Thursday 31 May 2018

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விவரம்!

LAACO :கல்வி அவசர செய்தி!!
தனியார் பள்ளி கல்விக்கட்டணம்!!
2018-2019

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 2018-2019 இந்த கல்வி ஆண்டுக்கான கல்விக்கட்டண நிர்ணயகுழுவினர் நிர்ணயித்த அரசு கல்விக்கட்டணம் :
Laaco /02/06/18

LKG. வகுப்பு    = ₹ 6965.00
UKG.வகுப்பு     = ₹ 6965.00

1. ஆம் வகுப்பு = ₹ 8165 .00
2. ஆம் வகுப்பு = ₹ 8165.00
3. ஆம் வகுப்பு = ₹ 8165.00
4. ஆம் வகுப்பு = ₹ 8165 .00
5. ஆம் வகுப்பு = ₹ 8165.00

6. ஆம் வகுப்பு =₹ 9350.00
7. ஆம் வகுப்பு =₹ 9350.00
8. ஆம் வகுப்பு =₹ 9350.00

9. ஆம் வகுப்பு = ₹ 11935.00
10.ஆம் வகுப்பு =₹ 11935.00

11 ஆம் வகுப்பு = ₹ 19910.00
12 ஆம் வகுப்பு = ₹ 19910.00

மேற்காணும் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணம் என்பது ஓர் ஆண்டுக்கான கல்வி கட்டணம் (TUTION FEES)  ஆகும். 
இந்த கட்டணத்தினை இரண்டு அல்லது மூன்று தவணைகளாகவோ அல்லது மாதா மாதம் பிரித்தும் கட்டலாம்.

நோட்டு புத்தகங்களுக்கு மட்டும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

நோட்டு, புத்தகம்,சிலேட்,பென்சில்,  டைரி, டை,பெல்ட், சாக்ஸ், சூ, ஸ்கூல் பேக், யூனிபார்ம்  போன்ற எந்த ஒரு பொருட்கள் விற்பனை செய்தாலும் அதற்கான அதிக பட்ச விற்பனை விலையினை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

விற்பனை செய்யப்படும்  பொருட்களுக்கான தனித்தனியான விலை விபரங்களை குறிப்பிட்டு பற்று சீட்டு (ரசீது ) வழங்க வேண்டும்.

நோட்டு புக் ஸ்டேசனரி என தோராயமாக ₹2000 ₹3000 ₹4000 என குறிப்பிட்டு கட்டணம் வசூலிக்கக்கூடாது.

ஸ்டேசனரி பொருட்களை கட்டாய படுத்தி விற்பனை செய்யக்கூடாது.
பெற்றோர்கள் விருப்ப பட்டால் மட்டும் வாங்கி கொள்ளலாம்.

கல்வி நிலையங்கள் ஸ்டேசனரி கடைகளாக செயல்பட கூடாது என கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் அவர்கள் ஒரு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். Laaco

இதனை தவிர்த்து அட்மிஷன் பீஸ்  ,கரிக்குலம், கோ-கரிக்குலம்,  லேபாரட்டரி ,கம்ப்யூட்டர் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற எந்த விதமான மறைமுக கட்டணங்களையும் வசூலிக்க கூடாது.

மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள அடிப்படை வசதிகள் கல்வி தரம் போன்றவைகளை
ஆராய்ந்து தான் கல்வி கட்டணங்கள் அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

சமூக சேவையில் கல்வி பணி!

என வெற்று விளம்பரம் செய்து வரும் மேற்காண் பள்ளி துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் என்பவர் கடந்த ஆண்டில் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தினை வங்கி வரைவோலையாக கொடுத்த பெற்றோரிடம் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தினை திருப்பூரில் எந்த பள்ளி நிர்வாகியாவது வாங்குவதினை நிரூபித்தால்  எனது ஒரு காதை அறுத்து கொள்கிறேன்! காதை அறுத்து கொள்கிறேன்! என சவால்  விட்டு மிரட்டினார்.

ஆனால் கடந்த ஆண்டு மூன்று மாணவர்கள் மட்டும் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தினை செலுத்தினார்கள்.

ஆனால் அவர் கூறியது போல் அவரின் காதுகளை இன்று வரை அறுத்து கொள்ளவே இல்லை.!

இந்த கல்வி ஆண்டில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டண விபரங்களை தகவல் பலகையில் வெளியிட்டுள்ளனர்.

இதுவே நமக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.

இந்த கல்வி ஆண்டில்  4188 மாணவ மாணவிகள் கல்வி பயில்கிறார்கள்.

4188- 3 = 4185  பெற்றோர்களும் இனி மேலாவது அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை செலுத்துவீர்கள் என நம்புகிறோம்.

மேற்காண் பள்ளி நிர்வாகம் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இலவச கல்வி பயிலும் குழந்தைகளிடம் இருந்து கல்விக்கட்டணங்கள் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.

பெற்றோர்களே கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்!

கடமை தவறிய மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் ;

திருப்பூர் மாவட்டத்தில் செயல் பட்டு லரும் 160 தனியார் மெட்ரிக்மேல்நிலை பள்ளிகளும் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டணங்களை மட்டுமே வசூலித்து வருவதாகவும் வசூலிக்கும் கட்டணங்கள் அனைத்துக்கும் உரிய ரசீது வழங்கி வருவதாகவும் முழு பூசணிக்காயினை சோற்றில் மறைப்பது போல் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் கடமை தவறிய ஈரோடு மெட்ரிக் பள்ளிகள் முன்னாள் ஆய்வாளர் கனிமொழி என்பவர் பொய்யான தகவல் வழங்கி உள்ளார்.

கடமை தவறிய முதன்மை கல்வி அலுவலர் :

பாதிக்கப்பட்ட. பெற்றோர்கள் புகார் அளித்தால் அனைத்து அதிகாரங்களும் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறார்.

பெற்றோர்களே!
ஏமாளியாய் இருந்தது போதும்!
கல்வி நமது உரிமை!
கல்வி கொள்ளையர்களை கண்டு பயப்பட வேண்டாம்!
இனி மேலாவது விழித்து கொள்ளுங்கள்!

மேலும் விபரங்களுக்கும் புகார்களுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

கல்வி விழிப்புணர்வு பணியில் .....!!

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
98655 43303

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி : 97910 50513

குறிப்பு : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் 2017-2018 & 2018-2019 & 2019-2020  அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டண விபரங்கள் அறிய :98655 90723 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment