Monday, 18 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0048

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0048/2019;நாள் :21.03.2019

குற்றம் நடந்தது என்ன?
உண்மை சம்பவம்.

இந்து முன்னனி Vs கந்து வட்டி!
காவல்துறை   Vs கட்ட பஞ்சாயத்து!

கல்லூரி நண்பர் எதிரியான கொடுமை!

திருப்பூரில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறதா?
ஆம்.

பணத்தை வைத்து தினவட்டி ,மணி வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, மாத வட்டி  ,கந்து வட்டி என பல்வேறு  பெயரில்  கூடுதல் பணம் சம்பாதிக்கும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலை மற்றும் புகாரினை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின்
நடவடிக்கையின் காரணமாக கரூர் பகுதி கந்து வட்டி கும்பல் திருப்பூர் நோக்கி  படை எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

பல ஆயிரம் கோடி வர்த்தகம் ஈட்டும்  திருப்பூரில் தங்களின் அவசர தேவைகளுக்கு பணம் உடனடியாக தேவைப்படுவதினால் கூடுதல் வட்டிக்கு பணம் பெற்று  தொழில் செய்யும் சூழல் நிலவி வருகிறது .

தள்ளு வண்டி கடைகள் பெட்டி கடைகள் முதல்  பின்னலாடை தொழிற்சார்ந்த தொழிற்சாலையினர் ,வர்த்தகர்கள்மற்றும் ஏழை எளிய பாமர மக்கள் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர்.

இதனை பயன் படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கந்து வட்டி கும்பல்.

கந்து வட்டி கும்பலினால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தின் காரணமாக புகார் அளிக்க முன் வருவதில்லை.

இதனை கண்காணித்து தடுக்க தவறிய காவல் துறையினர்.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் புகார் அளித்தால் அந்த புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.

தயிழ்நாடு வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டம் -1957 சட்டப்பிரிவு 7 இல் 
18% பதினெட்டு சதவீதத்திற்கு மேல் அதிகமாக மாத வட்டி வசூலிப்பது குற்றம் என இச்சட்டம் சொல்கிறது.

ஆனால் இந்த சட்டத்தினை வட்டிக்கு பணம் கொடுப்போர் மதிக்காமல் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டி துன்புறுத்தி பொருட்களை பறி முதல் செய்து அராஜக செயலில் ஈடுபட்டு வந்தனர்.

எனவே பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

எனவே தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச்சட்டம் -2003 கொண்டு வரப்பட்டது.

இச்சட்டப்பிரிவு 38 /2003 இன் உட்பிரிவு 4 இன் படி கூடுதல் வட்டி வசூலிப்பது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு
கடுங்காவல் தண்டனையும் முப்பது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் .

கூடுதல் வட்டி கேட்டு இடையூறு செய்வது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல்
செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.

கந்து வட்டி வசூலிப்பவர்கள் குறித்து நமக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து  புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

கந்து வட்டி கும்பலுடன் கை கோர்க்கும் திருப்பூர் மாநகர தெற்கு காவலூழியர்கள்!

₹25000 ரூபாய் கடனுக்கு  ₹ 8000 ரூபாய் வட்டியுடன் அசலும் சேர்த்து ₹ 33000 ரூபாய் செலுத்திய பின்னரும் கூடுதல் வட்டியாக ₹28000 கேட்டு மிரட்டி இருச்சக்கர வாகனத்தினை அடாவடியாக பறித்து சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞன் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது முறையாக பாதிக்கப்பட்டவரின் புகாரினை பெற்று எதிரி மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வில்லை.

மாறாக எதிரியை காவல் நிலையம் வரவழைத்துள்ளனர்.
எதிரியுடன் வந்த அப்பகுதி இந்து முன்னனியை சேர்ந்த நிர்வாகிகளுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து புகார் கொடுத்தவரை மிரட்டி உள்ளனர்.

எதிரி கேட்கும் அநியாய வட்டி  வாரம் ₹1500 ரூபாய் வீதம் மாதம் ஒன்றிற்கு ₹6000 . ஆறு மாத வட்டி ₹36000 ரூபாயில் ₹33000  கொடுத்தது போக மீதி வட்டி  ₹3000 ரூபாயும் அசல் ₹25000 ஆக மொத்தம் ₹28000 ரூபாய் கந்து வட்டி பணத்தை கொடுத்து வாகனத்தினை பெற்று கொள்ளும் படி காவலூழியர் அர்ச்சுனள் மற்றும் கார்த்திக் என்பவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பணம் தன்னிடம் இல்லை என்ற போது தலைமை காவலர் ஒருவர் பணம் கொடுக்க முடிய வில்லை என்றால் செத்து போ என ஒருமையில் திட்டி உள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர் ஜெயசந்திரன் என்பவர்  விசாரணை செய்து அர்ச்சுனன் என்ற காவலூழியரை அழைத்து இருச்சக்கர வாகனத்தினை மீட்டு கொடுக்கும் படி கூறியுள்ளார்.
ஆனால் அவரின் உத்தரவினை காவலூழியர் அர்ச்சுனன் நிறைவேற்ற வில்லை.

பத்து தினங்களாக காவல் நிலையம் அலைந்த போதும்  நீதி கிடைக்க வில்லை செத்து போயிடலாம் போல இருக்கிறது என கண்ணீர் மல்க நம்மிடம் சட்ட உதவி நாடியுள்ளார்.

இது நமக்கு மிகுந்த அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் சட்ட விரோத கந்து வட்டி கும்பலுக்கும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவலூழியர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் ஜெயசந்திரன் நமது வாட்ஸ் ஆப் செய்தியினை பார்த்து  என்னிடம் 
தொடர்பு கொண்டு மனுதாரர் யார்? எதிர்மனுதாரர் யார்?  என்பது குறித்து விசாரித்தார்.
கல்லூரி மாணவர்கள் தவறு செய்தால் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.அது போல்
காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஏன் தெரிவிக்க வில்லை எனக் கேட்டார்.
புகார் குறித்து தங்களுக்கும் தெரியும் எனக்கூறினேன்.
புகார் மனு எங்கு இருக்கிறது என விசாரணை செய்வதாக தெரிவித்தார்.
சார்பு ஆய்வாளரும் பொய் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.

புகாரினை பெறாத போது புகார் மனு எங்கிருக்கும்?

மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்  புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா?

கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடமை தவறிய காவலூழியர்கள் தண்டிக்கப்படுவார்களா?

அல்லது நீதிமன்றம் சென்று தான் நீதி கிடைக்குமா?

காத்திருக்கிறோம்.

புகார்தாரருக்கு எதிரியால் எந்த விதமான அசம்பாவிதம் நடந்தாலும் திருப்பூர் மாநகர காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் அனுப்பிய புகார் மனு இணைக்கப்பட்டுள்ளது.

பதிவு அஞ்சல் ஒப்புகையுடன்

மனுதாரர்  :
N. செந்தில் குமார்,   வயது :23
த/பெ .நடராஜன்
18/421,M.K.P . லே-அவுட்,
சேயூர் ரோடு, சூளை
அவினாசி – 641 654,
திருப்பூர் மாவட்டம்.
செல் : 77080 84736

எதிர் மனுதாரர்கள் :

01 .விக்னேஷ்வரன், வயது : 23
த/பெ.பாண்டி
1-A , முத்தையன் லே-அவுட்
4 வது வீதி,
வெள்ளியங்காடு ,
திருப்பூர்-641604,
செல் : 99767 65562
   
02 .சங்கர் கணேஷ்
இந்து முன்னனி நிர்வாகி மற்றும் இருவர்,
திருப்பூர்.
செல் : 99521 67698

03. அர்ச்சுனன்,
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

04. கார்த்திக்
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

05. பெயர் தெரியவில்லை / அடையாளம் தெரியும்.
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

06. ஜெய சந்திரன்
உதவி ஆய்வாளர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

பெறுநர் :

காவல் ஆணையர் அவர்கள்
மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,
திருப்பூர் மாநகரம்.

அய்யா,
பொருள் :

தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம்
– 2003 க்கு எதிராக கூடுதல் வட்டி வசூலித்ததுடன் எனது இருசக்கர வாகனத்தினை சட்ட விரோதமாக பறித்து சென்ற எதிர்மனுதாரர் : 01 என்பவரும் மேலும், கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் எதிர்மனுதாரர் : 02 என்பவர்கள் மீதும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரினை பெற்றுக் கொள்ளாமல் எதிமனுதாரர் : 01 மற்றும் 02 என்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எதிமனுதாரர்கள் : 03 ,04, 05 மற்றும் 06  என்பவர்கள் மீது குற்ற விசாரணை முறைச்சட்டப் பிரிவு 154(3) இன் கீழ் புகார் மனு.

நான் மேற்காண் முகவரியில் வசித்து வருகிறேன்.
எதிமனுதாரர் : 01 என்பவர் R.V.S.  கலைக்கல்லூரியில் 2013 – 2016 கல்வி ஆண்டில் கல்வி பயின்ற கல்லூரி நண்பர் ஆவார் .

எனது தந்தையின் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைபட்டதால் எதிமனுதாரர் : 01 என்பவரிடம் 25.07.2018 அன்று ரூபாய் 25,000.(இருபத்தைந்தாயிரம்) கடனாக பெற்றேன்.

ஒரு வாரத்தில் திருப்பி கொடுப்பதாக சொன்னேன்.ஆனால் , என்னால் பணத்தினை திருப்பி கொடுக்க முடியவில்லை.

எனவே முதல் தவணையாக ரூபாய் 5000 , இரண்டாம் தவனையாக ரூபாய் 3000 , மூன்றாம் தவணையாக ரூபாய் 5000 , நான்காம் தவணையாக ரூபாய் 5000 , ஐந்தாம் தவணையாக ரூபாய் 5000 , ஆறாம் தவணையாக ரூபாய் 10,000 . ஆக மொத்தம் ஆறு தவணைகளாக ரூபாய் 33,000 திருப்பி கொடுத்து விட்டேன்.

5000 ரூபாய் வங்கி கணக்கு மூலமாகவும் , ஐந்து தவணைகள் நேரடியாகவும் கொடுத்துள்ளேன்.பணம் கடன் கொடுக்கும் போது வட்டி எவ்வளவு என்பது குறித்து எதிமனுதாரர் : 01 என்பவர் எதுவும் கூறவில்லை.

எனினும் அசல் 25,000 த்துடன் ஆறு மாத கால வட்டியாக ரூபாய் 8,000 கொடுத்து விட்டேன்.

இந்நிலையில் 25,000 ரூபாய்க்கு வாரம் 1500 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கான வட்டி மட்டும் 36,000 ரூபாய் ஆகி உள்ளது. 33,000 ரூபாய்தான் கொடுத்திருக்கிறாய், வட்டி 3000 ரூபாய் மற்றும் அசல் 25,000 ரூபாய் கொடுக்கும்படி எதிர்மனுதாரர் : 01 என்பவர் கூறினார்.

எனக்கு இது மிகுந்த அதிர்ச்சி அளித்தது. வாரம் 1500 ரூபாய்க்கு வட்டி கொடுப்பதாக நான் ஒப்புக்கொள்ளவில்லை. 25,000 ரூபாய் அசல் மற்றும் வட்டியாக ரூபாய் 8000 கொடுத்துவிட்டேன். இனிமேல் என்னால் கூடுதல் வட்டி கொடுக்க முடியாது என கூறினேன்.

இந்நிலையில் 20.01.2019 அன்று திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உஷா தியேட்டர் அருகில் நான் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்மனுதாரர் : 01 என்பவர் முத்துப்பாண்டி என்பவருடன் வந்து எனது இருசக்கர வாகனத்தினை பறித்து எடுத்து சென்றுவிட்டனர். முழு பணத்தினையும் கொடுத்தால் தான் இருச்சக்கர வாகனத்தினை கொடுக்க முடியும் என கூறிவிட்டார்.

TN 39 BV 7722 ஹோண்டா HORNET என்ற ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தினை பறித்து சென்றது அதிர்ச்சி அடைந்தேன்.

அதன் பிறகு மூன்று முறை வாகனத்தினை திருப்பி கொடுப்பதாக கூறி உஷா தியேட்டர் அருகே எதிர்மனுதாரர் :01 என்பவர் வரச் சொன்னார். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் செல்லும் போது என்னிடம் வாகனத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.

வாகனத்தினை பறித்து சென்றது குறித்து எனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க வில்லை.வீட்டில் இருப்பவர்கள் கேட்ட போது ஒர்க்ஷாப்பில் இருப்பதாக பொய் சொல்லும் நிலை ஏற்பட்டது.

எனது வாகனத்தினை பறித்து சென்ற குற்றம் நடந்த இடம் திருப்பூர் மாநகர காவல் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்ற காரணத்தினால் தெற்கு காவல் நிலையம் சென்று இது குறித்து 19.02.2019 புகார் அளித்தேன்.

தெற்கு காவல் நிலையத்தில் அப்போது பணியில் இருந்த எதிர்மனுதாரர் :03, கார்த்திக், எதிர்மனுதாரர் :04 அர்ச்சுனன், எதிர்மனுதாரர் : 05 , பெயர் தெரியாத காவலூழியர் மூவரும் எனது புகார் குறித்து கேட்டறிந்தனர்.

எதிர்மனுதாரர் : 01 என்பவரை காவல் நிலையம் வரும்படி
அழைத்தனர் .

எதிர்மனுதாரர் : 01 என்பவருடன் எதிர்மனுதாரர் : 02 என்பவர்களும் வந்திருந்தனர்.
எதிர்மனுதாரர் : 01 என்பவர் நான் பணம் எதுவும் திருப்பி கொடுக்க வில்லை என கூறினார்.
ஆடியோ ஆதாரம் உள்ளது என நான் தெரிவித்த போது பணம் வாங்கியதை ஒப்புகொண்டார்.

எதிர்மனுதாரர் :02 என்பவர்கள்  இந்து முன்னனியை சேர்ந்த அப்பகுதி பிரமுகர்கள்  என சொன்னார்கள்.

எதிர்மனுதாரர் : 02 என்பவர்கள்  காவல் நிலையத்தில் வைத்து என்னை மிரட்டினார்கள் .
வாரம் 1500 ரூபாய் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும் எனக் கூறினார்கள்.
அதற்கு எதிர்மனுதாரர்கள் :03, 04, 05 என்பவர்கள் ஆமாம் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும் அப்போது தான் இருச்சக்கர வாகனம் திருப்பி கொடுப்பார்கள் என்றார்கள் .

என்னால் கூடுதல் வட்டி கொடுக்க பணம் இல்லை என்றேன்.

அதற்கு எதிர்மனுதாரர் : 05 என்பவர் பணம் கொடுக்க முடியாது என்றால் செத்து போ என ஒருமையில் பேசினார் . அவர் தலைமை காவலராக இருக்க கூடும் என நினைக்கிறேன்.

எதிர்மனுதாரர் : 06 என்பவரும் எனது புகார் குறித்து விசாரனை செய்தார்கள்.

கூடுதல் வட்டி வசூலிப்பது தவறு என்றும் இருச்சக்கர வாகனத்தினை வாங்கி என்னிடம் கொடுக்குமாறு எதிர்மனுதாரர் : 04 , அர்ச்சுனன் என்பவரிடம் கூறினார்.

ஆனால் , எதிர்மனுதாரர் : 04  அர்ச்சுனன் என்பவர் எனது வாகனத்தினை திரும்ப பெற்று தரவில்லை.

மற்றொரு காவல் உதவி ஆய்வாளரும் எனது புகாரினை விசாரனை செய்து எதிர்மனுதாரர் : 01 என்பவரிடம் செல்போனில் பேசினார்.

பெர்னாண்டஸ் என்ற காவலூழியரும் எனது புகார் குறித்து கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டார்.சுமார் பத்து தினங்களாக  தெற்கு காவல் நிலையம் அலைந்தேன்.
எனது புகாரின் மீது இன்றைய தினம் வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

எனது புகாரினை பெற்று மனு ரசீது வழங்கவோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ இல்லை.

ஆளாளுக்கு வாய் மொழியாக தான் விசாரணை செய்தார்கள்.
எதிர்மனுதாரர் :02 என்பவர்கள் காவல் நிலையத்தில் வைத்தே கூடுதல் வட்டி கொடுக்க வேண்டும் என்றதை எதிர்மனுதாரர் :03, 04, 05, வேடிக்கை பார்த்தனர்.கந்து வட்டிக்கு ஆதரவாக காவலூழியர்கள் செயல் பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஐம்பது தினங்களாக இரு சக்கர வாகனம் இல்லாமல் எனது வாழ்வாதாரமும் , சுதந்திரமும் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி கும்பலிடம் இருந்து எனது இரு சக்கர வாகனத்தை மீட்டு கொடுங்கள் என காவல் நிலையத்தில் நீதி கேட்டு சென்ற எனக்கு கடமை தவறிய காவல் ஊழியர்களால் நீதி மறுக்கப்பட்டுள்ளது.

எனது புகாரினை பெற்று உரிய மனு ரசீது வழங்கி விசாரணை செய்திருக்க வேண்டும்.

புகார் அளித்த எதிர்மனுதாரர் : 01 என்பவருடன் சம்பந்தமே இல்லாத இந்து முன்னனியை சேர்ந்த மூவர் காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டது ஏன் ?

25,000 கடனுக்கு 36,000 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என காவல் ஊழியர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதின் மூலம் கந்து வட்டி கும்பலுக்கும் காவல் ஊழியர்களூக்கும் தொடர்பு இருக்கும் என இதன் மூலம் தெரிய வருகிறது.  

தெற்கு காவல் நிலையத்தில் எனக்கு நீதி மறுக்கப்பட்ட காரணத்தினால் நீதி வேண்டி மாநகர காவல் ஆணையராகிய தங்களுக்கு குற்ற விசாரணை முறைச்சட்டப் பிரிவு 154(3) இன் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பதிவு அஞ்சல் ஒப்புகையுடன்  இந்த புகார் மனு அனுப்பப்படுகிறது.

எனது புகார் மனு மீது தாங்கள் நேர்மையான காவல் அதிகாரியின் மூலம் விசாரணை செய்து எதிமனுதாரர்கள் :01, மற்றும் எதிர்மனுதாரர் : 02, என்பவர்கள் மீது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 38/2003 இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் ,

என்னிடம் பறித்து சென்ற எனது இரு சக்கர வாகனத்தினை மீட்டு தரக்கோரியும் , கூடுதல் வட்டி வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிந்தும் எதிர்மனுதாரர்கள் : 01, மற்றும் 02 என்பவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் : 03,04,05 மற்றும் 06 என்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.
     
எதிர்மனுதாரர்கள் மீது நான் கூறியுள்ள சங்கதிகளை நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சிய சட்டம் 101 மற்றும் 105 இன் கீழ் எனக்கு இருக்கிறது என்பதினை நான் அறிவேன்.

எனது புகாரினை நிரூபிக்க முடியாமல் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு -211 இன் கீழ் நீதி மன்றம் வழங்கும் தண்டனையை மனதார ஏற்றுக்கொள்வேன் என இந்திய சாட்சியச்சட்டப் பிரிவு 70 இன் கீழ் பிரம்மாணமாக இன்றைய தேதியில் கையொப்பம் செய்துள்ளேன்.

குறிப்பு  : தெற்கு காவல் நிலையத்தில் எனது புகார் சம்பந்தமாக விசாரணை எவ்வாறு நடைபெற்றது என்பதினை காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் அறிய கோருகிறேன்.

நாள்  : 12.03.2019                                 
இடம் : சேயூர்                           

மனுதாரர்
ந.செந்தில் குமார்

நகல் : மாவட்ட ஆட்சித்தலைவர் , திருப்பூர்.

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .......!!

Sunday, 10 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0047 சட்ட விரோத ஆதார் மருத்துவமனை

ஊழல் ஒழிப்பு செய்தி ; LAACO :0047/2019 ;நாள் :15.03.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

நெஞ்சு பொறுக்குதில்லையே! 

அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.
அய்யய்யோ!  இல்லீங்கோ!

ஆதார் மருத்துவமனையும் அறுபது மருத்துவர்களும்!

குற்றவாளிகளுக்கு சட்டமும் நீதியும் பாதுகாப்பு அளிக்கிறதா?

திருப்பூர் மாநகர காவல் துறையும் திருப்பூர் மாவட்ட நீதித்துறையும்
இந்திய மருத்துவ சங்கமும் இணைந்து தலைமை தாங்கி முன்னிலை வகித்து சட்ட விரோத மருத்துவமனை கட்டிடத்தினை திறந்து வைத்திருப்பது சரித்திரத்தின் ஆச்சரிய குறியீடு!

எச்சரிக்கை!
உண்மை சம்பவம்.

திருப்பூர் மாவட்டம் வடக்கு வட்டம் புஷ்பா தியேட்டர் அருகில் அவிநாசி பிரதான சாலையில்
100 படுக்கைகள் கொண்ட உலக தரம் வாய்ந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 60 மருத்துவர்கள் ஒன்றிணைந்து  இப்படி ஒரு சிறப்பு மிகுந்த மருத்துவமனையினை நிறுவி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த மாபெரும் கூட்டு முயற்சியினை வரவேற்கிறோம்.

சர்வதேச தரத்தில் இனி திருப்பூர் மக்களுக்கு சிகிச்சை கிடைக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதியோர்கள்  நடக்க முடியாதவர்களுக்கு வீட்டிலேயே வந்து ஹோம் ஹேர் சிகிச்சை வேறு அளிக்க இருக்கிறார்களாம்.

திருப்பூரில் சட்ட விரோதமாக கட்டப்பட்டதா?   ஆதார் பல்நோக்கு  சிறப்பு மருத்துவமனை கட்டிடம்!
ஆம்.

திருப்பூர் மாநகராட்சி கட்டிட அனுமதி பெற்றுள்ளார்களா?
ஆம்.

மாநகராட்சி வரைபட அனுமதி வழங்கப்பட்ட அளவுகளில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா?
இல்லை.

கட்டிடம் கட்ட அனுமதி பெற்றது தரை தளத்தில் மட்டும் 27×59.3= 1601சதுர அடி
அப்படியே ஐந்து தளத்திற்கும் அனுமதி பெற்றிருந்தால் கூட 1601×5= 8 ஆயிரத்து ஐந்து  சதுரடி தான்.

ஆனால் கட்டப்பட்டிருப்பதோ சுமார் 30 ஆயிரம் சதுர அடிக்கு மேல்.

தரை தளத்தில் மட்டும் கட்டிடத்தின் வலது புறத்தில் கொஞ்சம் காலி இடம்.

பின் பகுதியில் மனையின் கொஞ்சம் கோணலான பகுதியில்  பயன் படுத்த முடியாத  காலி இடம்.

அண்டர் கிரவுண்டு தரை தளத்துடன் கூடிய நான்கு தளம்  தார்சு கட்டிடம்.

ஐந்தாவது தளத்தில் சீட்டிலான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளம் முதல் ஐந்தாவது தளம் வரையில்  மனையின் மொத்த அளவில் நான்கு புறமும் ஒரு அடி காலி இடம் கூட இல்லாமல் முழுவதும் ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

கட்டிடத்தினை சுற்றிலும் தேவையானஅளவு காலி இடம் உள்ளதா?
வரை படத்திலும் அரசு ஆவணங்களிலும் உள்ளது .

ஆனால் நாம் நேரில் பார்த்தபோது இல்லை.

மருத்துவமனைக்குண்டான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா?
இல்லை.

தீ விபத்து ஏற்படும் காலங்களில் தீயணைப்பு வாகனம் கட்டிடத்தை சுற்றி வந்து தீயிணை அணைக்க முடியுமா?
முடியாது

தீ விபத்து மின் விபத்து உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ஊழியர்கள் மருத்துவமனை கட்டிடத்தினை சுற்றி வந்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியுமா?
முடியாது.

100 படுக்கைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் தீ விபத்து காலங்களில் அவசர வழி வழியாக வெளியேற முடியுமா?
முடியாது.

80 அடி அகலம் கொண்ட அவிநாசி  பிரதான சாலையில் இருந்து ஏழு மீட்டர் காலி இடம் விட்டு மருத்துவ மனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா?
இல்லை.

கட்டிடம் கட்ட அல்லது மருத்துவமளை கட்டிடம் செயல்பட யாதொரு தடையும் இல்லை என தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையின் தடையின்மை சான்று  பெற்றிருப்பார்களா?
ஆம்.பெற்றிருக்க கூடும்.

சுகாதாரத்துறை உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளும் பெற்றிருப்பாகளா?
ஆம். பெற்றிருக்க கூடும்.

மாநகராட்சி பொறியாளர்களுக்கு கைமாறிய லஞ்சம் எவ்வளவு?
அவர்களை தான் கேட்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையர் எவ்வாறு அனுமதி வழங்கினார்?

வரை படத்தில் உன்ன படி கட்டிடம் கட்டத்தான் அனுமதி வழங்கி இருக்க கூடும். 

உள்ளுர் திட்ட குழுமத்தில் அனுமதி பெற்றிருப்பார்களா?
ஆம்./இல்லை.
அல்லது ஏதாவது ஒன்று.
பெற்றிருந்தால் அதுவும் சட்ட விரோதமே.

10.03.2019 அன்று இவ்வளவு விதிமுறை மீறல்களுடன் தெரிந்தே மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள் நோயாளிகளுக்கு  எந்த விதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லாத வகையிலும் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடை பெற்றுள்ளது.

இது சொர்க்கத்தின் திறப்பு விழா அல்ல!
மரண வாசலின்  திறப்பு விழா!

குற்றம் நடந்தது என்ன?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என சட்டத்தை பேணி காக்கும் தமிழக காவல் துறையின் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் IPS அவர்கள் சட்ட விரோதமாக கட்ட பட்ட மருத்துவமனை கட்டிட திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கியுள்ளார்.

இது திருப்பூர் மாநகர காவல் துறைக்கு பெருத்த அவமானம்.

இதன் மூலம் சட்ட விரோதமாக செயல் படுபவர்கள்  இனி துணிச்சலுடன் வீறு நடை போடுவார்கள்.

நீதியை நிலை நாட்டும் நீதி துறையில் திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியாற்றும்  முகம்மது ஜியாபுதீன் BL சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு முன்னிலை வகித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் சட்ட விரோதமான கட்டிடங்களை தடை செய்து வரும் நிலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிட த்தினை திருப்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி முன்னிலையில் திறப்பு  விழா நடை பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஐ.எம்.ஏ முன்னால் தலைவர்  முருகநாதன் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள்  யார்? யார்

1.கட்டிட அனுமதி வழங்கி விட்டு அனுமதி பெற்ற அளவுகளில் கட்டிடம் கட்டப்படுகிறதா என்பதினை கண்காணிக்க தவறிய திருப்பூர் மாநகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் சிவக்குமார்.

திருப்பூரில் சட்ட விரோதமாக கட்டப்படும் கட்டிடங்கள் பெருக காரணம் மாநகராட்சி சட்டம் மற்றும் விதிகளை செயல் படுத்த தவறிய மாநகராட்சி நிர்வாகம்.

இதனால் தான் சிறந்த மாநகராட்சி விருது பெற்றுள்ளார்களா? 

ஒரு வீடு கட்ட அனுமதி வழங்கினாலே குறைந்த பட்சம் சுற்றிலும் ஐந்து அடி காலி இடம் விட்டு கட்ட சொல்லும் மாநகராட்சி
நிர்வாகம் இதனை ஏன் கண்டு கொள்ள வில்லை!

இவர்களுக்கு மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லை.

புகார் அளித்தால் மட்டும் மாநகராட்சி சட்டத்திற்கு எதிராக சட்ட  விரோதமாக  கட்டப்பட்ட கட்டிடத்திற்கும் அபராதம் விதித்து அனுமதி அளித்து விடுவார்கள்.

நமது குற்றச்சாட்டினை ஏற்று அனுமதி பெறாத கட்டிடங்களை இடித்து அப்புற படுத்துவார்களா?

2. திருப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர்!

இவர்கள் வரை படத்தினை பார்த்து தடையின்மை சான்று வழங்கி விடுகின்றனர்.

நிலைய அலுவலர் நேரில் ஆய்வுக்கு சென்று விதிமுறைகள் சரியாக கடை பிடிக்கப்பட்டுள்ளதாக பொய்யான ஆய்வறிக்கை வழங்கி விடுகின்றனர்.

எந்த விதமான விதி முறை மீறலாக இருந்தாலும் தடையின்மை சான்று வழங்கி விடுவார்கள்.

வாங்கிய லஞ்சத்திற்கு விசுவாசமாய் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் நேர்மையாக செயல் பட்டால் மட்டுமே சட்ட விரோதமாக எவனும் கட்டிடம் கட்ட மாட்டான்.

3.மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார்.

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்குவது சட்ட விரோதம் என உளவு துறையினர் ஏன் இவருக்கு தகவல் கொடுக்க வில்லை? அல்லது
தெரிந்தே தலைமை தாங்கினாரா?

அல்லது அரசியல் கட்சியின் நிர்பந்தமா?

அவர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

4.மாவட்ட கூடுதல் நீதிபதி முகம்மது ஜியா புதின்!

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு எப்படி முன்னிலை வகித்தார்.?

இவர் நீதியை குழி தோண்டி புதைத்து விட்டார்.அநீதிக்கு ஆதரவாக செயல் பட்டுள்ளார்.

இவருக்கு நீதிதுறையில் வேலை இல்லையா?

சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தினை இடிக்க வழக்கு போட்டால் இடிக்க உத்தரவிடுவாரா?
அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.

5.ஐ.எம்.ஏ முன்னால் தலைவர் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இவருக்கு இந்திய மருத்துவ கவுன்சில்  மற்றும் விதி முறைகள் தெரியாமல் போனது ஏன்?

6.சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஆதார் மருத்துவமனையின் பங்குதாரர்களான மருத்துவர்கள்.

இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக சட்ட விரோதமாக மருத்துவமனை நடத்துபவர்களே!

இவர்களிடம் எப்படி நோயாளிகளின் பாதுகாப்பினை உறுதி படுத்த முடியும்.

ஒரு சிறிய அறுவை சிகிச்சை என்றாலும் கூட அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் குறை பாடுகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் மருத்துவரோ மருத்துவமனையோ எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது என உறுதி மொழி படிவத்தில் கையொப்பம் பெற்று தங்களை காப்பாற்றி கொள்கிறார்களே?

ஆதார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முழு அளவு பாதுகாப்பு உள்ளது என உறுதி மொழி வழங்க இவர்கள் தயாரா?

இவர்களுக்கு பணம்! பணம்! இதுவே குறிக்கோள்.

நமது குற்றச்சாட்டிற்கு பதில் அளிப்பார்களா?

7.மாவட்ட செயல் துறை நடுவராகிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் .K.S .பழனிச்சாமி

பாதுகாப்பில்லாத சட்ட விரோத கட்டிடம் என புகார் அளித்தால் செவிடன் காதில் ஊதிய சங்காய்
புகார் மனுக்கள் செயல் இழந்து கிடக்கும். இவரையே சுற்றி சுற்றி வரும்.முடிவில் கிடப்பில் போடப்படும்.

மாணவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் மாநகராட்சி அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டார்.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் மூன்று.
1.லஞ்சம்!
2.லஞ்சம்!
3. லஞ்சம்! மட்டுமே?

கடமை தவறிய கேடு கெட்ட லஞ்சம் வாங்கும் அரசூழியர்கள் இருக்கும் வரையில் சட்ட விரோதமாக செயல் படுபவர்களை தடுக்க முடியாது.

ஆதார் மருத்துவமனை அறுபது மருத்துவர்களின் பங்களிப்புடன்  செயல் பட இருக்கிறது எனவும்,

தீபா எலும்பு முறிவு மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் செந்தில் குமாருக்கு சொந்தமானது எனவும்

ஓ.பி.எஸ் பினாமி எனவும்
மக்கள் பல் வேறு விதமாக பேசிக்கொள்கின்றனர்.

எது எப்படி இருப்பினும்
ஓ.பி.எஸ்ஸோ இ.பி.எஸ்ஸோ யாருடைய பினாமியாக இருந்தாலும் குற்றம் குற்றமே!

கோரிக்கை!
உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து சட்ட விரோதமாக செயல்  படுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஆதார் மருத்துவமனை கட்டிடத்திற்கு தடை விதித்து இவர்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை பாதுகாக்கக்கோருகிறோம்.

எந்த ஒரு குற்றமும்  நடைபெறும் முன்னர் அதனை தடுக்கும் கடமையும் பொறுப்பும்  நமக்கு இருப்பதினால்
பொது நலனில் அக்கறை கொண்டு இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 19 (1) அ இன் கீழ் இச்செய்தியினை பகிரங்கமாக  வெளியிடுகிறோம் .

திருப்பூர் வாழ் மக்களே கவனம்.
சட்ட விரோதமாக கட்டப்பட்ட  மருத்துவமனை கட்டிடம்.
உள் நோயாளிகளுக்கு பாதுகாப்பில்லை!
இதனை தடுக்க தவறிய கடமை தவறிய அரசூழியர்கள்!

பொது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறலாமா?  வேண்டாமா? என்பதினை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இணைப்பு :காணொளி மற்றும் வரைபடம் பத்திரிக்கை செய்தி.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ..........!!