Saturday 20 October 2018

நல்லாறு பாதுகாப்பு குழு அவசர ஆலோசனைக் கூட்டம்!

பத்திரிக்கை செய்தி :

முக்கிய அறிவிப்பு.

"நல்லாறு பாதுகாப்புக்குழு " அவசர ஆலோசனை கூட்டம் இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 19 (1) அ மற்றும் ஆ இன் கீழ் " சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " சார்பில் நடை  பெற இருக்கிறது.

நாள் :21.10.2018

நேரம் : மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இடம் : நல்லாறு பாலம் 
HP பெட்ரோல் பங்க் எதிரில்
செட்டிபாளையம் சாலை
அங்கேரிபாளையம்
திருப்பூர் .

இயற்கை வளமான நல்லாற்றினை பாதுகாப்பது இந்திய  அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51 A.( அ) ,(எ),(ஐ),(ஒ)  இன் கீழ் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து  ஊத்துக்குளி நஞ்சராயன் குளம் வரை செல்லும் நல்லாறு கழிவுகளினாலும் கழிவு நீரினாலும் ஆக்கிரமிப்புகளினாலும் மாசடைந்து துர்நாற்றம் வீசி பொது சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நல்லாறு மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாத அவர்களின் அலட்சியத்தினால் கெட்ட ஆறாக மாற்றப்பட்டு பொது சுகாதாரக்கேட்டின் மூலம் பொதுமக்கள் மிகுந்த நோய் தொற்றிற்கும் சொல்லொணா துயரத்திற்கும்  உள்ளாகி வருகிறார்கள்.

நல்லாற்றினை பாதுகாக்கும் பொறுப்பு மிக்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும், மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட சுகாதாரபணிகள் நலத்துறையும்  பொதுமக்களுக்கு தீங்கு செய்யும் நோக்கத்துடன் நல்லாற்றினை மாசடைய செய்து பொது சுகாதார சீர்கேட்டினை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நல்லாற்றை பாதுகாக்க தவறி விட்டது என்பது தான் நமது நேரடி கள ஆய்வில் கண்ட நிதர்சனமான உண்மை .

நாமும் கவனிக்காமல் இப்படியே விட்டு  விட்டால் நல்லாறு கழிவுகளினாலும் ஆக்கிரமிப்புகளினாலும் முற்றிலும்  காணாமல் போவது உறுதி.

இதனை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் உரிமையும் நமக்கு உள்ளது.

அவிநாசி முதல் நஞ்சராயன் குளம் வரையில் நல்லாறு பாதுகாப்புக்குழு பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம்.

நல்லாறு பாதுகாப்புக்குழுவில் இணைந்து செயல்பட ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் இளைஞர்கள் ,பள்ளி, கல்லூரி மாணவர்கள்  அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு உங்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்து நல்லாற்றினையும் நஞ்சராயன் குளத்தினையும் பாதுகாப்போம் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

இனி சொல் அல்ல! செயல்!!

தலைமை அலுவலகம் :
நல்லாறு பாதுகாப்புக்குழு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர்- 641 652
வாட்ஸ் ஆப் எண் :98655 90723
தொடர்புக்கு :
97910 50513


No comments:

Post a Comment