திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் கவனத்திற்கு.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம் 15 வேலம்பாளையம் வருவாய் கிராமத்தின் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக,
15 வேலம்பாளையம்
5 வேலம்பாளையம்
4 வேலம்பாளையம்
15 வேலம்பாளையம்
5 வேலம்பாளையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
5 வேலம்பாளையம் மீண்டும்
4 வேலம்பாளையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
கிராம நிர்வாக அலுவலகத்தில் மட்டும் 4 வேலம் பாளையம் என பெயர் பலகை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, போக்குவரத்து துறை, வங்கிகள் என எந்த ஒரு அலுவலகத்திலும் பல ஆண்டுகள் ஆகியும் 15 வேலம்பாளையம் என்ற பெயர் பலகைகள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
இந்த துறைகளை சார்ந்த அலுவலர்களுக்கு உண்மையிலேயே இந்த தகவல் தெரிய வில்லையா?
அல்லது
தெரிந்தே அவர்களின் கடமையை செய்ய தவறி விட்டனரா? என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
அரசு இணையதள சேவைகளிலும் 15 வேலம்பாளையம் என்ற தகவல் இருப்பதினால் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களிலும் 15 வேலம் பாளையம் என்று தான் பதிவாகி வருகிறது.
எனவே தாங்கள் இந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து
4 வேலம்பாளையம் என பெயர் பலகைகளில் திருத்தம் செய்ய அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப கோருகிறோம்.
ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருப்பின் கடமை தவறிய அதற்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.
நாஞ்சில்கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723
நாள் : 16.01.2018
No comments:
Post a Comment