Tuesday 20 February 2018

கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவர் அவர்களுக்கு!

#பகிரங்க #குற்றச்சாட்டு!!

  " L.K.G. கல்வி கட்டணம் ₹ 42000.00 நாற்பத்து இரண்டாயிரம்  தானாம் "
(இது சென்னையில் ஒரு பள்ளிக்கு மட்டும் நாளிதழ் செய்தி)

அரசு கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்கார வேலு  அவர்களே!

இது நியாயம் தானா?

இது தான் அரசு நிர்ணயம் செய்யும் கல்விக்கட்டணமா? 

சாமானிய ஏழை நடுத்தர மக்களின் குழந்தைகள் இந்த கட்டணம் செலுத்தி கல்வி பயில முடியுமா?

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம்.

கல்வியை வியாபார நோக்குடன் நடத்தும் கல்வி கொள்ளையர்கள் பல அடிப்படை வசதிகள் செய்துள்ளோம்  என்றவுடன் ஆஹா! ஓகோ!  என அவர்களுக்கு சாதகமாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளீர்களே!  இது நியாயம் தானா?

சமச்சீர் கல்வி கொண்டு வந்த பின்  ஏன் இந்த கட்டண முரண்பாடு?  

வேண்டாம் கல்வியில் பாகு பாடு?

10000 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள நீங்களோ உங்களது குழுவினரோ ஏதாவது ஒரு பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்திருப்பீர்களா?

பள்ளி நிர்வாகிகள்  போலியான ஆவணங்களையும் சான்றிதழ்களையும் லஞ்சம் கொடுத்து வாங்கி   உங்களிடம் கொடுக்கின்றனர். 

அரசுத்துறை லஞ்ச அதிகாரிகள் கொடுக்கும் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என தெரிந்திருந்தும் கடமை தவறிய லஞ்சம் என்னும் மலம் தின்னும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அரசு விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக தனியார் பள்ளிகள் கடை பிடித்துள்ளதாக பொய்யான ஆய்வறிக்கை அளித்து அரசையும் மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

நீங்கள் ஆவணங்களின் அடிப்படையில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வது வடி கட்டிய முட்டாள் தனமாக உங்களுக்கு தெரிய வில்லையா?

கும்ப கோணம் பள்ளி தீவிபத்து ஏற்பட்டு 94 மழலை குழந்தைகளை தீக்கிரையாக்கியதற்கு காரணம் யார்?

நீதிபதி சம்பத் கமிஷன் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இல்லை என அறிக்கை அளித்த  2661 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ஏன் இது நாள் வரையிலும் இரத்து செய்யப்பட வில்லை!

மாணாக்கர் பாது காப்பு நலன் அரசாணை :
48. பள்ளி கல்வி (  எக்ஸ்:2.) 2004  மற்றும் 2012  விதி முறைகளின் படி செயல் படும் ஒரே ஒரு பள்ளியை உங்களால் காட்ட முடியுமா?

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009. ன் படி எவனாவது செயல் படுகிறானா? 

கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் 1992. ன்  படி  எவனுமே நன் கொடை பெறுவதில்லையா?

நீங்கள் நிர்ணயம் செய்த கட்டணம் மட்டும் தான் வசூலிக்கிறார்கள் என உங்களால் சொல்ல முடியுமா? 

எனது கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது?

மொத்தத்தில் நீங்கள்  வேஸ்ட்!

உங்களுக்கு கொடுக்கும் ஊதியங்கள் அரசுக்கு இழப்பீடு!

மக்கள் ஏமாளியாக இருக்கும் வரையில் தான் உங்களுக்கு மதிப்பு!

கூடிய விரைவில் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் . அந்த பணியை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

நான் கூறிய குற்ற சாட்டுகள் அனைத்தும் எனது அறிவுக்கு எட்டிய வகையில் நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சியச்சட்டம் 101 மற்றும் 105 ன் கீழ் எனக்கு இருக்கிறது என்பதினை நான் அறிவேன்.

இந்த குற்றச்சாட்டுகளை என்னால் நிரூபிக்க இயலாமல் போனால் இந்திய தண்டணைச் சட்டம் 211 ன் கீழ் நீதி மன்றம் வழங்கும் தண்டணையை மனதார. ஏற்று கொள்வேன் என சாட்சியச் சட்டம் 70 ன் கீழ் பிரம்மாண வாக்கு மூலம் அளிக்கிறேன்.

கல்வி விழிப்புணர்வு பணியில் .......!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

நண்பர்களே!
பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகள் அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தில் படிக்க வைக்க  வேண்டுமா?

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்  உங்கள் குழந்தைகளை  கல்விக் கட்டணம் இல்லாமல் இலவச கல்வி பயில வேண்டுமா?
அழையுங்கள் :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
98655 90723
குறிப்பு : (தொடர்பு கொள்ளும் நேரம் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும்)

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
98655 43303
(தொடர்பு கொள்ளும் நேரம் தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி மற்றும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்)

மாறுங்கள்! மாற்றுங்கள்!
கொடுக்க வேண்டாம் லஞ்சம்!
பதிவு செய்த  நாள் :20.02.2016

No comments:

Post a Comment