Tuesday 11 September 2018

பள்ளி தாளாளருக்கு பிணையில் விடக்கூடாத பிடீயாணை!

NON BAILABLE WARRANT!
பிணையில் விடக்கூடாத பிடியாணை!

திருப்பூர் ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா நர்சரி & பிரைமரிப்பள்ளி தாளாளருக்கு பிணையில் விடக்கூடாத பிடியாணை -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் கல்வி பயில உயர்நீதிமன்றத்தினை நாடி செல்லும் அவல நிலை திருப்பூரில் தொடர்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டண கொள்ளை நடை பெற்று வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சட்ட விரோதமாக கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு சில  தனியார் பள்ளிகள் குறித்து பாதிக்கப்பட்ட  பெற்றோர் ஆதாரங்களுடன்  சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பில் புகார் அளித்து உதவியை நாடி உள்ளனர்.

1.ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

2.ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

3.கொங்கு வேளாளர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

4.APS அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

5.AVP டிரஸ்ட் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

6.ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா நர்சரி & பிரைமரிப்பள்ளி

திருப்பூர் அனுப்பர்பாளையம் கவிதா லட்சுமி நகரில் செயல் பட்டு வரும் ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில்  இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் இரு பெண் குழந்தைகளிடம் முதன்மைக்கல்வி அலுவலரின் உத்தரவுடன் கூடுதல் கட்டணம் வசூல்!

கூடுதல் கட்டணம் செலுத்த மறுத்ததால் இரு குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க வில்லை!

திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறார்.

எனவே
1. பள்ளி தாளாளர்
2.திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலர் 3.திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
4.தொடக்கப்பள்ளிகள்  இயக்குநர்
5. அனைவருக்கும் கல்வி  இயக்கக திட்ட இயக்குநர் (SSA )
6.செயலாளர் பள்ளிகல்வி துறை

பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபேராணை வழக்கு பதிவு செய்யப்பட்டது .

முதன்மைக்கல்வி அலுவலர் நேரில் ஆஜர்.

பள்ளி தாளாளர் ஆஜராக மறுப்பு!

பிணையில் விடக்கூடாத பிடியாணை பிறப்பித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திருப்பூர் மாநகர காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.

காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான்.

குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க உத்தரவு.

கமிட்டி அமைத்து விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் வழங்க உத்தரவு!

குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்காமலும் காலாண்டு தேர்வு வினாத்தாள் வழங்காமலும் சின்னஞ்சிறு குழந்தைகளை பழி வாங்கி வருகிறான்.

தர்மம் வெல்லும்.!
அதர்மம் தோற்கும்!!
காத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment