10 மார்ச் 2018. ....................!!
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI- CORRUPTION ORGANIZATION
இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கிறோம்.
எங்களுடன் இணைந்து பயணித்த, பயணித்து கொண்டிருக்கும், பயணிக்க இருக்கும்...........................
மாநில நிர்வாகிகள்
மண்டல, மாவட்ட, வட்ட ,கிளை பொறுப்பாளர்கள்,
உறுப்பினர்கள்
நிரந்தர உறுப்பினர்கள்
மற்றும்
எங்களது சட்ட விழிப்புணர்வு செய்திகளையும், தகவல்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முகநூல்
வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவியதுடன் ,பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு வழங்கிய பல்லாயிரக்கணக்கான எனதருமை நண்பர்கள் அனைவருக்கும்
இந்த இனிய நாளில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.
அரியலூர் ரா.சங்கர் !
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில தலைவராக பொறுப்பேற்று சிறப்புடன் எங்களை வழி நடத்தி கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவர் தான் அருமை நண்பர் அரியலூர் ரா.சங்கர் அவர்கள்.
சமூக சிந்தனை கொண்ட தன்னலமற்ற சதா ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நாட்டில் நடை பெறும் அநீதிகளுக்கு எதிராகவும் என்ன செய்யலாம் என சிந்தித்து அதன் படி செயல் பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரைப்போல் ஒப்பற்ற ஒரு மாமனிதரை இத்தரணியில் என் வாழ்நாளில் கண்டதில்லை!
ஆம்.
என்ன தவம் செய்தேனோ தெரியாது.
இவரை தலைவனாய் பெற்றதினால்!
என்ன கைம்மாறு செய்ய போகிறேனோ!
இறைவா!
வாழ்த்து சொல்ல வார்த்தைகள் போதாது.
எனவே வணங்குகின்றேன்.
வாழ்த்த விரும்பும் நண்பர்கள்
ரா.சங்கர் அவர்களின் 98655 43303 என்ற உலாபேசி எண்ணிற்கு அழைத்து வாழ்த்தலாம்.
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் முக்கிய நோக்கம்
சாதி ,மதம் ,இனம் ,மொழி பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டில் நடை பெற்று வரும் லஞ்சம் ஊழல்களை ஒழித்து நமது இந்திய தேசத்தினை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று வல்லரசு நாடாக மாற்றுவதே முக்கிய நோக்கம் ஆகும்.
மாறுங்கள்! மாற்றுங்கள்!!
கொடுக்க வேண்டாம் லஞ்சம்!
உரிமைக்கு குரல் கொடுப்போம்!
ஊழலுக்கு விடை கொடுப்போம்!
இதுவே எங்களின் தாரக மந்திரம்!
தனி மனித மாற்றத்தினால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
15 மார்ச் 2018
உடன் நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைகிறது.
எங்களுடன் இணைந்து சமூக சேவை ஆற்றிட. மாநில ,மண்டல ,மாவட்ட அளவில் தன்னலமற்ற சமூக சேவகர்களை அன்புடன் அழைக்கிறோம்.
பொறுப்பேற்று பொறுப்புடன் செயல்பட விரும்பும் நண்பர்கள் உங்களை பற்றிய தகவல்களுடன் எந்த மண்டலத்தில் மாவட்டத்தில் சேவை ஆற்ற விரும்புகிறீர்கள் என தெரிவித்து 98655 90723 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நிர்வாகிகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது.
தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு சிறந்த இலவச சட்டப்பயிற்சி அளித்து வழி காட்டுகிறோம்.
இவ்வுலகில் வாழ்வது சில காலம்!
மரணம் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.
ஆனால் மரணம் வருவது உறுதி என அனைவருக்கும் தெரியும்.
இந்த இடை பட்ட காலத்தில் நமது ஒவ்வொருவரின் சுய தேவைகளையும் நிறைவேற்றிட வேண்டி வாழ்க்கை எனும் போராட்ட களத்திலேயே எதையும் சாதிக்காமல் மடிந்து விடக் கூடும்!
அர்த்தமில்லாத வாழ்க்கையும் பயனற்று போகும்.
எதை கொண்டு வந்தோம் எதை இழப்பதற்கு!
கற்றது கை மண் அளவு!
கல்லாதது உலக அளவு!
எல்லாம் இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது.
ஆம்.
நாம் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை!
எதுவும் நமக்கு சொந்தமானது இல்லை!
நான் எனது என்ற எண்ணங்கள் நீங்கி நாம் என வாழ்வதே சிறப்பு!
வாழ்வது ஒரு முறை! வாழ்த்தட்டும் தலை முறை!
எனவே
நாம் கற்ற ,கேட்ட ,படித்த ,அனுபவத்தில் உணர்ந்த ,சாதித்த சங்கதிகளை சமூகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏறபடுத்தி அதன் மூலம் அவர்கள் வாழ்வு வளம் பெற நம்மால் இயன்ற உதவி செய்ய முன் வாருங்கள் எனதருமை நண்பர்களே என அன்புடன் அழைக்கிறோம்.
வாழ்த்துக்களுடன் ,
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com
தொடர்புக்கு : 98655 90723
நாள் :10.03.2018
No comments:
Post a Comment