திருப்பூர் மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளர் அவர்களின் கவனத்திற்கு!
தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான தாழ்வழுத்த ,உயர்வழுத்த மின்கம்பங்களில் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விளம்பர பதாகைகள் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது.
கடமை தவறிய மின் உதவி பொறியாளர்கள் , உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கண்களுக்கு இது தெரியாமல் போனது ஏன்?
மேற்பார்வை பொறியாளராகிய தாங்கள் அனைத்து மின்கம்பங்களையும் ஆய்வு செய்து விளம்பர பதாகைகளை அகற்றுவதுடன்
சட்ட விரோதமாக விளம்பர பலகை வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க கோருகிறோம்.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
01.08.2018
No comments:
Post a Comment