Wednesday 3 October 2018

விபத்து அவசர வேண்டுகோள்!

விபத்து அவசர வேண்டுகோள்!

திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மற்றும்
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையர் மற்றும்
திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர்  அவர்களின் கவனத்திற்கு!

தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட அவிநாசிசாலை அனுப்பர்பாளையம் புதூர் சிக்னல் அருகில் புதிதாக கட்டப்பட்ட தரை பாலம் உயரமாக கட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே இருந்த கழிவு நீர்கால்வாய் கல்வெட்டு சாலை மட்டத்தில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

பிரதானசாலை நடுவில் இரண்டு டிவைடர் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது

03.10.2018 இரவு பத்து மணி அளவில் சாலையில் கல்வெட்டு இருப்பது தெரியாமல் கார் ஓட்டி வந்த ஒருவர் கழிவு நீர்கால்வாய் கல்வெட்டிற்குள் சிக்கி கொண்டார்.உயிர்பலி இல்லாமல்
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

எனவே உயிர்பலி ஏற்படும் முன் கழிவுநீர் கால்வாய் கல்வெட்டினை பாதுகாப்பாக அமைக்க வேண்டுகிறோம்.

4.வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் வழியாக அவிநாசி சாலையை கடந்து திருப்பூர் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

உடனடியாக கட்டுமான பணிகளை விரைந்து முடித்து அனுப்பர்பாளையம் புதூர் போக்குவரத்து சிக்னலை வழக்கம் போல்  போக்குவரத்து பயன் பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்.

No comments:

Post a Comment