Monday 30 July 2018

ஊழல் ஒழிப்பு செய்தி :0028

ஊழல் ஒழிப்பு செய்தி : 0028 /30.7.2018

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

திராவிட முன்னேற்ற கழகம்!

தி.மு.க.
இந்த கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள்!

இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்!

தற்பொழுது எதிர் கட்சியாக செயல் பட்டு கொண்டிருப்பவர்கள்!

மீண்டும் ஆட்சி அரியணைக்காக காத்து கொண்டிருப்பவர்கள்.

மத்திய மாநில அரசுகளின் பல பதவிகளை வகித்தவர்கள்! வகித்து கொண்டிருப்பவர்கள்!

சாராய ஆலை முதல் அனைத்து தொழில் துறைகளிலும் இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது.

இக்கட்சியின் தலைவர் திருவாரூரில் இருந்து திருட்டு இரயில் ஏறி சென்னைக்கு வந்ததாக அவரே சொன்னதாக நியாபகம் .

சாதாரண மனிதராய் வாழ்க்கையை தொடங்கி திரைபட கதை வசனம் எழுத ஆரம்பித்து தமிழக முதல்வராய் பதவி வகித்து இன்று உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக. திகழ்கிறார்.

அரசியல் வித்தகர்.
எந்த ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் சாதுர்யமாக சமாளிக்கும் வல்லமையும் பெற்றவர்!

உலகிலேயே முதன் முதலாக இரண்டாம் தாரம் அல்லது இரு மனைவி என்ற. சொற்களை தூக்கி எறிந்து மனைவிக்கு ஒரு துணைவி!
மனைவி துணைவி என புது அத்தியாயம் ஏற்படுத்தியவர்.

மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தக்காரர்.

பல அரசியல் தலைவர்களை தனது சாணக்கீய தனத்தால் வீழ்த்தியவர்!

இவரது பேச்சாலும் எழுத்தாலும் தமிழின தலைவராக தன்னை உயர்த்தி கொண்டவர்!

சர்க்காரியா கமிஷனால்  விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர் என்ற அடை மொழிக்கு சொந்தக்காரர் .

இவர் முதல்வராய் இருக்கும் போது சட்ட சபையில் எதிர்கட்சி தலைவியாக இரூந்த மறைந்த ஜெயலலிதாவின்  துகிலினை துச்சாதனன் போல் உருவி தாக்க முற்பட்ட. சம்பவம் இவர் கண் முன்னால் அரங்கேறியது.

அரசியல் என்ற போர்வையிலும் மக்கள்
நல போராட்டங்கள் என்ற பேரிலும் பல போராட்டங்களை நடத்தி உள்ளனர் .

மக்கள் நலம்! மக்கள் நலம் எனக்கூறி தன் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்.

ஒவ்வொரு போராட்டங்களின் போதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு பொது மக்களுக்கும் பொது சொத்துகளுக்கும் மிகுந்த சேதம் விளைவிப்பதில் கை தேர்ந்தவர்கள்!

இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடுகளுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபடுவார்கள்.

கழக உடன் பிறப்புக்கள் என ஒரு மாபெரும் கூட்டம் இந்த கட்சியின் அனுதாபிகளாகவும், கட்சி தலைவர்களின் அனுதாபிகளாகவும் வும் குடும்ப உறுப்பினர்களின் அனுதாபிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்!
இது தான் இக்கட்சியின் மிகப்பெரிய பலம்!

No comments:

Post a Comment