Friday 26 January 2018

இந்திய குடியரசு தினம்!

📢   *இந்திய குடியரசுதின*
*நல்வாழ்த்துக்கள்* !!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
26. 01.2018 இன்று
69 ஆவது இந்திய குடியரசு தின விழாவினை கொண்டாடி மகிழ்ந்திடுவோம்-

இந்திய சுதந்திரத்திற்காக கண்ணீரும், செந்நீரும் சிந்தி தங்கள் இன்னுயிரினை மாய்த்த போராளிகளையும், தேசத் தலைவர்களையும்  நினைவு கூர்ந்து போற்றி வணங்கிடுவோம்.

நாம் பிறப்பில் தமிழனாக இருந்தாலும்  இந்தியராகவே வாழ்வோம்.

*நம் தேசம் ஒன்று பட்ட இந்திய தேசமே* !

இங்கே பிரிவினை வாதம் வேண்டாம்.

ஜாதி, மத, இன, மொழி பேதங்கள் வேண்டாம்.

குடியரசு தினத்தினை புறக்கணிப்பவர்கள்  நம் தேச விடுதலைக்காக பாடு பட்ட. தேச  தலைவர்களை புறக்கணிப்பதாக ஆகி விடும்.

நம் தேசிய கொடி நமது தாயின் சேலையை போன்றது.

அந்த தேசியக்கொடியை அவமதிப்பது  நம் தாயினை அவமதிப்பதாக. கருதப்படும்.
இது சட்ட விரோத, தேச விரோத செயல் !

நாம் தேர்ந்தெடுத்த கேடு கெட்ட கடமை தவறிய ஆட்சியாளர்களின்  மக்கள் விரோத போக்கினை  கண்டிப்பதாக சொல்லி  நம் தேசத்தின் குடியரசு தினத்தினை புறக்கணிப்பது   எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குடியரசு என்றால் என்ன?

*குடியரசு தினத்தினை நாம் ஏன் கொண்டாட வேண்டும்*?

*இந்தியக் குடியரசு தினம்*

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார்.

அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது.

முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப் பட்டது.

*குடியரசு என்பதன் பொருள்* ::

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும்.

அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது.

*மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்*

*அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்*

*குடியரசு தினக் கொண்டாட்டம்* :

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.

மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது.

சுமார் 125 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், இனம் மொழி எனப் பல வேறுபாடுகள், பாகுபாடுகள்  இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

✍ தேச விழிப்புணர்வு பணியில்,,,,,,
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு  "
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652

நாஞ்சில் கோ. கிருஷ்ணன்
நிறுவனர்
உலா பேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலா பேசி :98655 43303

No comments:

Post a Comment