Sunday 21 July 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0058

*யார் இந்த ஆண்டவர்  ராமசாமி*?

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0058/2019 :நாள் :17.07 2019*

*குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன*?

*உண்மை சம்பவங்கள்*

*குற்றவாளிகள்  யார்* ?

இதோ
*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைக்காக போராடி வரும் ஒரு பெற்றோரின் நெஞ்சம் நெகிழ வைக்கும் கண்ணீர்  கடிதம்*

*திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவருக்கு வங்கி வரைவோலை  அனுப்பப்பட்ட நாளிலேயே நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர் மூலம் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது*.
இத்துடன் அவரது கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார் போலும்!

சபாஷ்!

புகாரில் குறிப்பிட்டுள்ள எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு  இருக்கிறதா? என்ன?

*திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வங்கி வரைவோலையை வாங்கி வைத்து  கொண்டு சிறப்பு பூஜை ஏதேனும் செய்கிறாரா*?

*கல்வி தந்தை என தன்னை தானே விளம்பர படுத்தி கொண்ட விகாஸ் வித்யாலயா குரூப்ஸ் ஆப் பள்ளிகளின்  நிர்வாகி  ஆண்டவர் டெக்ஸ்டைல் ராமசாமி பெரிய அப்பா டக்கரா? என்ன*?

ஆம்.

*என்ன கலெக்டர் கிட்ட போய் புகார் செய்கிறாயா*?
செய்.

*பத்திரிக்கையில் ஒரு நாள் செய்தி வருமா*!
வந்துட்டு போகட்டும் 

*எதை பத்தியும் நான் கவலை பட மாட்டேன்*.

ஏனென்றால்.............!!

*ஒட்டு மொத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக  செயல் பட காரணம் என்ன*?

இந்த ஆண்டவர் ராமசாமி யார் என்று இப்போது தெரிந்திருக்குமே?

*பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கும்  குழந்தைகளுக்கும்  நீதி மறுக்கப்படுவது எதனால்*?

*நீதிமன்றம் சென்று தான் கல்வி உரிமையை பெறும் அவல நிலையில் ஏழை எளிய மக்கள்*.

அய்யகோ!
*நெஞ்சு பொறுக்குதில்லையே*!!

*கல்வி அவசர மனு*
😡😡😡😡😡😡😡😡😡
                             
மனுதாரர் :
K. சங்கர்
1/51.A முருகானந்தபுரம் முதல் வீதி
புதிய பேருந்து நிலையம்
பி. என் ரோடு,
திருப்பூர்- 641 602

எதிர்மனுதாரர்கள்:
01.N. ரேணுகாதேவி / பள்ளி முதல்வர்
மாதேஸ்வரன் / பள்ளி செயலாளர்
நிறுவன தலைவர் ஆண்டவர் ராமசாமி
விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட
விகாஸ்  வித்யாலயா ஜூனியர் மெட்ரிக்குலேசன் பள்ளி
எம். எஸ். நகர்,
திருப்பூர் - 641 607

02. சாந்தி
முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் திருப்பூர்
தற்போதைய திருச்சி மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் திருச்சி மாவட்டம்.

03.இயக்குநர் அவர்கள்
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்
DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம் பாக்கம்
சென்னை- 600 006

04.மாநில திட்ட இயக்குநர் அவர்கள் (SSA)
அனைவருக்கும் கல்வி இயக்ககம்
DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை - 600 006

05.இயக்குநர் அவர்கள்
தொடக்கப் பள்ளிகள் இயக்குநரகம் 
DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை - 600 006

06. அரசு முதன்மை செயலாளர்  அவர்கள்
பள்ளிக் கல்வித்துறை
தலைமை செயலகம்
சென்னை - 600 009

07 அழகர்சாமி AEO
வட்டார கல்வி அலுவலர்
திருப்பூர் தெற்கு

08. விஸ்வநாதன் AEO
வட்டார கல்வி அலுவலர்
திருப்பூர் வடக்கு -641 601

09. ராஜா
மாவட்ட கல்வி அலுவலர்
திருப்பூர்-641 604

10. பெ. சாந்தா
முதன்மைக் கல்வி அலுவலர்
முதன்மை கல்வி அலுவலகம்
திருப்பூர் -641 604

11.கோட்டாட்சியரின்  நேர்முக உதவியாளர்
வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம்
திருப்பூர் -641 601

12. S. செண்பகவல்லி
கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
திருப்பூர் -641 601

13 .ஜெயக்குமார்
வட்டாட்சியர் 
வட்டாட்சியர் அலுவலகம்
திருப்பூர் வடக்கு -641 601

பெறுநர் :
K..S. பழனிச்சாமி
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர்
மற்றும்   மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருப்பூர் - 641 604

பொருள் :
RTE இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் எனது மகன்கள் S. சித்தார்த் மற்றும் .S. அர்ஜுன்   என்பவர்களுக்கு  நோட்டு    புத்தகங்களுக்கான  கட்டணமாக சுமார் 1500+ 1500 ரூபாய்க்கான வங்கி வரைவோலை  எடுத்து தங்களுக்கு இத்துடன் அசலாக  இணைத்து பதிவஞ்சலில் அனுப்பி உள்ளேன்.  

எதிர்மனுதாரர்: 01 என்பவரிடம் கொடுத்து எனது  இரு மகன்களுக்கு நோட்டு புத்தகங்கள்  பெற்று  கொடுத்து தொடர்ந்து இலவச கல்வியை பயிலவும்  எதிர் மனுதாரர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவு  2(4) இன் கீழ் முறையீடு,

பார்வை :  
01.  17. 06 .2019 அன்று மக்கள் குறை தீர்க்கும் முகாமில்   கொடுக்கப்பட்ட மனு நகல்

02.  வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் கடித
ந. க.1639/2019/அ1 நாள் :19.06.2019

03 .கர்நாடகா வங்கி
வரைவோலை எண் :77814
மற்றும் 77815  நாள் :   03.07.2019 தொகை:  1500+1500=3000

மனுதாரர் ஆகிய நான்  மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.

எதிர்மனுதாரர்  :01 என்பவரது  பள்ளியில் எனது இரு மகன்கள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 இன் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். .

2019 - 20 கல்வி ஆண்டில் சுமார்
80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று  எதிர்மனுதாரர் :01 என்பவர் கூறிய காரணத்தினால் எதிர்மனுதாரர் :03 மெட்ரிக் பள்ளி இயக்குனர் எதிர்மனுதாரர் 04.அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் எதிர்மனுதாரர் :05. தொடக்கப் பள்ளிகள் இயக்குனர்  எதிர்மனுதாரர் :06  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகியவர்களுக்கு 08.06.2019 அன்று புகார் மனு அனுப்பி இருந்தேன்.

கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் அவர்களுக்கு புகார் மனு அனுப்பியதற்கு எனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி எதிர்மனுதாரர் :05 என்பவருக்கு அனுப்பி அவரது கடமையினை செவ்வனே செய்துள்ளார்கள்.

இன்றைய தினம் வரையிலும் எனது புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுத்து நோட்டு புத்தகங்கள் பெற்று தரவில்லை.

இந்நிலையில் எதிர்மனுதாரர் :01 என்பவர் 11.06.2019 அன்று மாலை 6.00 மணிக்கு பள்ளிக்கு வருமாறு அழைத்தார்.

அங்கு சென்ற போது சுமார் 7.00 மணி அளவில் எதிர்மனுதாரர் :02 என்பவர் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு வந்தார்.

அனுமதி இன்றி செயல் பட்ட 17 பள்ளிகள் மூடப்பட்டது. அதில் விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும் ஓன்று.
பள்ளி மூடப்பட்டதால் RTE  மாணவர்களுக்கு சலுகை எதுவும் கிடைக்காது.

ஏதோ பள்ளி சேர்மனுக்கு விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி இருப்பதினால் உங்கள் குழந்தைகளை வெளியேற்றாமல் பள்ளிக்குள் அனுமதி அளித்துள்ளார்.

டியூசன் பீஸ் மட்டும் தான் அரசு வழங்கும். நோட்டு புத்தகங்கள்  எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்க்கு பள்ளி நிர்வாகம் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டாலும் செலுத்தி தான் ஆக வேண்டும் என்றார்.

இந்நிலையில்  சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் எதிர்மனுதாரர் : 01 என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட எதிர் மனுதாரர்: 02 என்பவர் மீதும் பார்வை :01 இல் காணும் புகார் கடிதத்தினை குறைதீர்ப்பு நாளில் தங்களிடம் நேரில் கொடுத்தேன். 

தாங்கள் இரண்டு தினங்களில் விசாரணை செய்து நோட்டு புத்தகங்கள் வழங்குவதாக தெரிவித்தீர்கள்.

18. 6. 2019 அன்று எதிர்மனுதாரர் :07  என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த  புகார் மனு மீது விசாரணை செய்வதற்காக மதியம் 1.00 மணிக்கு   பள்ளிக்கு வரும்படி அழைத்தார்கள்.

திடீரென்று அழைத்துள்ளீர்கள். மாலை 4.00 மணிக்கு வருகிறேன் என தெரிவித்து 4.00 மணிக்கு
எதிர்மனுதாரர் :01 என்பவரது பள்ளிக்கு சென்றேன்.

அங்கு சென்ற போது  RTE சட்டம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் நோட்டு புத்தகங்கள் இலவசம் என்ற அரசாணை ஏதாவது இருந்தால் கொடுங்கள் படித்து பார்க்கிறோம் என எதிர்மனுதாரர்கள் 7 மற்றும் 8 தெரிவித்தார்கள்.

மற்றபடி பள்ளி நிர்வாகத்திற்கு  இதர கட்டணங்களை செலுத்தி தான் ஆக வேண்டும் என கூறினார்கள். இவர்கள் கல்வி துறைக்கு தகுதியற்ற நபர்கள் என இதன் மூலம் தெரிய வருகிறது.

நான் செலுத்த  முடியாது என கூறினேன்.

மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றனர்.

19  06 .2019  அன்று எதிர்மனுதாரர் 7 மற்றும் 8  என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் நீங்கள் கொடுத்த புகார் மனு மீது  வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகும்படி தெரிவித்தார்.

அதற்கு நாங்கள் முறையான அழைப்பாணை அனுப்பினால் விசாரணைக்கு கலந்து கொள்வதாக தெரிவித்தேன்.
வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் தெரிவிக்கிறேன் என்றார்

எதிர்மனுதாரர்:11 என்பவர்  அழைத்து விசாரணை கடிதம் அனுப்பினால் தான் வருவீர்களா? விசாரணை  கடிதம் எதுவும் அனுப்ப முடியாது என தெரிவித்து விட்டார்.

இதனை அடுத்து 19.06.2019  அன்று தேதியிட்ட  வருவாய் கோட்டாட்சியர் விசாரணை  கடிதம் 20.06.2019 அன்று கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிடைத்தது.

அதில் 27. 06.2019 அன்று மாலை 3 மணி அளவில் விசாரணை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

அன்றைய தினம் அந்த விசாரணையில் கலந்து கொண்டேன்.

அங்கே விசாரணையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஆஜராகவில்லை.

எதிர்மனுதாரர்கள் : 7 & 8 மற்றும் 9  ஆஜராகினர்.
எதிர்மனுதாரர் :01 பள்ளி முதல்வர்/ பள்ளி செயலாளர் / நிறுவன தலைவர் ஆண்டவர் ராமசாமி மற்றும் அடையாளம் தெரியாத பத்துக்கும் மேற்பட்டவர்களுடன் வந்தனர்.

எதிர்மனுதாரர் :12 என்பவர் விசாரணைக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறுமாறு தெரிவித்தார்.

ஆனால் எதிர்மனுதாரர் :01 ஆண்டவர் ராமசாமி அவருடன் வந்த வழக்கறிஞர் வெளியேற முடியாது இங்கேயே தான் இருப்போம் என தெரிவித்தனர்.

அதற்கு எதிர்மனுதாரர் :12 அலுவலக  பாது காவலரை அழைத்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

நாங்கள் கொண்டு சென்ற  ஆவணங்கள்  எதுவும் எதிர்மனுதாரர் :12  வாங்கிப் பார்த்து விசாரணை மேற்கொள்ள வில்லை 

Extra Curricular Activities என தெரிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணங்களான  ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங் ,ஸ்மார்ட் கிளாஸ், ஹிந்தி உள்ளிட்டவைகள் கல்வி சம்மந்தப்பட்டது என்றும் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் இதர  பயிற்சிகளுக்கான   கட்டணங்களை பெற்றோர் விருப்ப பட்டால்  செலுத்தலாம்

நோட்டு புத்தகங்களுக்கான கட்டணம் எவ்வளவு என தெரிவித்து அதை மட்டும் பெற்றுக் கொள்ளும்படி கூறினார்.

அதற்கு எதிர்மனுதாரர் :01 என்பவர் இப்பொழுதே  எனது குழந்தைக்கு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் எதுவும் தேவையில்லை என உடனடியாக கடிதம் எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்தினார்.

நான் கடிதம் எதுவும் எழுதி கொடுக்க முடியாது என கூறி கூறிவிட்டேன்.

அவசர வேலை நிமித்தமாக எதிர்மனுதாரர் :12 வெளியில் செல்ல இருப்பதால் மனுதாரர்கள் செலுத்த வேண்டிய  கட்டண விபரங்களை எதிர்மனுதாரர்கள் :7 & 8 மற்றும்  9  என்பவர்கள் எதிர்மனுதாரர் :01 என்பவரிடமிருந்து வாங்கி கொடுக்கும் படி   கூறி சென்று விட்டார்.

ஆனால் எதிர்மனுதாரர் :01 என்பவர் கட்டண விபரங்களை வழங்க மறுத்து விட்டார்.

எதிர் மனுதாரர்கள் 7 & 8 மற்றும் 9 என்பவர்களிடம்  தெரிவித்த போது எதிர்மனுதாரர் :9 என்பவர் பள்ளி நிர்வாகத்திடம் போய் கேட்கும் படி கூறினார்.

எதிர் மனுதாரர் :12 என்பவரிடம் இது குறித்து தெரிவித்த போது  கல்வி அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்றார்.

ஆனால் இன்றைய தினம்  வரையிலும் எனது மகனுக்கு நோட்டு புத்தகங்கள் எதுவும் வழங்காமல் பள்ளி நிர்வாகம் அலைகழித்து வருகிறது.

எதிர்மனுதாரர் :13 என்பவர் எதிர்மனுதாரர் :12 என்பவரின்  விசாரணையில் கலந்து கொள்ளாமல் நிராகரித்து விட்டார்

சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு எதிர்மனுதாரர்கள் 2 முதல் 13 வரை அனைவரும் சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் .

பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்கவில்லை .
எனது மகன்களின் கட்டாய கல்வி உரிமை  திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது.

இதனால் நானும் எனது குடும்பமும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளோம்.

இதற்கு முழுக்க முழுக்க கடமை தவறிய எதிர்மனுதாரர்:10 என்பவர்  தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாடு  RTE  விதிகள்  2011 பிரிவு 5 இல் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் சீருடைகள் இலவசம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து எதிர்மனுதாரர் :01 என்பவர் பல்வேறு கட்டணங்களை சட்ட விரோதமாக வசூலித்து வருகிறார்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை தவறிய கல்வி அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

*நோட்டு புத்தகங்களுக்கான  கல்வி கட்டணங்களை எதிர்மனுதாரர் :01 என்பவர் தெரிவிக்காத காரணத்தினால் பார்வை: 3 இல் காணும் 1500+1500  ரூபாய்க்கான வங்கி வரைவோலையை  இத்துடன் இணைத்து தங்களுக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி உள்ளேன்*.

*தாங்கள் உடனடியாக இந்த வங்கி வரைவோலைகளை  எதிர்மனுதாரர்:01  பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்து எனது மகன்களுக்கு நோட்டு புத்தகங்கள் பெற்றுக் கொடுத்து கல்வி உரிமையை மீட்டு கொடுக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்*

*எனது  இந்த அவசர கோரிக்கையினை  மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர்/ மாவட்ட ஆட்சியர் /மாவட்ட செயல்துறை நடுவர் என பல்வேறு பதவி வகிக்கும்  தங்களால் நிராகரிக்கப்பட்டால்  நீதி வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணம் பெறுவதினை  தவிர பாதிக்கப்பட்ட எனக்கு வேறு வழி இருப்பதாய் தெரிய வில்லை  என்பதினை  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986  மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993   மற்றும் குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 2 (4)  இன் கீழ் இக்கடிதம் பதிவஞ்சல்  ஒப்புகையுடன் சார்பு செய்யப்படுகிறது என்பதினை தெரிவித்து கொள்கிறேன்*

இணைப்பு பக்கங்கள்:  05 மற்றும் வங்கி வரைவோலைகள் அசல்      

நகல் தக்க மேல் நடவடிக்கைக்காக :

தமிழக முதல்வர் /தலைமை செயலகம்

மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் _ டெல்லி.

தகவலுக்காக :
எதிர்மனுதாரர்கள் 1 முதல் 13  வரை.
💥💥💥💥💥💥💥💥💥
✍  *நாஞ்சில்*
*கோ. கிருஷ்ணன்* செய்தியாளர்
" *ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*" திருப்பூர் மாவட்டம்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.... 🙏

No comments:

Post a Comment