Sunday 2 September 2018

பத்திரிக்கை செய்தி!

02.09.2018

பத்திரிக்கை செய்தி .

திருப்பூர் பிருந்தாவன் ஹோட்டலில் என்னங்க சார் உங்கள் சட்டம்?  என்ற தலைப்பில் அறப்போர் இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் அறப்போர் இயக்கத்தின் நிர்வாகிகள் ஜெயராம் ,அக்தர், பிரகாஷ் கௌதம், சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நிறுவனர் நாஞ்சில் கோ.கிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் ஆ.பழனிக்குமார், மாநில இணை செயலாளர் அசோக்குமார் கோவை மண்டல செயலாளர் சிவக்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் அம்ஜத்கான் ,திருப்பூர் வடக்கு வட்ட அமைப்பாளர் முத்துகுமார்
மற்றும்
சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், சுந்தர பாண்டியன், சரவண பிரகாஷ், ராஜேந்திரன், சரவணன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியன் ,செந்தில் குமார், அன்பழகன், காதர் பாட்ஷா மற்றும் பலர்
கலந்து கொண்டனர் .

லஞ்சம் வாங்குபவர்கள் ஊழல் செய்யும் அரசூழியர்கள், அரசியல்  வாதிகளை தண்டிக்கும் சட்டங்கள் ஆட்சியாளர்களால் மிகவும் பலவீன படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தறுதலை சட்டமாக மாற்றப்பட்டு மனுதாரர்கள் கோமாளியாக்கபப்பட்டு வருகின்றனர்.

மாநில ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை எந்த ஊழலையும் கண்காணித்து ஊழலை ஒழிக்கவும் தடுக்கவும்  முன்வர வில்லை. அவர்களை செயல் பட விடாமல் மத்திய மாநில அரசுகள் அவர்கள் கட்டுப்பாட்டில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர் .

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற. சொல் ஏட்டளவிலே உள்ளது.
இதனால் இந்திய அரசியலமைப்பு சாசனம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.

நேர்மையாக செயல் பட்டு வரும்  ஒரு சில அரசூழியர்கள்  ஆட்சியாளர்களால் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர்.

மக்களாட்சி நடக்கும் நம் நாட்டில் அநீதிக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களின் குரல் வலையை நசிக்கி வருகின்றனர்.

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு  சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்து சட்டத்தினை வலிமை அடைய செய்ய வேண்டும்.

இதனை மக்களே செய்ய வேண்டும்.
மக்களால் மக்களுக்கான சட்ட முன்வடிவினை தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டத்தின் மூலம் உரிய பாதுகாப்பு ஏற்படுத்திடவும்
சிதறி கிடக்கும் சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது கடமைகளையும் உரிமைகளையும்  மீட்டெடுத்திட   செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் அறப்போர் இயக்கம் சார்பில் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற உள்ளது.
அது சமயம் அனைத்து பகுதிகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள
வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.

திருப்பூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது .

No comments:

Post a Comment