Wednesday 12 September 2018

பொது இடத்தில் காவலூழியர் புகை பிடிக்கலாமா?

காவல் துறை எச்சரிக்கை!
பொது இடத்தில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம்!

இது காவலூழியர்களுக்கு விதி விலக்கா?

பொதுமக்கள் கூடும் இடங்களில் புகை பிடிக்கக்கூடாது.  அதனை மீறி புகைப்பிடித்தால் காவல் துறையினரால்
அபராதம் விதிக்கப்படும் .

திருப்பூரில் பெரும்பாலான பேக்கரிகளில் இவ்வாறான எச்சரிக்கை பலகை காணப்படுகிறது.

ஆனால் அவர்களே சிகரெட் பீடி விற்பனை செய்து வருகின்றனர்!

ஒரு கையில் டீ குடித்து கொண்டும்  மறு கையில் புகை பிடித்து கொண்டும் பல பேர்களை காண முடியும்.

இவர்கள் மற்றவர்களை பற்றி எந்த வித கவலையும் படமாட்டார்கள்

ஆனால் இதனை தடுக்க. வேண்டிய நம்ம காவலூழியரான ஏட்டய்யா ஒருவர் திருப்பூர் போயம்பாளையம் சிக்னல் அருகே உள்ள பேக்கரியில் டீ குடித்து கொண்டு புகையும் பிடிக்கிறார்!

இவர்களுக்கு மட்டும் விதி விலக்கா என்ன?

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்.

No comments:

Post a Comment