Saturday 14 July 2018

பாலதண்டபாணி பொறுப்பில் இருந்து நீக்கம்!

அனுப்புநர்  :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட. விழிப்புணர்வு மற்றும்
ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி    
திருப்பூர்-641 652

பெறுநர் :
S. பாலதண்டபாணி
பழனி

அய்யா,
கடிதம் எண் : LAACO/DL/0002/2018;நாள்:15.07.2018

பொருள் : மாநில அமைப்பு செயலர் (உறுப்பினர் ) பொறுப்பில் இருந்து நீக்கம் செய்வது சம்பந்தமாக,

S.பால தண்டபாணியாகிய தாங்கள் தங்களுடைய முகநூல் பக்கத்தில் 13.07.2018 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட இணை செயலர் பதவி பொறுப்பு ஏற்றுள்ளதாக அக்கட்சி வழங்கி உள்ள ஒரு கடிதத்தினை பதிவிட்டு உள்ளீர்கள்.

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

08.04.2018 அன்று திருச்சி மன்னார்புரம் V.P .ரெசிடென்ஸியில் நடந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் புதிய  நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் கலந்து கொண்டு யாதொரு அரசியல் கட்சியிலும் எந்த ஒரு பொறுப்பும் வகிக்க வில்லை என உறுதி மொழி ஏற்று அமைப்பின் மாநில அமைப்பு செயலர் (உறுப்பினர்)  ஆக பதவி பொறுப்பேற்று கொண்டீர்கள்.

அமைப்பின் உறுதிமொழிக்கு எதிராக தாங்கள் அரசியல் கட்சியில் பொறுப்பு வகிப்பதினை எங்களுக்கு தெரிவிக்க வில்லை.

தாங்கள் அமைப்பின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான வகையில்  செயல் பட்ட காரணத்தினால் 15.07.2018 அன்று நடைப்பெற்ற  அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டத்தின் மூலம் தங்களை அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்வது  என முடிவு செய்யப்பட்டுள்ளது .

எனவே இனி மேற்கொண்டு அமைப்பின் பெயரினையோ பதவியின் பெயரினை குறிப்பிட்டு எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

உறுப்பினராக தொடர எந்த ஆட்சேபனையும் இல்லை.

எனவே இக்கடிதம் கிடைக்கப்பெற்ற ஏழு தினங்களுக்குள் அடையாள அட்டையினையும் தங்கள் வசம் உள்ள அசல் உறுப்பினர் படிவம் 25 Nos திரும்ப வழங்கி உறுப்பினருக்கான அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

இக்கடிதம் பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

நாள் :15.07.2018
இடம் :திருப்பூர்           

இங்கனம்,
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

நகல் தகவலுக்காக சார்பு செய்யப்படுகிறது :

01. ரா.சங்கர் அவர்கள்
மாநில தலைவர்
அரியலூர்

02.M. விவேகானந்தன் அவர்கள்
பொது செயலாளர்
திருச்சி

03.காவல் ஆய்வாளர் அவர்கள்
காவல் நிலையம் ,பழனி

04.காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
திண்டுக்கல் மாவட்டம்

No comments:

Post a Comment