1 ஏன் வாக்களிக்க வேண்டும் ?
2 எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
அல்லது
3 யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
எனது முதல் வாக்கை பதிவு செய்ய இருக்கிறேன்.
தயவு கூர்ந்து தங்களின் பதிலை எதிர்பார்க்கும் செந்தில் குமார்..
செந்தில் குமார் அவர்களுக்கு
தங்களின் கேள்விகளுக்கான எனது பதில்.
1.ஏன் வாக்களிக்க வேண்டும்?
வாக்களிப்பது நமது உரிமை !
நல்ல நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை !
மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியே!
மாநிலம் தோறும் அந்தந்த மாநிலத்தில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய மாநில முதல்வர்களையும்
ஒட்டுமொத்த மாநிலங்களை உள்ளடக்கிய நம் இந்திய தேசத்தில் பிரதமராக ஒருவரை தேர்ந்தெடுப்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாக உள்ளது.
எனவே தான் மத்திய மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது அந்த உரிமையின் அடிப்படையில் நேர்மையான ஒரு ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது நமது கடமை !
2. எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
இந்த கேள்வி மிகவும் சிக்கலான கேள்வி தான் .
ஏன் என்றால் தாங்கள் முதலில் தமிழகத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகள் உள்ளன. ?
அதன் தலைவர்கள் யார் ?
அந்த கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் என்ன ?
இவர்களை தேர்ந்தெடுத்தால் நேர்மையான ஆட்சி வழங்குவார்களா ?
ஏற்கனவே சுதந்திரம் அடைந்த பின்னர் இது நாள் வரை நமது நாட்டை ஆண்டவர்கள் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் என்னென்ன நன்மைகள் செய்து விட்டனர் .
லஞ்சம் ஊழல் ஒழிக்க ப்பட்டுள்ளதா ?
என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் .
அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒரு சில விவரங்களை மட்டும் சுருக்கமாக தெரியப்படுத்துகிறோம்
அரசியல் கட்சி நடத்தும் அரசியல் வியாதிகள் தேர்தல் தோறும் கட்சி கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விடுகின்றனர்.
பணம் பதவி புகழ் செல்வாக்கு சுயநலனுக்காக தேர்தல் நேர சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து .கொள்கின்றனர் .
இதனால் சூடு சொரணை வெட்கம் மானம் அனைத்தையும் இழக்கின்றனர்.
தங்களது கூட்டணிக்கு எதிர் அணியில் இருப்பவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.!
ஒருவருக்கு ஒருவர் சேற்றை வாரி இறைக்கின்றனர் .நா கூசாமல் பொய் பேசுகின்றனர்
அடுத்தடுத்த தேர்தல்களில் எதிர் அணியினருடன் கைகோர்த்து மற்றவர்களை விமர்சிக்கின்றனர்.
இந்த கேவலமான நடை முறை ஒவ்வொரு சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதினை பார்த்து கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ்,
பி.ஜே.பி.
தி.மு.க.
அ.இ.அ.தி.மு.க
பா.ம.க
ம..தி.மு.க
தே.மு.தி.க
சி.பி.ஐ
சி .பி.எம்
வி.சி.க
நா.த.க
த.மா.கா
கொ.ம.க
ம.நே.ம.க
இ.யூ.மு.லீ
பு.த.க
ஐ.ஜே.கே
ஐ.கு.அ.க
த.வா.க
உள்ளிட்ட இன்னும் பல அனைத்து சிறு சிறு கட்சிகளும் அடங்கும்.
இந்த கட்சிகளின் தலைவர்களின் தேர்தல் நேர பேச்சுக்கள் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் கட்சி விசுவாசிகளால் போட்டி போட்டு பகிரப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அனைத்து அரசியல் கட்சிகளின் முகத்திரை கிழித்து
பொது தளத்தில் நார்நாராக தொங்க விடப்பட்டுள்ளது .
பா.ம.க
தலைவர் மருத்துவர் ராமதாஸ் சொன்னார் நானோ எனது குடும்பத்தினரோ பதவிக்காக தேர்தலில் நின்றால் நடு தெருவில் நின்று செருப்பால் அடியுங்கள் என்றார்.
ஆனால் அப்படி யாரும் செய்தாக தெரிய வில்லை
இரு திராவிட கட்சிகளின் தயவில் தேர்தலிலும் நின்றார்.
வன்னிய சமுதாயத்தின் வாக்ங்
திராவிட கட்சிகளிடம் இனி எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை கூட்டணியும் இல்லை என்றார்.
ரயில் ச்
ஆனால் ஒட்டி கொண்டார் .பதவி ஆசை அவரை விடவில்லை! மீண்டும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி.!
அரசு டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்டார் தற்போது அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தும் அ.இ.அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துள்ளார்.
பி.ஜே.பி என்னும் வட நாட்டு மதவாத பண்டார பரதேசிகளை எல்லாம் பட்டி தொட்டி எங்கும் தூக்கி சென்று வளர்த்து விட்டார் ஜெயலலிதா என குற்றம் சாட்டினார் கருணாநிதி.!
அதே மதவாத. பி.ஜே.பி யுடன் காங்கிரஸை எதிர்த்து கைகோர்த்தார் கருணாநிதி!
இந்திரா காந்தியின் மண்டை உடைக்கப்பட்டது.
அன்னை இந்திராவே வருக நிலையான ஆட்சி தருக என மடி பிச்சை ஏந்தினார் கருணாநிதி!
இலங்கைவாழ் தமிழர்கள் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்டனர்.
ராஜிவ் காந்தி படு கொலை!
ஜெயின் கமிசன் குற்றவாளி என்றது.
சர்க்காரியா கமிசன் விஞ்ஞான ஊழல் பேர் வழி என கூறியது.
கோவை குண்டு வெடிப்பு!
தினகரன் செய்தித்தாள் அலுவலகம் தீயிட்டு எரிப்பு!
கட்சியின் நிர்வாகிகள் பலர் படுகொலை!
திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்ததாக சொல்லப்பட்ட அவரது குடும்பம் தற்போது பல லட்சோப லட்சம் கோடிகளுக்கு அதிபதியாகி உள்ளனர்.
இவர்களிடம் இல்லாத தொழில்களே இல்லை!
குடும்ப அரசியல்
இப்படியே பல நிகழ்வுகள்.
இப்போது மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க.கூட்டணி.
ம.தி.மு.க.
தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க உருவானது.
இதன் தலைவர் வைகோ இவரை பற்றி சொல்லவே வேண்டாம்.
பச்சோந்தியை விட. அடிக்கடி நிறம் மாறுவார் எல்லா கட்சியிலும் ஐக்கியமாகி விட்டார் .
பெரிய தில்லாலங்கடி பேர்வழி. வாய்க்கு வந்ததை அப்படியே பேசுவார்! மெகா நடிகன்.
திமுகவையும் அதன் கட்சி தலைவர்களையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் இவர் கேவலப்படுத்தி பேசியதுபோல் வேறு யாரும் பேசியிருக்க முடியாது. ஆனால் அனைத்தையும் மறந்து தற்போது மீண்டும் திமுகவுடன் சந்தர்ப்ப வாத கூட்டணி அமைத்துள்ளார்.
சி.பி.ஐ.வலது கம்யூனிஸ்ட்
சி.பி.எம் இடது கம்யூனிஸ்ட்
இவர்கள் சித்தாந்த வாதிகள்..இவர்களின் கொள்கை அவர்களுக்கே தெரியாது.
சீங்கிலாப் சிந்தாபாத் உயரட்டங்கன உயரட்டே வானில் செங்கொடி உயரட்டே ! இது கேரளாவில் ......மட்டும்.
கேரளத்தில் இவர்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பார்கள். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி யை பிடித்து விடக்கூடாதாம்.
ஆனால் இவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமாம்.
த்தா...என்னங்கடா உங்க கொள்கை!
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம்
எதற்கெடுத்தாலும் கொடி பிடிப்பார்கள். ஆர்ப்பாட்டம் போராட்டம்!
இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.
கட்சி நிதி என உண்டியல் வசூல் செய்வார்கள்.
தொழிலாளி வர்க்கத்திற்காக போராடுகிறோம் என்று சொல்லி முதலாளிகளிடம் கை நீட்டுவார்கள்.
ஆனால் எந்த தொழிலாளர் களையும் பாதுகாக்க மாட்டார்கள் .
சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்திற்கும் இவர்கள் தான் மூல காரணம் .
தொழிற் சங்கங்கள் அனைத்தும் கண் துடைப்பே !
தேவைக்கு தகுந்த கூட்டணி
அமைத்து கொள்வார்கள்.
விடுதலை சிறுத்தை கட்சி!
இதன் தலைவர் தொல். திருமாவளவன் இவர் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலித்துக்களை பாதுகாப்பேன் என சொல்லி சந்தர்ப்ப வாத கூட்டணி சேர்வார்.
ஆனால் எந்த ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரும் சமூகத்தில் உயர வில்லை.
இவர் மட்டுமே உயர்ந்து நிற்கிறார்.
இவரது பேச்சுக்கள் ஜாதி வெறியையும் வன்முறையையும் தூண்டும் விதமாகவே உள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்து ஆண்டு அரசியல் செய்வதில் வல்லவராக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி !
தமிழகத்தில் இவர்கள் கட்சிக்குள் பல கோஷ்டிகள் .
வேட்டியை கிழித்து கொண்டு அலைகின்றனர்.
ஒற்றுமை இல்லை !
பல தலைவர்கள் உண்டு. தொண்டர்கள் இல்லை. வாக்கு வங்கியும் இல்லை.
எனவே ஒரு சில சீட்டுகளுக்காக மானம் சூடு சொரணை இழந்து இரண்டு திராவிட கட்சிகளின் தோளில் ஏறி மாறி மாறி சவாரி செய்கின்றனர்.
நாட்டில் பெரும்பான்மையான ஊழல்களை இவர்கள் ஆட்சியில் தான் செய்துள்ளனர்.
பி.ஜே.பி.
மதவாத கட்சி என முத்திரை குத்தப்பட்டவர்கள்.
இவர்களுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை.
இந்துக்கள் வாக்கு கூட இவர்களுக்கு விழுவது இல்லை .
அப்படியானால் இந்து மத சார்புடைய கட்சியாக இருந்தால் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் அனைத்தும் இவர்களுக்கு விழுந்து இருக்க வேண்டுமல்லவா ?
அப்படியானால் இவர்கள் எப்படி மத சார்புடைய கட்சியாக இருக்க முடியும்.
சிறுபான்மையர் வாக்குகள் இவர்களுக்கு இல்லை.
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தலைவர்களே தமிழகத்தில் உண்டு. அவர்களும் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
வாக்கு வங்கி இல்லாத காரணத்தால்
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றனர்.
பாபர் மசூதி இடிப்பும் ராமர் கோவில் கட்ட நினைப்பதும் பி.ஜே.பி யினரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமா ?
அப்படியானால் மக்கள் பீ.ஜே.பி ஆட்சியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்.
பிரதமர் மோடி!
இவரின் திட்டங்கள் அனைத்தும் தொலை நோக்கு பார்வையில் சிறந்ததாக தெரிந்தாலும் அதனால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும் சூழல்.
இதனால் பல திட்டங்களை மக்கள்
எதிர்க்கின்றனர்.
சமூக வலைதளங்களில் சிறுபான்மையினராலும் தி.க.வினராலும் அதிகம் கேவல படுத்தப்படும் பிரதமரும் இவரே.
ஊழல் கட்சியான அ.இ.அ.தி.மு.க உடன் தற்பொழுது கூட்டணி!
அ.இ.அ.தி.மு.க
எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா !
ஜெயலலிதா திடீர் மரணம் !மரணத்தில் சந்தேகம்;!
மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
ஊழல் வழக்கில் 100 கோடி அபராதம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .
ஆனால் சிறைக்குச் செல்லாமலே ஜெயலலிதா மரணித்து விட்டார்.
அவருக்கு பக்க துணையாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்க பட்டுள்ளார்.
ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மக்கள் விரும்பாத ஒரு திடீர் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவியில் இருக்கிறார்.
பன்னீர் செல்வம் துணை முதல்வர்
ஊழல் செய்து தண்டனை பெற்ற கட்சி தமிழகத்தை ஆள்வது வேதனை .
அ.ம.மு.க
ஊழல் செய்து தண்டனை பெற்று தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலா ஆதரவுடன் தமிழகத்தை ஆள நினைக்கிறார்
டி.டி.வி தினகரன்!
ஏற்கனவே ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
அதே முயற்சியில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி இடுகிறார்.
தே.மு.தி.க
அ.இ.அ.தி.மு.க வை எதிர்த்து விஜயகாந்த் கட்சி தொடங்கினார்.
இவரும் மற்ற கட்சிகளை போல் தனது மனைவியையும் மைத்துனனையும் கட்சியில் இணைத்து தமிழக முதல்வராகி விட வேண்டும் என கனவு கண்டார்.
ஆனால் இவரின் கனவு பலிக்கவில்லை . கட்சி கொள்கை கோட்பாடுகளை மறந்து மீண்டும் ஊழல் கட்சியான அமெரிக்காஅ.இ. அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துள்ளார்.
நா.த.க.
இதன் தலைவர் சீ......மான்.!!
இவரது பேச்சாற்றலால் இளைஞர்களை கவர்ந்தார்
நாம் தமிழர் என தமிழர்களுக்காக கட் சி என்றார்.
தமிழர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றார்.
தமிழர்களைத் தவிர மற்றவர்களை பகிரங்கமாகக் சாடி வருகிறார்
ஆனால் கர்நாடகாவை சேர்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தார்.
இவரது கொள்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.
இவரும் சந்தர்ப்பவாத அரசியல் வாதியே!
தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி இடுகிறார்.
தமிழகத்தில் இவரை முதல்வராக்கினால் என்ன நடக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .இவரது அடாவடி பேச்சுகளில் தெரியும்.
இ.யூ.மு.லீ.க
ம.நே.ம.க
எஸ்.டி..பி .ஐ
த.த.ஜ
போன்ற
சிறுபான்மை என்று சொல்லப்படுகிற இஸ்லாமிய கட்சிகள்
இவர்களுக்கு ஒரே எதிரி மதசார்புடைய பி.ஜே.பி என்பதாகும்.
பி.ஜே.பி யை எதிர்க்க எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து தங்களுடைய அவ்வ போதைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
ஆனால்
இந்த கேவலமான கட்சி தவைவர்கள் தான் தமிழகத்தை ஆள நினைக்கின்றனர்.
இவர்கள் தங்களையும் தங்கள் கட்சியையும் வளர்த்து கொண்டு மாட மாளிகைகளுடன் சொகுசாய் வாழ்கின்றனர்.
இந்த கேவலமான வெக்கங்கெட்ட கூமுட்டை அரசியல் தலைவர்களை கட்சி தொண்டர்கள் தலையில் வைத்து ஆடுகின்றனர்.
தங்கள் கட்சி தலைவன் என்ன சொல்கிறானோ அதுவே வேத வாக்காய் நினைக்கின்றனர்.
தலைவனுக்காக தங்கள் உயிரை கொடுக்கவும் தயாராக தொண்டர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் சாதி மத வாரியாக மக்களை பிரித்து அடிமை படுத்தி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி!
இந்து முஸ்லீம் கிறித்துவர் என மதங்களை பிரித்து அதற்கும் ஒரு கட்சி!
கடவுள் இருக்கிறார் என்பதற்கும் ஒரு கட்சி!
கடவுள் இல்லை என்பதற்கும் ஒரு கட்சி!
மத சார்பு கூட்டணி!
மதசார்பற்ற கூட்டணி!
மத சார்பற்ற கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் தங்கள் மதங்களை கொண்டாடாதவர்களா என்ன?
என்னங்கடா மக்களை கூமுட்டை ஆக்குறீங்க!
உங்களுக்கென்று சில சதவீத வாக்கு வங்கி இருப்பது என்பதினால் தலை கால் புரியாமல் ஆடுறீங்க?
எந்த கட்சியையும் சாராத மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.
இது உங்களின் பலம்.
தற்போது அரசியல் கட்சிகளில் எவனும் யோக்கியன் இல்லை!
ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல!
இது நாள் வரை மத்தியிலுய் மாநிலத்திலும் ஆண்ட ஆண்டு கொண்டிருக்கிற அவர்களுக்கு ஆதரவளித்து வரும் இந்த ஒட்டு மொத்த அரசியல் வாதிகளால் நாட்டில்
பஞ்சம்
பசி
பட்டினி
வறுமை
கொலை
கொள்ளை
பாலியல் வன்கொடுமைகள்
மது
லஞ்சம்
ஊழல்
ஒழிக்கப்பட வில்லையே ஏன்?
லஞ்சம் கொடுக்காமல் உங்கள் தேவைகள் ஏதேனும் நிறைவேறுகிறதா?
இவர்கள் எதையும் ஒழிக்க மாட்டார்கள்.
இவர்களின் தேர்தல் வாக்குறுதியினை நம்பாதீர்கள்!
இனி மேலும் இவர்களை நம்பி வீண் போய் விடாதீர்கள் .
விரல் நுனியில் இருக்கும் வாக்கு என்னும் மாபெரும் சக்தியை சில நூறு ரூபாய்க்கு விற்று விடாதீர்கள்.
வாக்களித்து விட்டு அழுது புலம்பாதீர்கள்!
ஒரு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை!
சிந்தியுங்கள்!
செயல் படுங்கள்!
எனதருமை இளம் வாக்காளர்களே நமது இந்திய தேசத்தின் வளர்ச்சி உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
மறந்து விடாதீர்கள்!
விரல் நுனியில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!