலன்தான்  முக்கியம்.  சட்டப்படி  அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை தவிர கல்விக் கொள்ளையர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த மாட்டேன் என்பவரா நீங்கள்?

பல பெற்றோர்களின் கண்ணீர் எங்களை நிலை குழைய செய்து விட்டது!

★சிறை!
*********
விடமாட்டோம்!  கல்வியின் பெயரால் கொள்ளை அடிக்கும் கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்.

இவர்கள் வெளியில் இருந்தால் நாட்டிற்கு பேராபத்து!

★பொதுநல வழக்கு!
***********************
மாவட்ட வாரியாக இவர்கள் மீது "பொது நல வழக்கு " பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்.

★நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
*****************************************
சட்டத்திற்கு புறம்பாக செயல் படும் பள்ளிகளின்  ஆதார பூர்வமான தகவல்களையும், ஆதாரங்களையும்  எங்களுக்கு அனுப்புங்கள்.

★அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 19 (1) அ. மற்றும் 51 (A)  ஒ வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :
*******************************************
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
LEGAL AWARENESS AND ANTI CORRUPTION ORGANIZATION
பதிவு எண் :10/2015 :44/2015
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
இ -மெயில் :nanjillaacot@gmail.com

★மேலும், தொடர்புக்கு :
*************************
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி  : 98655 90723

ரா .சங்கர்
மாநில தலைவர்,
உலாபேசி :98655 43303

இனி மாற்றம்  என்பது சொல் அல்ல செயல்!

உரிமைக்கு குரல் கொடுப்போம் !
ஊழலுக்கு விடை கொடுப்போம் !

Saturday 24 December 2016

தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெறுவது எப்படி ?

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன?

RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION. ACT -2009

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்  இல்லாமல் நமது குழந்தைகளை  இலவசமாக படிக்க வைக்க முடியுமா?

முடியும்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்.

பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1)  (C)  மற்றும் பிரிவு  13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும்  இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்  அதற்கு வழி வகை செய்கிறது.

இந்த சட்டம்  ஆறு வயது முதல்  பதினான்கு  வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் (சர்வ சிக்ஷா அபியான் SSA )
கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்?

★வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,

★தாழ்த்தப்பட்டவர்கள், 

★மலை ஜாதியினர், 

★பிற்படுத்தப்பட்டவர்கள்,

★மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

★கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

★எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

★மாற்றுத்திறனாளிகள்.

★துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்

★மூன்றாம் பாலினத்தவர்  (திருநங்கைகள்)

★ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு  கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.

நீங்கள் வசிக்கும் பகுதியில்    இருந்து சுமார்   மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்
இருக்கும் தனியார் பள்ளிகளில்  உங்களது  குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009)  R T E. ன்  கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்.

குழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.

குழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியையோ கருத்தில் கொள்ளக் கூடாது.

அந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்

மற்றும் முதல்  வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில்  சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு.

L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள்  8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்.

இந்த திட்டத்தின் கீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள  தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து  கல்வி பயிலலாம

இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது.
இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

பெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.

அனைத்து தனியார் பள்ளிகளும்  25 சதவீதம்  இடங்களை  கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தின் கீழ்  சேரும் குழந்தைகளுக்கு
கண்டிப்பாக  ஒதுக்கீடு செய்ய  வேண்டும்.

அதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம்  அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார்  பள்ளிகள் சிறுபான்மையினர்  பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை.

எனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.

இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது.

ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை.  கட்டணம் செலுத்துங்கள்  பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்.

அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

உங்கள்  குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால்  உங்கள் மாவட்டத்தில் இருக்கும்  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்,  மெட்ரிக்பள்ளி இயக்குநர்,  இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.

சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில்  தகவல் பலகை வைக்க வேண்டும்!

எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி  கனவினையும் நிறைவேற்றுங்கள்.

கல்வி உங்கள் மிக அருகாமையில்!

பெயர் தான் இலவசக்கல்வி !

இது கேவலம் அல்ல!

மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது!

கவலை வேண்டாம்!

இது கனவல்ல!  நிஜம் !

★எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே  விண்ணப்பிக்கலாம் .

1.மாவட்ட கல்வி அலுவலகம்

2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்

3.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம்

4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்

5.மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம்

6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

7.அனைத்து தனியார் பள்ளிகள்

ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 % மேல் விண்ணப்பம் பெறபட்டால் (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் .

★விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள் :

1. பிறப்பு சான்று
2..குழந்தையின் புகைப்படம்
3.ஜாதி சான்று
4. வருமான சான்று
5.இருப்பிட சான்று
6.முகவரி ஆதாரம்

இந்த ஆவணங்களை பெறுவது எப்படி?

ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று  இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில்  ஒவ்வொரு சான்றுக்கும் ₹50 ரூபாய் கட்டணம் செலுத்தி  வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.

இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

தனியார்  பள்ளிகளில்  L.K.G வகுப்பிற்கான  சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள்.
இது சட்ட விரோதமான செயலாகும்.

இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள்  குறிப்பிட்டு 16.04.2018 அன்று
பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்.

20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே!

இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.

ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.

இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு  அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்.

ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.

இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.

2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.

2017-2018 ஆம் கல்விஆண்டில்
2,36000.இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம்  காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40 000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.

எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.

2018 -2019 ஆம் கல்வி ஆண்டில்  100 சதவீதம் இலவச சேரக்கை  நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்.

ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் . 

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.

ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.

தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்.

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

பெற்றோர்களே!
நண்பர்களே !
சமூக ஆர்வலர்களே!
சமூக அமைப்பினை சார்ந்தவர்களே !

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ ,கல்விக்கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ  ,கல்வி அதிகாரிகளினாலோ  நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள் !

மேலும்  தனியார்  பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை விட ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்  குறித்து புகார் அளிக்க வேண்டுமானால்
எங்களது
"தனியார் பள்ளி புகார் "என்ற வாட்ஸ் அப் எண் :98655 90723.
உங்களது பெயர்  ஊர் குறிப்பிட்டு அனுப்புங்கள்.

மாறுங்கள்! மாற்றுங்கள்!!
கொடுக்க வேண்டாம் லஞ்சம்!!

எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள்! அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு! 
நமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்?
அவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.

கவலை வேண்டாம்.
உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்.

அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு.

கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்.

இலவசக்கல்வி விழிப்புணர்வு பணியில் வாழ்த்துக்களுடன்   ,

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

முக்கிய அறிவிப்பு :
நிர்வாகிகளின் தொடர்பு எண்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் நேரம் அறிவித்துள்ளோம்.
இந்த நேரங்களில் மட்டும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேண்டுகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்,
உலாபேசி :98655 90723
தொடர்பு நேரம் : தினமும்  இரவு 9.30 முதல் 10.30 வரையிலும்.

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303
தொடர்பு நேரம் : தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மற்றும்  மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்.

ரா.கோபால்சாமி
மாநில துணை தலைவர்
உலாபேசி :98422 98761
தினமும் இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி :97910 50513
தொடர்பு நேரம் : நாள் முழுவதும்

கோ.தாணு மூர்த்தி
மாநில பொருளாளர்
உலாபேசி :99438 14132
தொடர்பு நேரம் : மாலை :5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே எங்களின் லட்சியம்.

எங்களின் இலட்சியம் நிறைவேறிட
நண்பர்களே!  படித்து விட்டு உடனடியாக மற்றவர்களுக்கு பகிருங்கள் உங்களால் ஒரு ஏழை குழந்தையாவது பயனடையட்டும் நன்றி.