Friday 30 August 2019

கழிவுநீர் கால்வாய் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் புகார்

தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்  பொதுநல புகார் மனு,

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாப்பேசி :98655 90723

எதிர்மனுதாரர் :
திரு. வாசுக்குமார் அவர்கள்
உதவி ஆணையர்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் - 641 652

பெறுநர் :
முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
குமார் நகர், திருப்பூர்.

அய்யா, 
கடிதம் எண் : LAACO/  CM/CL /008/TPR/2019 ;நாள் :30.08.2019

பொருள் :பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி 4 வேலம்பாளையம் பிரதான சாலை மணீஸ் தியேட்டர் முதல் அனுப்பர்பாளையம் புதூர் வரையில் கழிவு நீர் கால்வாய் கட்டக்கோரி பொதுநல புகார் மனு,

மக்களின் அடிப்படை பொது தேவைகளை நிறைவேற்று
வதற்காக  அரசாணை
களையும் பல்வேறு விதமான அரசு துறைகளையும்  அரசு  ஏற்படுத்தி உள்ளது.

அதனை நிறைவேற்ற அந்தந்த துறைகளுக்கு என அரசு  சார்பாக பலதரப்பட்ட ஊழியர்களையும் நியமித்துள்ளது.

பொது மக்களிடம்  இருந்து பல்வேறு விதங்களில் வசூலிக்கப்படும் வரி இனங்கள் மூலம் பெறப்படும் வருவாயில் இருந்து மக்கள் பணி செய்ய நியமிக்கப்பட்ட மக்களின் சேவகர்களான அரசூழியர்களுக்கு மாத
ஊதியம்,சொகுசு வாகனங்கள், பல்வேறு விதமான சலுகைகள், பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதியம் என வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் உரிமைகளான அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள், அரசு நல திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றை அரசுத்துறை
களிடம் கோரும் மக்களுக்கு மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் செய்து கொடுக்கும் கடமை அரசூழியர்களுக்கு உண்டு.

ஆனால் கடமை தவறிய அரசூழியர்கள் இதனை செய்வது இல்லை.

மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் வாராவாரம் நடை பெற்று வருகிறது. .

முதலமைச்சர் தனிப்பிரிவும் செயல் பட்டு வருகிறது.

இது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானதாகும்.

இந்த குறைதீர்க்கும் முகாம்களினால் எந்த பயனும் இல்லை.

எந்த குறைகளும் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை.

அரசாணைகளின் படி பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படுவது இல்லை.

நீதிமன்றம் சென்றாலும் நீதி கிடைப்பதில்லை.

அப்படியானால் மக்கள் பணிகளை செய்வது யார்?

உள்ளாட்சி தேர்தல் நடை பெற இருக்கும் நிலையில் தாங்கள் இப்போது முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட  முகாம் என்ற பெயரில் நாடு முழுவதும் முகாம்களை அமைத்துள்ளீர்கள்.

பாதிக்கப்பட்ட பொது மக்களும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ் பழனிச்சாமி அவர்களிடம் நாம் கொடுத்த அவசர பொதுநல புகார் மனு சுமார் 327  நாட்களுக்கு பிறகு குப்பைக்கு சென்றது ஒரே ஒரு உதாரணம்.

நாமு‌ம்  எதிர்மனுதாரர் திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணைய‌ர் வாசுக்குமார் என்பவரிடம் கழிவு நீர் கால்வாய் சம்பந்தமாக 30.11.2017 அன்று பொது நல மனு அளித்தோம்.

அதுவும் குப்பைக்கு போய் விட்டது.

இந்த கடமை தவறிய அரசூழியர்களுக்கு மக்கள் வரிபணத்தில் இருந்து ஊதியம் வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய முதலமை‌ச்ச‌ர் ஆகிய தாங்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனினும் கீழ் காணும் கோரிக்கை மனுவினை தங்களின் நேரடி  சிறப்பு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், மாநகராட்சி முதல் மண்டல அலுவலக 5 ஆவது வார்டுக்கு  உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டி 1998 ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை வைத்து வருகிறேன் .

மாநகராட்சி 1, 5, 14, 15. வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.

4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது  வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கழிவு நீர் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்

மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.

இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள
முதல் வார்டுக்கு  மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.

கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.

இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக  28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன்.

ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை

437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.

மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும்  வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால்  சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.

தரமற்ற முறையில் கட்டிய கழிவு நீர் கால்வாய் ஆங்காங்கே உடைந்து விட்டது.

மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!

நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்
சாலையினர் சிறிய அளவிலான குழாய்களை பதித்து மண்ணால் மூடியும்  தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.

மழை காலங்களில்  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.

சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தியதுடன் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொண்டு இருப்பது மிகுந்த வேதனையையும் சொல்லொணா துயரத்தையும்  அளிக்கிறது.

சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே!  என வெற்று விளம்பர படுத்தும்
திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி என தாங்கள் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்திருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது.

₹86.25 இலட்சம் செலவு செய்து தரமற்ற முறையில் கட்டப்பட்ட பிரதான கழிவு நீர் கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.

கோரிக்கை : 01
எதிர்மனுதாரரிடம் 30.11.2017 அன்று கொடுக்கப்பட்ட மேற்காண் மனு மீது இன்றைய தினம் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். .

கோரிக்கை :02
மழை காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும்.
அப்போது பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் படும் துயரத்தினை தாங்கள் ஒரு முறை வந்து நேரில் பார்வை இட்டு இந்த சாலையை கடந்து செல்ல வேண்டுகிறோம்.

கோரிக்கை :03
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்

கோரிக்கை :04
437 மீட்டர்  கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் உடைந்த  கழிவு நீர் கால்வாய் மேற் பகுதியை உடனடியாக பழுது நீக்க வேண்டுகிறோம் .

கோரிக்கை :05
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.

கோரிக்கை ;06
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவு நீர்கால்வாய் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

பல முறை புகார் செய்தும் கடமை தவறிய மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை!

லஞ்சம் பெறுவதினையும் ஊழல் செய்வதினையும் தான் கடமை என நினைக்கின்றனர் போலும் .

கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!

நாமு‌ம் நமது கடமையாகவும் உரிமையாகவும் கொண்டு தங்களின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

நாள் :30.08.2019
இடம் : திருப்பூர் 

மனுதாரர்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

நோட்டரி வக்கீல்களை நோண்டி நொங்கு எடுப்பது எப்படி?

📢 #நோட்டரி #வக்கீல்களை #நோண்டி #நொங்கு #எடுப்பது #எப்படி?
LAACO /2019
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
ரயில் அல்லது பேருந்து நிலையத்தில் "வட" "வட" என பரபரப்பாக வடையை விற்பது போல நீதிமன்ற வளாகத்தில் "நோட்ரீ." ... "நோட்ரீ" . என பொய்யர்கள் தங்களின் கையெழுத்தை விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
கையெழுத்து தலையெழுத்தை மாற்றும் என்ற ஜோதிடம் யாருக்கு பலிக்கிறதோ இல்லையோ நோட்டரி வக்கீல்களுக்கு நிச்சயம் பலித்து  கொண்டு தான் இருக்கிறது

இதில் இப்போது நவீன யுக்தியாக இந்திய அரசு என்ற கூடுதல் விளம்பரம் வேறு.
நோட்டரி பொய்யர்களால் இந்திய அரசானது எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து இருக்கிறது என்பதை கூவிக்கூவி சொல்கிறார்கள் போலும்.

மத்திய அரசில் நிரந்தரமாக பணியாற்றும்  ஊழியர்களே பிரதிநிதிகளாக இருக்கும் போது அரசுக்கும் இவர்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாத போது என்ன அருகதையில்  இந்திய அரசு என விளம்பரம் செய்து கொள்ள முடியும்?

உண்மையில் இவர்களை நோட்டரிகளாக அங்கீகரிப்பது அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் தானே? மேலும் இவர்களின் நேரடி தொடர்பும் நீதிமன்றங்களில் தானே?
அதனால் உயர்நீதிமன்றம் என போட்டுக்கொள்ளலாமே?
ஏன் போட்டுக்கொள்ளவில்லை? இனி போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

ஆனாலும் நாம் தானே உலகின் மிகச்சிறந்த பொய்யர்கள்? நம்மை யார் கேள்வி கேட்க முடியும்? என்ற தைரியத்தில் இப்படி எல்லாம் நம்மிடம் துணிந்து தவறு செய்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னோடியாக உள்ள நீதிபதிகளை மிஞ்ச  நினைத்தால் கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச பிழைப்பும் நாறிடுமே! என்ன செய்வது?

இப்போது தான் தட்டிக்கேட்க மட்டுமல்ல அவர்களை தவிடு பொடியாக்கவும் நாம் வந்து விட்டோமே? . 👍

நோட்டரி ஆவணம் முழுக்க முழுக்க அப்படியே செல்லும் என பலரும் நினைக்கின்றார்கள் இது உண்மை அல்ல.
அதில் உள்ள ஒவ்வொரு வாசகமும் முறையாக கேள்வி எழுப்பப்படும் போது மெய்பிக்கப்பட வேண்டியதே  .

மெய்பிக்க  வேண்டியதில்லை என்றோ அல்லது  சட்டப்படி அப்படியே செல்லும் என்றோ எந்த நோட்டரியோ சொன்னால் அவர் சொல்வதையே மேற்குறிப்பாக எழுதி விட்டு பின் சம்பந்தப்பட்ட உங்களின்  சங்கதிகளை எழுதச் சொல்லிப் பாருங்கள்.
ஆளை விட்டால் போதுமடா சாமி என கழன்று கொள்வார்கள்.

உங்களுக்கு எதிராக நோட்டரி ஆவணங்கள் எதுவும் சான்றாக தாக்கல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டால் அந்த ஆவணத்தை புனைந்தவர்களை (பொய்யாக உருவாக்கிய நபரையும் மூல காரணமாக இருந்த பொய்யரையும்) சாட்சியாக அழைத்து விசாரணை செய்யலாம்.

அந்த விசாரணையில்.....

உறுதிமொழி என்றால் என்னவென்று தெரியுமா?

எந்த இடத்தில் நீங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டீர்கள்?

அந்த உறுதிமொழி சான்றளித்துள்ள  பொய்யரை எப்படி தெரியும்?

இதற்கு முன்பாக அவரிடம் வேறு ஏதும் உறுதி மொழி எடுத்துக் கொண்டீர்களா?

உறுதி மொழி எடுத்து கொண்டதற்காக கட்டணம் எவ்வளவு செலுத்தினீர்கள்?

கட்டணம் செலுத்தியதற்கான ரசீது பெற்று கொண்டீர்களா?

உறுதிமொழி  ஆவணத்தில் சொல்லியுள்ள அடிப்படை ஆதாரம் என்னென்ன?
என்பன உட்பட பல கேள்விகளை எழுப்பி திக்குமுக்காட வைக்கலாம்.

இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இதே போல் சம்பந்தப்பட்ட நோட்டரிகளையும் சட்டவிரோதமாக ஆலோசனை சொன்னதை வெளிக்கொண்டு வருவதற்காக நீதிமன்றச் சாசன உறுபு 128 இன் கீழ் முக்கிய சாட்சியாக அழைத்து விசாரணை செய்யலாம்.

உறுதிமொழி ஆணையர் சட்டம் 1952 மற்றும் விதிகள் 1956 ஆகியவைகளில் இவர்களின் கடமைகள் கட்டணங்கள் ஆகியவை வரையறுக்கப் பட்டுள்ளன.

அதன் விரிவஞ்சி சொல்லாமல் விட்டு விடுகிறேன்.

நன்றி.
✍️ சட்ட ஆராய்ச்சியாளர்
ஆசிரியர் திரு வாரண்ட் பாலா அவர்களின் நீதியைத் தேடி நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்....
சாட்சியங்களை சேகரிப்பது எப்படி?
என்ற நூலில் வரிசை எண் :75 பக்கம் எண்: 251,252,253

நூல்களை பெற :
வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவலாக......

#நோட்டரி #கையொப்பம் #தேவைஇல்லை!!

சான்றுறுதி அலுவலர் என்று சொல்லப்படுகிற நோட்டரிகளிடம் அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய படுவது உள்ளிட்ட எந்த ஒரு ஆவணங்களிலும் பணம் கொடுத்து கையொப்பம் பெற தேவை இல்லை.
அவரவர் சுய ஒப்பம் இட்டால் போதுமானது.

#திருமணம் #செய்ய #தடை!!

நோட்டரி அலுவலகங்களில் பணம் வாங்கி கொண்டு இரகசிய திருமணங்களையும் முன்னின்று நடத்தி வைக்க நோட்டரிகளுக்கு அதிகாரம் இல்லை.

நாஞ்சில் கோ கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலாப்பேசி:98 655 90 723

Friday 23 August 2019

ஜல் சக்தி அபியான் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஓர் முக்கிய அறிவிப்பு!
LAACO /2019 :23.08.2019

ஜல் சக்தி அபியான்!

சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

24.08.2019 அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் ஜல் சக்தி அபியான் "சிறப்பு கிராம சபைக் கூட்டம்" நடை பெற உள்ளது.

ஜல் சக்தி அபியான் என்றால் என்ன?

மழை நீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து  பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல் படுத்துதல்.

நாட்டிலுள்ள 255 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியான மாவட்டங்கள் எனக் மத்திய அரசால் கண்டறியப் பட்டுள்ளது. 

எனவே, நீர்ப் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு திட்டங்களை ஊக்குவிக்க 'ஜல்சக்தி' அபியான் என்னும் திட்டத்தை, மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி அன்று தொடங்கி உள்ளது. 

இதற்காக, 255 கூடுதல் மற்றும் இணைச் செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. 

இவர்கள், ஒவ்வொரு வறட்சியான மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களாக இருந்து, நீர் சேமிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான பரப்புரை மற்றும் திட்டங்களை செயல்படுத்துவார்கள். 

மழைக் காலமான ஜூலை 1 முதல் செப்டம்பர் 15 வரை இந்த திட்டம், செயல்படுத்தப்படவுள்ளது. 

இந்த  திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அதிகாரிகள் அனைவரும் கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள்.

இவர்கள் மத்திய அரசு அதிகாரிகள், இயக்குநர், துணைச் செயலர்கள் பதவி அந்தஸ்தில் உள்ளவர்கள், நீர் ஆதாரத்துறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மாநில, மாவட்டக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவர்

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 168 ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டம் செயல் படுத்த பட உள்ளது. 

சிறப்பு கிராம சபைக் கூட்டத்தின் பயன் என்ன?

நீர் பாதுகாப்பு,
மழை நீர் சேகரிப்பு,
நீர் மேலாண்மை,
பாரம்பரிய மற்றும் பிற நீர் நிலைகள், ஏரிகள் புதுப்பித்தல் ,
நீர்வடி பகுதி மேம்பாடு செய்தல்,
தீவிர காடு வளர்ப்பு திட்டத்தை செயல் படுத்துதல் 
மீன் நிரப்பு கட்டமைப்புகளை புதுப்பித்தல்
போன்ற பல் வேறு பணிகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் விவாதித்து செயல் படுத்திட கிராம ஊராட்சி பகுதி மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு  பயன் பெறுமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை புதுப்பித்து நீரை பாதுகாத்திடவும், தீவிர காடு வளர்ப்பு திட்டத்தை செயல் படுத்தி மழை பெறவும் , மழை நீர் சேகரிப்பு செய்து நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்திடவும், குடி நீர், பற்றாக்குறை இல்லாமல் விவசாயம் செழித்திடவும், நீர் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்திடவும்  மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடை பெற இருக்கிறது என்பதினை தெரிவித்து கொள்கிறோம்.

மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில்..............!!

நாஞ்சில் கோ. கிருஷ்ணன் நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலாப்பேசி : 98 655 90 723 மின்னஞ்சல் :
nanjillaacot@gmail.com

Thursday 22 August 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0002

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO /002/2016: நாள் :23.08.2016

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன ?

உண்மை சம்பவம் .

போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன விதிமுறைகள் மீறும் திருப்பூர் மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள்!

கண்டு கொள்ளாத  திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல் துறையினர்!

கடமை தவறிய கேடு கெட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

குப்பை அள்ளும் வாகனத்தில்  ஆண், பெண் பணியாளர்களை ஏற்றி செல்லும் அவலம்!

விபத்து ஏற்பட்ட பிறகு விழித்து கொள்ளும் அதிகாரிகள்!

இதற்கு யார் பொறுப்பு ?

குற்றம் நடந்த இடம் - திருப்பூர் பழைய பேருந்து நிலையம் .

புகைப்படம் - ஹாஜா

நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஓழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர் மாவட்டம்
உண்மை சம்பவங்கள் தொடரும்....'

Tuesday 13 August 2019

கிராம சபை என்றால் என்ன?

📢 #கிராம 🏡#ஊராட்சி #பகுதிகளில் #வசிக்கும் #பொது #மக்களுக்கு #ஒர் #முக்கிய 🌠#அறிவிப்பு!

🏛 15.08.2019 🇮🇳சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடை பெற இருக்கிறது.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அது சமயம் அனைத்து ஊராட்சி பகுதி மக்களும் தவறாது கலந்து கொண்டு உங்கள் கிராமத்தின்  வளர்ச்சி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள், வரவு செலவு கணக்குகள் குறித்த விபரங்கள் பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்
👆👆👆👆👆👆👆👆👆
கிராம சபை கூட்டம்👨‍🏫👩‍🏫 என்றால் என்ன?

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

எந்தெந்த🤔 தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?

1. ஜனவரி 26 🇮🇳(குடியரசு தினம்)
2. மே 1 🛠🚩(உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 🇮🇳(சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 👨🏽‍🦲(காந்தி ஜெயந்தி)

#கிராம #சபை #கூட்டம் #எங்கெங்கு 🤔#நடை #பெறும்?

தமிழகத்தில் உள்ள சுமார் 12, 524 அனைத்து கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் நடை பெறும்..
😄😄😄😄😄😄😄😄😄

கிராம சபை கூட்டத்தினை நடத்துவது யார்?🧐

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை /ஊராட்சி தலைவர்👍

கிராம சபை உறுப்பினர்கள் யார்?🤔

அந்தந்த கிராமத்தில் வசிக்கும் 🗳வாக்குரிமை உள்ள மக்கள்.
🗳🙋‍♂🙋🗳🙋🙋‍♂🗳🙋‍♂🙋
எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்?

அந்தந்ந கிராமத்தில் வசிக்கும் மொத்த மக்களில் பத்து சதவீதம் பேர் அதாவது 1000 பேர் என்றால் 100 பேர் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
💯💯💯💯💯💯💯💯💯

இப்படி பல் வேறு விதமான கேள்விகள் !

உங்களது அனைத்து கேள்விகளுக்கும்  கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு விடை காணலாம்.

வருகிற 15.08.2019 சுதந்திர 🇮🇳தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம  சபை கூட்டம் நடை பெற இருப்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் கா. பாஸ்கரன் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதம் அசலாக பொது மக்களின் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது. Laaco
👇👇👇👇👇👇👇👇👇
அன்றைய தினம் அனைத்து கிராம மக்களும் தவறாமல் கிராம சபை கூட்டத்தில் பங்கெடுத்து உங்களின் ஜனநாயக கடமையினை சிறப்புடன் ஆற்றிட "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு" சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனுப்புநர்:
முனைவர்.
கா.பாஸ்கரன் இ.ஆ.ப.
இயக்குநர்
ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி இயக்ககம்
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை - 600 015

பெறுநர்:
மாவட்ட ஆட்சித் தலைவர்
அனைத்து மாவட்டங்கள்
(சென்னை நீங்கலாக)

ந.க.எண் :365 / 2019 ஊராட்சி 2.2 ,நாள்:05.08.2019

அய்யா / அம்மையர்

பொருள் : கிராம சபைக் கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 15.08 2019 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்துதல். - கூட்ட பொருள்கள் விவரம் அனுப்புதல் தொடர்பாக,

பார்வை : 01 அரசாணை (நிலை) எண் 245  ஊ.வ.(சி1) துறை
நாள்: 19 .11.1998

02.அரசாணை (நிலை) எண் :130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் :25.09.2006

பார்வை: 01 ல் காணும் அரசாணையில் உத்தரவிடப்பட்ட தற்கினங்க சுதந்திர தினமான
15. 08.2019 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். .

இதில் அனைத்து பிரிவு கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த கூட்ட பொருள்கள் ( Agenda) விவாதிக்கப்பட வேண்டும்.

மேற்படி கிராம சபை கூட்டம் ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 15.08.2019 அன்று காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும் .

தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள இடம் நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பார்வை: 02 ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பார்வை:01 ல்  கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள பொருள்களுடன் 15. 08 .2019 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது

மேலும் 15.08.2019 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு
29.08.2019 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு : கிராம சபை கூட்டம் பொருள்கள்

ஓம். பாஸ்கரன்
இயக்குநர்

இயக்குநருக்காக,

நகல் :
1.அரசு கூடுதல் தலைமைச் செயலர் ,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தலைமை செயலகம்
சென்னை -  9

2 .மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
சென்னை - 35

3. திட்ட இயக்குனர்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அனைத்து மாவட்டங்கள்

4. உதவி இயக்குனர் ஊராட்சிகள் அனைத்து மாவட்டங்கள்
Laaco/2019

✍✍✍✍✍✍✍✍✍
15.08 2019 சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள்கள் விபரம். 👍

பொருள்: 01 கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.

கிராம ஊராட்சிகளில் 01. 06 .2019 முதல் 31. 07. 2019 முடிய உள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் மேற்கொண்ட செலவின அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்

அ) குடிநீர் வசதிக்கான செலவினங்கள், கைபம்பு விசை பம்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பராமரிப்பு, செலவு விவரங்கள்,

ஆ) மின்சார வசதிக்கான செலவினங்கள்,

இ) பொது நிதியில் எடுக்கப்பட்ட மூலதன பணிகள் அதன் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரம்

ஈ) இதர நிர்வாக செலவினங்கள் விபரம்

பொருள் : 02 குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்

கடந்த ஆண்டுகளில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள காரணத்தினால் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறைந்து உள்ளது.
எனவே கீழ்க்கண்ட நீர் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள கோருதல்.

1.அனைவருக்கும் குடிநீர் கிடைக்கப்பெறும் வகையில் குடிநீரை அனைத்துக் கிராமங்களுக்கும் முறையாக விநியோகம் செய்தல்.

2 குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் பொது குழாய்களில் அருகில் குளித்தல் துணி துவைத்தல் பாத்திரங்கள் கழுவுதல் போன்ற செயல்களை தவிர்த்தல்.

3. குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகித்தல்

4 வீட்டில் குடிநீர் குழாய்களில் கசிவு இல்லாமல் பராமரித்தல்.

5 தெருக் குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுத்தல் மற்றும் பயன்பாட்டில் இல்லாத போது குடிநீர் குழாயை மூடி வைத்தல்.

6 குளியலறையில் உள்ள குழாய்களில் தண்ணீரின் வேகத்தை குறைத்து உபயோகித்தல்.

பொருள் :03  கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

ஊரகப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வுடன் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கீழ்காணும் விவரப்படி மேற்கொள்வதை உறுதி செய்தல்

அனைத்துக் குக்கிராமங்களிலும் துப்புரவு பணி முழுமையாக மேற்கொள்ளுதல்

சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல்

மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல்
(பிரதி மாதம் 5 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி)

தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல்

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை பின்வருமாறு தடுத்தல்

1. தெளிந்த நீர் தொட்டி
2. பயன்பாடற்ற பானைகள்
3 குளிர்சாதனப்பெட்டி பின்புறம்
4 பழைய டயர்
5. தேங்காய் மட்டைகள்
6.செடிகள் வளரும் தொட்டி
7 புதிய கட்டுமானப்பணி நடக்கும் இடங்கள்
மற்றும் இதர தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் அவற்றை முறையாக அகற்றியும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளுதல்.

பொருள் :04  ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளில் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல்.

நடப்பு நிதி ஆண்டில் (2019- 20) ஊராட்சி பகுதியில் நடைபெறும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தல்.

பொருள் :5  கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP)

14 வது மத்திய நிதி மானிய குழுவினரால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதி கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும்

கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள கட்டுமான வசதிகள் மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப் எடுக்கப்பட்டுள்ள/ எடுக்கப்பட வேண்டிய பணிகளுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறுதல்

மேலும் இதர ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள் மற்றும் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை கிராம சபைக்கு தெரிவித்து ஒப்புதல் பெறுதல்.

மேலும் கிராம வளர்ச்சித் திட்டத்திளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 11 - வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 29 பொருட்கள் தொடர்புடைய துறைகளின் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து தயார் செய்ய வேண்டும்.

பொருள் :06 பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல்

அரசாணை எண் 84 சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நாள் 25. 06.2018 இன் படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இவ்வாணையின்படி ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், உணவை பாதுகாக்கவும் மேசைகள் மீது போடவும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்,தாள்கள் , பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப்புகள் பிளாஸ்டிக் தம்ளர், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள் , பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை  தயாரித்தல் இருப்பு வைத்தல் விநியோகம் விற்பனை மற்றும் இட மாற்றம் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு ஆணையின்படி பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாகும் வகையில் அனைவரும் ஒத்துழைக்கவும் மேலும் ஊராட்சியில் செயல்பட்டு வணிக நிறுவனங்களான  டீக்கடை பெட்டிக்கடை சிற்றுண்டி உணவகங்கள் மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யாமல் இருக்க வலியுறுத்துவதென  தீர்மானித்தல்

கிராம ஊராட்சியில் தடைசெய்யப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்கிட தீர்மானித்தல்.

பொருள் : 07 உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாயவிலை கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்த அரசாணையில் உதவிட பட்டுள்ளதை தொடர்ந்து முன்னுரிமை குடும்ப அட்டை( PHH) பயனாளிகளின் பட்டியல் கிராம சபையின் ஒப்புதல் பெறுதல் வேண்டும்.

பொருள் : 8.  முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம்

பொருள்: 8.1 
(அ) சுகாதார உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுதல்

(ஆ) கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல். கழிப்பறையை கட்டி தொடர்ந்து அதனை பயன்படுத்துவதன் மூலம் கிராம ஊராட்சியின் முழுசுகாதார முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பாராட்டு தெரிவித்தல்.

பொருள்: 8..2 திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள்:

(அ) கிராம ஊராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து குடியிருப்புகள், பள்ளிகள் ,அங்கன்வாடி மையம், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முழுமையான சுகாதார நிலையை அடைந்த கிராம ஊராட்சிகள் தங்கள் கிராம ஊராட்சியை திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக ஏற்கனவே அறிவித்ததைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்தல்
கழிவறைகளை தொடர்ந்து பயன்படுத்துதல் குறித்தும்  கிராம சபையில் விவாதித்தல்

(ஆ) கிராமங்களில் சுகாதார மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தல் மற்றும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளுதல்.

(இ) திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகள் தொடர்ந்து பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை கிராம சபையில் வாசித்தல்

(ஈ) ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊக்குநராக (Motivator) சுகாதார மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும்  அவர்களுடன் ஊராட்சியில் பணியாற்றும் பிற துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து தனிநபர் இல்ல கழிப்பறைகளை பயன்படுத்த
நேரடி தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கழிப்பறைகளை தொடர்ந்து பயன்படுத்துதல் குறித்தும் விவாதித்தல்

பொருள்: 8. 3 குழுக்களுக்கு ஒத்துழைப்பு :

கிராம நலன் கருதி கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவில் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தல்
மற்றும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை நல்கிட உறுப்பினரிடம்  கோருதல்
Laaco/2019

பொருள் :8.. 4 திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல்:

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்கள்
வருமான இழப்பு  மருத்துவச் செலவு குழந்தையின் வளர்ச்சி பாதிப்பு ஆகிய தீமைகள் குறித்து கிராம சபை உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

பொருள்: 8. 5 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள்:

ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் பராமரிப்பு மற்றும் அவற்றின் தொடர் செயல்பாடு குறித்து விவாதித்தல் மற்றும் தனிநபருக்கு கழிவறை கட்ட இடம் இல்லாத பட்சத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமுதாய கழிப்பறை கட்டிக் கொடுத்தல் குறித்து விவாதித்தல் மற்றும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை அறவே அகற்றப்பட்ட மேற்படி இடத்தில் ஊராட்சியின் பொது தேவைக்காக பயன்படுத்துதல்
மற்றும் பராமரித்தல் குறித்து விவாதித்தல்

பொருள்: 8.6 பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள்:

அரசு பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் கழிப்பறைகளை பராமரித்திட கிராம வறுமை ஒழிப்பு சங்கம்/ ஊராட்சி அளவிலான சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு மூலம் ஈடுபடுத்தப்படும் துப்புரவு பணியாளர்கள் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை ஒவ்வொரு நாளும் இரண்டு முறை சுத்தம் செய்தல் பள்ளி துவங்கும் முன்பு வகுப்பறைகளை தூய்மைப்படுத்துதல் பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்துதல்
கழிப்பறைகளில் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு  வசதிகள் ஏற்படுத்துவது குறித்து விவாதித்தல்

பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல்:

தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஊரக பகுதிகளில்  உள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான சுகாதாரம் குறித்த படம் வரைதல் வண்ணம் தீட்டுதல் கட்டுரை எழுதுதல் மற்றும் பேச்சுப் போட்டிகள் பள்ளிகள் அளவில் நடத்தப்படுவது குறித்து விவாதித்தல்

பொருள்: 8.7 திடக்கழிவு மேலாண்மை திட்டம் :

தூய்மை காவலர்கள் கிராமங்களில் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்

பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை காவலர்களுக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்வதுடன் வீட்டையும் கிராமத்தையும் சுத்தமாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளுதல்

பொருள்: 8.8 அனைத்து ஊராட்சி பகுதிகளை ஒட்டி உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திட  வேண்டி ஆற்றுப்படிகளில் கழிவுநீர் கலப்பதை மற்றும் குப்பைகளை கொட்டி ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க செயல்திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்துதல்.

பொருள்: 8.9 அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தில் முறையாக உரம் தயாரித்திட கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உரம் தயாரித்தல்

ஊராட்சியில் உள்ள மரக்கன்றுகளுக்கு பயன்படுத்திடவும் மற்றும் எஞ்சிய உரத்தினை தேவையான ஊராட்சி /தனிநபர்களுக்கு விற்பனை செய்தல் குறித்து விவாதித்தல்

பொருள்: 8.10 முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் உறுதிமொழியை கிராம சபை உறுப்பினர்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளுதல்

பொருள்: 9  ஜல் சக்தி இயக்கம்
Laaco/2019

ஓம்.கா.பாஸ்கரன்
இயக்குநர்

இயக்குநருக்காக,
05/.08/ 19

✍ கிராம சபை விழிப்புணர்வு பணியில்.........
💥💥💥💥💥💥💥💥💥
நாஞ்சில்
கோ கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI- CORRUPTION ORGANIZATION
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர்- 641 652
உலாப்பேசி:
98 655 90 723
மின்னஞ்சல் :
nanjillaacot@gmail.com

அரிமா ரா. சங்கர்
மாநில தலைவர்
அரியலூர்
உலாபேசி :98655 43303

M. விவேகானந்தன்
மாநில பொது செயலாளர்
திருச்சி
உலாபேசி :94886 11427