Sunday 28 July 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0061

RTE இலவச கல்விக்கு  கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தது குறித்து தமிழ் நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் நேரடி விசாரணை!

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO/0061/2019 :நாள் :28.07.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவம்.

திருப்பூர் எம். எஸ். நகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு கொண்டிருந்த விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மூடப்பட்டு விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால்  மழலையர் பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் சுமார் 68 நலிவடைந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு  இனி மேல் இலவச கல்வி பயில இயலாது எனவும் கட்டணம் செலுத்தி தான் கல்வி பயில வேண்டும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்து விட்ட காரணத்தினால் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சிலர் சட்ட உதவியினை நாடி  சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பினை தொடர்பு கொண்டனர்.

நமது வழி காட்டுதல் படி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சார்பாக  திருப்பூர் மாவட்ட கல்வித்துறை  மற்றும் அனைத்து கல்வி துறை இயக்குநர்களுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.

ஆனால் திருப்பூர் மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாந்தி மற்றும் தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் சாந்தா  தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைவரும் சட்ட விரோதமாக செயல்படும் பள்ளிக்கு ஆதரவாகவும், கூட்டு சதியில் ஈடுபட்டு குற்றவாளிக்கு உடந்தையாகவும், செயல் பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

இரண்டு மாத காலமாக குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வில்லை.

பல பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தால் மிரட்டப்பட்டனர்.

40,000. 00 ரூபாய் கேட்ட பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் 17,000.00 போக மீதி இதர கட்டணம்   23,000.00 செலுத்த கோரினர்.

டியூசன் பீஸ் போக இதர கட்டணங்களை செலுத்த வேண்டும் இல்லையெனில் ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங் உள்ளிட்ட இதர கல்விகள் வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு நோட்டு புத்தகங்களுக்கான கட்டணத்தினை மட்டும் செலுத்த கோரியது பள்ளி நிர்வாகம்.

இதற்கு திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி சாமரம் வீசினார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி அவர்களின் நேரடி கவனத்திற்கு பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் அளித்தும்  வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், கோட்டாட்சியர் என  முறையற்ற  பல கட்ட விசாரணைகள் நடை பெற்ற போதும்   மாவட்ட செயல் துறை நடுவரின் கீழ் இயங்கி வரும் மாவட்ட நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு இன்று வரையிலும் நீதி கிடைக்க வில்லை.

தமிழ் நாடு RTE விதிகள் - 2011 பிரிவு 5 இல்   இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகம், சீருடை, எழுது பொருட்கள் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளதே?

இதற்கு கல்வி துறை ஏன் பதில் அளிக்க வில்லை?

இலவச கல்வி என்ற பெயரில் புகார் அளித்த பெற்றோர்களிடம்  மட்டும் சுமார் 5,00000
ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்துள்ளார்களே?

அப்படியானால் மொத்த அனைத்து பெற்றோர்களிடம் சுமார் 30,00000
ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளார்களே.?

இலவச கல்வியா?
மானிய கல்வியா?

இதற்கு பொறுப்பு வகிக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல் இழந்து விட்ட காரணத்தினால் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட திருப்பூர் விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை செய்யும் அவல நிலை.
ஏற்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இணை இயக்குநர் அவர்களின் நேரடி விசாரணை

இடம் : திருப்பூர் விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி
(மேல்நிலைப் பள்ளி என கடமை தவறிய முதன்மை கல்வி அலுவலரின் கடிதத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது)
எம். எஸ்  நகர்
திருப்பூர்- 641 607

நாள் :29.07.2019

நேரம் :காலை 10. 30 மணி

விசாரணைக்கான காரணம் :

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் கல்வி பயிலும் ஏழை எளிய வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதாகவும் மற்றும் கூடுதலாக சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் அனைத்தையும்  திரும்பப் பெற்றுத் தரக்கோரி 12  பெற்றோர்கள்  விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மீது அளித்த புகார் மனு மீது நேரடி  விசாரணை நடை பெற இருப்பதாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடிதம்.

விசாரணைக்கான அழைப்பாணை கடிதம் விபரம் அசலாக கீழே தரப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்:
ந க எண் :7112/ஆ3 /2019
நாள்: 07. 2019

பொருள்:   புகார் - திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் கல்வி மாவட்டம் - விகாஸ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 சட்டப்பிரிவு 12 ( 1) C இன் கீழ் கல்வி பயிலும் மாணவருக்கு இலவச கல்வி மறுக்கப்படுவதாகவும் சட்ட விரோதமாக அதிகப்படியான வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற்றுத்தர  கோரியும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் பெறப்பட்டுள்ளது சார்பாக, 

பார்வை: தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள்) அவர்களின் செயல்முறைகள் ந. க. எண் :10122 / எப்1/2019
நாள் :21.06.2019

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் கல்வி மாவட்டம் விகாஸ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 சட்டப்பிரிவு 12 (1) C இன் கீழ்  இலவச கல்வி மறுக்கப்படுவதாகவும்,

சட்டவிரோதமாக அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர தெரிவிக்கப்பட்ட புகார் சார்பாக,
29.07.2019  அன்று காலை  10.30 மணிக்கு விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களால் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது   

மேற்படி விசாரணையில் தங்கள் தவறாது கலந்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

முதன்மை கல்வி அலுவலருக்காக,
திருப்பூர்
25.07.2019

பெறுநர்: 
1.திரு. M. சஞ்சீவ்குமார்
40 V. R. P நகர்
M. S. நகர் வடக்கு
திருப்பூர்- 641 607

2.முதல்வர் /செயலர் /தாளாளர்
விகாஸ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

நகல்:
1.மாவட்ட கல்வி அலுவலர் திருப்பூர்

2.வட்டார கல்வி அலுவலர் திருப்பூர் வடக்கு

பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அவர்களின் விசாரணையிலாவது பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நீதி கிடைக்குமா?

நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ் திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள்
தொடரும்.......

5 comments:

  1. Interested to enter the world of Gemini? Do you want to open your Gemini account? If yes, take the stepwise assistance from the customer experts who have been working in this domain since ages and know now all the solutions and tricks to overcome from any error. Just dial Gemini support number and get instant and ultimate solutions from the experts. The experts are always ready to guide users irrespective of time. With 24*7-365 days availability in a year without any hold, the experts never fail to deliver their top-level services to the users.

    ReplyDelete
  2. Is your login id got hacked? One of the major issues faced by majority of the users is hacking errors. Despite the security, hackers manage to hack the account and steal the information. There could be various reasons for it like weak password, 2fa protection, account login protection etc. if you ever encounter hacking errors, feel free to call on gemini support phone number and get in touch with the experts for ultimate solutions. The customer care is available all day and night to provide felicitous assistance to you.
    https://www.cryptophonesupport.com/exchange/gemini/

    ReplyDelete

  3. blockchain is the known and popular name in the market because of the services and features they provide to the customers. blockchain helpline number is a service that provides assistance to the users if they encounter any Timejacking Attacks issues or errors. The customer experts have a team of certified individuals who are capable of fixing every single complexity from normal to higher. They are toll-free who resolved your issues instantly and is easily available anytime from any part of the world. They work day and night to give best results to the users by their services.
    https://www.cryptophonesupport.com/wallet/blockchain/

    ReplyDelete
  4. trezor is a worldwide payment system cryptocurrency. Among the numbers of available communication means, trezor holds a unique place. It has numerous services to offer but still can’t withdraw fund in trezor that cause troubles. You can get rid of all the issues from the roots by seeking the aid from the adept experts via phone by dialing trezor customer support helpline number. The engineers put their 100 % to provide satisfactory and accurate results to the users at hand.

    https://www.cryptowalletsupport.com/trezor-support-number/

    ReplyDelete
  5. Are you having trouble in receiving the bitcoin from other wallets in Blockchain account? Is the error troubling you and there’s nothing you can do about it? If you don’t know how to handle all these queries and looking for solutions, you can always ask for the team to get solutions that are easy to execute. Connect with the team for better results and users can have conversation with the team anytime for providing quality solutions via calling on Blockchain support phone number (833) 993-0690. Whenever you are in doubt, you can approach the team and avail quality-driven solution.

    More info visit here-
    Blockchain support number
    Crypto customer support number

    ReplyDelete