ஊழல் ஒழிப்பு செய்தி ::LAACO;0043/2019;நாள் :10..02.2019
குற்றம் நடந்தது என்ன?
மதிமுக Vs பிஜேபி மோதல் ஏன்?
உண்மை சம்பவம்.
காவல் துறையினரை ஓருமையில் பேசிய வைகோ!
வன்முறையை தூண்டும் விதமாக ஆவேச பேச்சு!
தடையை மீறி திருப்பூரில் தர்ணா போராட்டம்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி!
அரசியல் கட்சியை வழி நடத்தும் வழக்கறிஞரான வைகோவின் அதிரடி பேச்சு!
மதிமுக கூட்டத்தில் அத்து மீறி நுழைந்த
பிஜேபி பெண் நிர்வாகி தாக்கப்பட்டார்.
பிஜேபி யினர் மதிமுகவினர் இடையில் மோதல்.!
கலவரத்தை தடுத்த திருப்பூர் மாநகர காவல் துறையினர்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் இரயில் நிலையம் முன்பு 10.02.2019 அன்று கருப்பு கொடி ஏந்தி மதிமுக ஆர்ப்பாட்டம்!
வை.கோபால்சாமி என்ற
வைகோ ம.தி.மு.க கட்சி தலைவர் தலைமையில்
திருப்பூரில் நடை பெற்றது.
போராட்டங்கள் நடத்துவது அவர்களின் உரிமை!
காவல்துறையில் உரிய அனுமதி பெற்று பொது இடையூறில்லாமல் அமைதி வழியில் தான் போராட வேண்டும்.
போராட்டகாரர்களை கட்டு படுத்தி பொது அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் பேணி காப்பது காவல் துறையினரின் தலையாய கடமை!
காவல்துறையினர் வாகனத்தினை நெருங்க விடாமல் தொண்டர் படை தடுக்க வேண்டும் என வைகோ பேச்சு.
போலீசு கைது செய்ய கூடாதாம்!
மின்மாற்றியில் ஏறிய தொண்டர் சாவுக்கு துணிந்து தான் ஏறி இருக்கிறான்.
தொண்டர் சாவை பற்றி கவலை இல்லை!
தொண்டர் படை மட்டும் நில்லுங்கள்.
டிரைவர் பக்கம் நான்கு பேர் போய் நில்லுங்கள்.
கூட்டம் நடக்கும் பிரச்சார வேனுக்குள் காவல்துறை எவனாவது நுழையாமல் தடுக்க வேண்டும்.
டேய் பாஸ்கர் போலீசை உள்ளே விடாதே !
எவனாவது போலீசு வேனுக்குள் நுழைந்தால் நீ செத்து உன் பிணத்தின் மீது ஏறித்தான் காவல்துறை வேனுக்குள் நுழைய வேண்டும்.
ஏய் போலீசு கிட்ட வராதே!
மரியாதையா போய் விடுங்கள்
நெருங்கினால் ரத்த களறி ஆகி விடும்!
மிஞ்சி போனா என்ன செய்வீங்க.? சுடுவீங்களா?
காவல்துறை லேடி ஆபிசர் நீ சுடுறயா சுடு! சுடு பார்ப்போம்?
நீ லத்தியால் அடித்தால் எங்க ஆள் லத்தி கம்பை பிடுங்குவார்கள்! ஆமாம் பிடுங்குவார்கள்.
சுட வந்தார்கள் அதனால் தான்
IPC இன் கீழ் தற்காப்புக்காக லத்தி கம்பை பிடுங்கினோம் என்று சொல்வோம் .
வன்முறை வழக்கு போடுறியா போடு!
பல போராட்டங்களை பார்த்திருக்கிறேன்.
ஜென்செட்டை ஆப்பண்ணிட்டா கூட்டம் நடக்காதா என்ன?
டேய் உட்காரு இல்லேனா வெளியே போ!
எதற்கும் துணிந்து தான் தயாராக வந்திருக்கான் இந்த. வைகோ.
என்ன உங்களுக்கு கைது செய்ய வேண்டும் அப்படித்தானே!
மோடி ஒழிக ......!!............!! இத்யாதி! இத்யாதி .............!!
இதனிடையில் மதிமுக கூட்டத்தில் அத்து மீறி நுழைந்த பி.ஜே.பி பெண் நிர்வாகி சசிகலா என்பவர் பாரத் மாதாக்கி ஜே என கோசம் போட்டுள்ளார்.
பெண் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடிய தந்தை பெரியார் மற்றும் அண்ணா சிலை முன்பு பெண் என்றும் பாராமல் கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பதினை மதிமுக வினர் தவிர்த்திருக்க வேண்டும்.
திட்டமிட்டு ஆயுதங்கள் இன்றி கலகம் செய்யும் நோக்கத்துடன் வந்த பி.ஜேபி பெண் நிர்வாகியை காவல் துறை மூலம் பாதுகாப்பாக அப்புற படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் பெரியார் மற்றும் திராவிட கொள்கைக்கு எதிராக மதிமுக வினர் அவரை பைப்பினால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
போராட்ட காரர்களிடம் இருந்து காவல் துறையினர் அவரை காப்பாற்றி ஒரு கடையில் அடைத்துள்ளனர் .
காவல் துறையினர் இல்லை எனில் பெண் படுகொலை மற்றும் மானபங்கம் நடந்திருக்க கூடும்.
இதனை அறிந்து வந்த பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்பினர்களுக்கும் மதிமுக வினர்களுக்கும் கைகலப்பு நடந்துள்ளது.
மதிமுகவினர் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
பிஜேபி யினர் கொடி எரிக்கப்பட்டது.
வன்முறை வெடித்தது.
கலவர பூமியாகியது
கலவரம் தீவிரமடைவதினை கண்ட காவல் துறையினர் கூட்டத்தை கலைத்துள்ளனர் .
மதிமுக தடையை மீறி நடத்திய போராட்டத்தில் பி.ஜே.பி யினர் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல.
அரசியல் கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.
ஒரு கட்சி தலைவன் எவ்வாறு செயல் பட வேண்டும் ?
மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மரில்)ஆபத்தினை உணராமல் ஏறி போராடிய தொண்டனை கீழே இறங்கும் படி தலைவன் கூறி இருக்க வேண்டும்.
ஒரு வேளை மின்சாரம் தாக்கி தொண்டன் செத்து இருப்பான் என்றால் காவல் துறை வேடிக்கை பார்த்தது காப்பாற்றவில்லை! எனக்கூறி பிணத்தை வைத்து அரசியல் பண்ணி இருப்பார்கள்.
பெண்ணை தாக்கிய தொண்டர்களை தடுத்திருக்கலாம்.
ஒரு போராட்டத்தினை எப்படி நடத்த
வேண்டும்?
தொண்டர்களை எவ்வாறு வழி நடத்த வேண்டும்?
காவல் துறையினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
மூத்த அரசியல் வாதியான அவருக்கு தெரியாமல் போனது ஏன்?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற திராவிடக் கொள்கை என்ன ஆனது.
அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கட்சியை நடத்தும்
இவர் போன்றவர்களை மக்கள் அடையாளம் காணுங்கள்.
தடையை மீறி பொது இடையூறு ஏற்படுத்தி போராட்டம் நடத்தினால் காவல் துறையினர் கைது செய்து போராட்ட காரர்களை அப்புற படுத்துவார்கள் என சட்டம் பயின்ற வழக்கறிஞரான வைகோவிற்கு தெரியாமல் போனது ஏன்?
இவர்களை போன்றவர்களால் நாட்டிற்கு பேராபத்து.
போராட்டத்தில் தொண்டர் செத்தால் வீர வணக்கம் செய்வார்கள்.
தொண்டர்களே எச்சரிக்கை!
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது.
தவறாக வழி காட்டும் தலைவன் எவனாக இருந்தாலும் அவர்களுக்கு அடிமை ஆகி விடாதீர்கள்.
தேர்தல் தோறும் கூட்டணியை மாற்றி மாற்றி சுய நலத்திற்காக கூட்டு சேர்ந்து வாக்கு கேட்டு வரும் இவர்களை போன்ற அரசியல் கட்சியினரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பதவிக்காக நேற்று மோடியுடன் கை கோர்த்து ஒரே மேடையில்!
இன்று மோடியை எதிர்த்து போராட்டம்.
இது அரசியல் சடு குடு ஆட்டம்.
இவர்களுக்கு மானம் சூடு சொரணை வெட்கம் எதுவுமே கிடையாது.
தொண்டர்களே இவர்களை நம்பி நீங்கள் பலிகடா ஆகி விடாதீர்கள்.
திருப்பூர் மாநகர காவல் துறையினருக்கு சவால் விட்டு ஒருமையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய மதிமுக தலைவர் வைகோ மீதும் கூட்டத்தில் புகுந்து வன்முறை ஏற்பட காரணமான பிஜேபினர் மீதும் காவல் துறை தலைவர் அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
வருங்காலங்களில் குற்றம் நடைபெறும் முன்னர் காவல்துறையினர் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும்.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.....
இணைப்பு : சன் நியூஸ் காணொளி
No comments:
Post a Comment