Monday 22 July 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0060

*நைருதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் கல்விகட்டண கொள்ளை*!!
😡😡😡😡😡😡😡😡😡

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO/0060/2019 :நாள் :22.07.2019*

*குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன*?

உண்மை சம்பவம்!

குற்றவாளி யார்?

*சசூரி குரூப்ஸ் கல்வி நிறுவனங்களின் முறைகேடுகள்*!

*திருப்பூர் மண்ணரையில் செயல்படும் நைருதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் கல்விக்கட்டண கொள்ளை* !

2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில்
எட்டாம் வகுப்பிற்கான கல்வி கட்டணம் வசூலித்ததிற்கான (FEES PAID CERTIFICATE) சான்று வழங்கி உள்ளனர்.

1.TUTION FEES :10250.00
(கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த ஒர் ஆண்டுக்கான கல்விக் கட்டணம்)

2. LIBRARY FEES : 5000.00
(படிப்பகம்)

3. E C A :10000.00
EXTRA CURRICULAR ACTIVITYS
(ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங்,, கம்ப்யூட்டர், யோகா, கராத்தே ஹிந்தி, போன்ற இதர பயிற்சிகள்)

4. QUESTION  PAPER  FEES AMOUNT :4200.00
(வினாத்தாள் கட்டணம்)

5.BOOKS FEES :7050.00
(புத்தக கட்டணம்)

6. NOTE FEES :7500.00
(நோட்டு கட்டணம்)

ஆக மொத்தம் : 44,000.00 ரூபாய் கட்டணம் வசூலித்து அதற்கான சான்றிதழும் பள்ளி லெட்டர் பேடில் பள்ளி முதல்வரின் கையொப்பம் இட்டு வழங்கி உள்ளனர்.

இதில் என்ன முறைகேடு நடந்துள்ளது ?

*இந்த சான்றிதழ்களை எல்லாம் வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு போய் இருப்பார்களா*?

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையினை தடுப்பதற்காக தானே கல்விக்கட்டண நிர்ணய குழு மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அந்தந்த பள்ளிகளின் உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனியாக கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மேற்காண் பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கான அரசு நிர்ணயம் செய்த ஒர் ஆண்டுக்கான கல்வி கட்டணம் 10250.00  ரூபாய் மட்டும் தான்.

ஆனால்
பள்ளி நிர்வாகம் லைப்ரரி கட்டணம் என 5000.00 ரூபாய்  கூடுதலாக வசூலித்துள்ளனர்.

இதில் வேறு லைப்ரரியே இல்லை என பாதிக்கப்பட்ட  பெற்றோர் குற்றச்சாட்டு.

எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என 10000.00 வசூலித்துள்ளனர்.

வினாத்தாள் கட்டணம் என 4200.00
வசூலித்துள்ளனர்

புத்தக கட்டணம் என 7050.00 வசூலித்துள்ளனர்.

நோட்டு கட்டணம் என 7500.00 வசூலித்துள்ளனர்.

கூடுதல் கட்டணமாக 33750.00 வசூலித்துள்ளனர்.

இதை தானே நாம் கல்வி கட்டண கொள்ளை என்கிறோம்.

அப்படியானால்
திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இவர்கள் எவ்வளவு ரூபாய் லஞ்சம் கொடுத்திருப்பார்கள்?

பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒருவர்  தனது மகனின் எதிர்காலம் கருதி  புகார் அளிக்க  பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சபாஷ்!

பயம்! பயம்! பயம்!!

பயம் தானே பெற்றோரின் பலவீனம்!

இதனை தானே இந்த கல்வி கொள்ளையர்கள் எதிர் பார்க்கின்றனர்!

இது தானே அவர்களின்அதிகார  பலம்!

நகை நட்டை எல்லாம் அடமானம் வைத்தேன்

வாயை கட்டி வயிற்றை கட்டி சிறுக சிறுக பணம் சேர்த்தேன்.

வட்டிக்கு பணம் வாங்கினேன்.
கடன் பெற்றேன்.

எனது குழந்தையின் படிப்பிற்காக!

நான் படிக்க வில்லை.

ஆனாலும் எனது மகன் ஆங்கில வழி கல்வி பயில வேண்டும்.

எப்படியாவது அவன்  படித்து நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதித்து நிம்மதியாய் வாழ வேண்டும்.

நான் பட்ட கஷ்டம் அவன் படக்கூடாது.

இது தானே ஒவ்வொரு ஏழை பெற்றோரின் கனவு!

*தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை*!

ஏழை எளிய மக்கள் உழைப்பிலும்  கண்ணீரிலும் சேர்த்த பணத்தினை கொள்ளை அடிப்பது நியாயமா?

அவர்களின வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடுமா?

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒரு நாள் நாசமாய் போய் விடக்கூடும்.

*அரசூழியர்களுக்கு எச்சரிக்கை*!

ஏழைகளிடம் சுரண்டி  தனியார் பள்ளி நிர்வாகிகள்  கொள்ளை அடித்த பணத்தில் லஞ்சம் பெறும்  அரசூழியர்களே!

நீங்களும் உங்கள் குடும்பமும் ஒரு நாள் நாசமாக போய் விடக்கூடும்.
கவனம்.

என்னடா இது சாபமா?
ஆமாம்.

*ஒட்டு மொத்த ஏழை எளிய மக்களின் சாபம்*.

ஏதோ ஒரு சில பெற்றோர் புகார் அளித்தாலும் லஞ்சம் எனும் மலம் தின்னும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையே  ஏன்?

லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! மட்டுமே காரணம்.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களும் அரசாணைகளும் கடமை தவறிய கேடு கெட்ட அரசூழியர்களினால் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டுள்ளதே ஏன்?

இதற்கு ஒரே தீர்வு!

அரசு பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தையும் மேம்படுத்த வேண்டும்.

*தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும்*

*அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமற்ற இலவச சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும்*

*கல்வி முற்றிலும் இலவசம் என அரசு அறிவிக்க வேண்டும்*.

*கல்வி இலவசம் என அரசு அறிவிக்கும் வரை மக்கள் ஒன்று பட்டு கல்வி உரிமைக்காக போராட முன்வர வேண்டும்*.

நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் 👍

வாக்கு என்னும் கூர்மையான ஆயுதத்தை விரல் நுனியில்  கொண்டுள்ள மக்கள் அனைவரும் சரியாக பயன் படுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

மாறுங்கள்! மாற்றுங்கள்!
கல்வி புரட்சி வெடிக்கட்டும்.
தமிழகம் தலை நிமிரட்டும்.
💥💥💥💥💥💥💥💥💥
✍️ *நாஞ்சில்*
*கோ கிருஷ்ணன்* செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்* திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்... 👋

No comments:

Post a Comment