Sunday 18 February 2018

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தான் முக்கிய காரணம்!

📢 🏛  *அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும்* *வன்முறைகளுக்கும்*
*முக்கிய காரணம்*
*தொழிற்   சங்கங்களே*
*என பகிரங்கமாக*
*குற்றம் சாட்டலாம்*
👎👎👎👎👎👎👎👎👎👎👎

*அரசு போக்குவரத்து கழக வாகனங்களை இயக்கும் பணியாளர்கள் மக்கள் நல பணியாளர்களே*

இவர்கள் எப்படி மக்கள் விரோதமாக செயல் பட முடியும்?

மக்கள் விரோதமாகவும் சட்ட விரோதமாகவும்  செயல் படுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

*போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களையும் சலுகைகளையும்  பெறுவது அவர்களின் உரிமை*!

*அதனை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை*!

*அந்த நிவாரணங்களை தொழிலாளர்களுக்கு  பெற்று தருவது தொழிலாளர்கள் சார்ந்து இருக்கும் அந்தந்த தொழிற்சங்கங்களின்  பொறுப்பாகும்*!

சொந்த சுய நல தேவைகளுக்காக ஒட்டு மொத்த மக்களையும் கஷ்ட பட வைப்பது நியாயமான செயலா?

*போராடுங்கள்!  நீதி கிடைக்கும் வரை தார்மீக வழியில் போராடுங்கள்*

நீதிமன்றமே ஓய்வூதிய நிலுவை தொகையை கொடுக்க சொல்லி உள்ளதாக தகவல்.

அராஜக வழியில் சட்ட விரோதமான போராட்டம் எதற்கு? 

*ஏன் ஒட்டு மொத்த தொழிற் சங்கங்களும் இணைந்து போராட முன் வர வில்லை*?

அப்படியானால் போராட முன் வராத தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் தேவை இல்லையா?

இந்த தொழிற்சங்க நிர்வாகிகள் தனியாக கணிசமாக கவனிக்கப்பட்டிருப்பார்களோ?

*இது அரசியல் கபட நாடகம் என்பது தான் நிதர்சனமான உண்மை*! 

அரசியல் கட்சிகள் மூலம் தொழிற்சங்கம் நடத்தும்
அரசியல் வியாதிகள்  அப்பாவி தொழிலாளர்களை பகடை காயாக பயன் படுத்துவது எதற்காக

சக ஓட்டுநர்களை தாக்கியும்  அரசு பேருந்துகளான பொது சொத்துகளை சேதப்படுத்தும் அதிகாரத்தினை  இவர்களுக்கு கொடுத்தது யார்?

எதுக்கும் உதவாத பேருந்துகள் என இவர்களுக்கு இப்போது தான் தெரியுமா?

ஊழலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன என இவர்களுக்கு தெரியாதா?

ஏதோ அனைத்தும் ஒரே நாளில் நடை பெற்ற சம்பவம் போல் தொழிற்சங்கத்தினர் பொங்கி பொங்கல் வைப்பதேன்? 

இத்தனை நாட்கள் எங்கு போய் இருந்தார்கள்?

*சிபாரிசு மற்றும் லஞ்சம் கொடுக்காமல் எத்தனை தொழிலாளர்கள் பணியில் சேர்ந்திருப்பார்கள் என தொழிற்சங்கத்தினர் சொல்ல தயாரா*?

ஒன்றுக்கும் உதவாத ஓட்டை பேருந்துகளை இயக்க போட்டி போடுவது ஏன்? 

*போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறதே! லாபத்தில் இயங்க வைக்க  தொழிற்சங்கத்தினர் ஏன் நடவடிக்கை மேற் கொள்ள வில்லை*?

உரிமைகளை பெற வன்முறை ஒரு போதும் தீர்வாகாது!

*ஒவ்வொரு ஆண்டும் அரசுடன் பல கட்ட  பேச்சு வார்த்தை நடத்தி வரும்  தொழிற்சங்கங்கள் ஏன் தொழிலாளர்களின் உரிமைகளை இன்றைய தினம் வரையில் பெற்றுத்தர  முன் வர வில்லை*?

கோரிக்கை  ;

*மக்கள் நலனுக்கு எதிராக தொடர்* *போராட்டத்தில் தொழிலாளர்களை தூண்டி விட்டு பொது மக்களுக்கு* *சொல்லொணா துயரத்தினை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதுடன்*
*வன்முறையில் ஈடுபடும்* *தொழிற்சங்கங்களை அரசு  உடனடியாக தடை செய்ய வேண்டும்*

*அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று இந்த போராட்டத்தினை உடனடியாக ஆட்சியாளர்கள்  முடிவுக்கு கொண்டு வர வேண்டும்*

*ஒன்றுக்கும் உதவாத அரசு பேருந்துகளுக்கு போலி சான்றிதழ் வழங்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்*

*அனைத்து அரசு  பேருந்துகளுக்கும் காப்பீடு செய்ய வேண்டும்*

*உபயோக படுத்த. இயலாத நிலையில் உள்ள தரமற்ற பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க கூடாது*

*தரமான புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். அதனை முழுமையாக பராமரிக்க வேண்டும்*

*பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு வாங்காமல் பயணிப்பதில்லை*

*அப்படியானால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்க முக்கிய  காரணம் என்ன என்பதினை நேர்மையான  அரசு உயர் அதிகாரிகள் கொண்ட. சிறப்பு குழு அமைத்து  ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்*

*திறமை இல்லாத  ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது*

*போக்கு வரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாமலும் வரவினை விட செலவுகள் அதிகம்  செய்து  அரசு  பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவது  எதற்கு*?

*ஒரு தனியார் பேருந்து வைத்து சம்பாதித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் பல பேருந்துகளை நஷ்டம் இல்லாமல் எப்படி இயக்க முடியும்*?

*நிர்வாக திறன் இல்லாத கடமை தவறிய. போக்குவரத்து துறை அதிகாரிகளும்,  ஆளுமை திறன் இல்லாத போராட்டத்தினை கட்டு படுத்த தவறிய  ஆட்சியாளர்களும் தான் பொது மக்களின் இந்த துயரங்களுக்கும்  வேதனைகளுக்கும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்*!
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர் மாவட்டம்
☎ 98655 90723
08.01.2018

No comments:

Post a Comment