Friday 12 January 2018

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

#நண்பர் கண்ணன் அவர்களுக்கு ,
இளைஞர்கள் அழுக்கான அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிடலாமா ?
என்பது தங்களின் கேள்வி ?

பதில் :

★சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாதவன் சட்டத்தில் ஒட்டை இருப்பதாகவும் , சட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது என்று சொல்பவர்கள் மூடர்கள் .

★அதே போல் அரசியல் ஒரு  சாக்கடை என அரசியல் என்றால் என்ன என்று தெரியாதவனின் முட்டாள் தனமான வாதம் .

★ஒரு சிறந்த அரசை வழி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவன் தான் அரசியல்வாதி .

★மக்கள் பிரதியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் மக்களின் நன்மைக்காக தன்னலமற்று விருப்பு வெறுப்பு இல்லாமல் சேவை செய்ய வேண்டும் .

★அரசுடன் இணைந்து மக்கள் சேவை செய்வது தான் அரசியல் .

ஆனால் ,

★இன்று அரசியல் வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் , மக்களையும் , அரசையும் சுரண்டி  லஞ்சத்தையும் , ஊழலையும் ஊக்குவித்து குளத்தினை மூடி மறைத்திருக்கும் பாசியினை போல் இந்திய இறையாண்மையை மூடி மறைத்துள்ளனர் .

★அரசியல் கட்சி தொடங்கி பல கோடிகளை கொள்ளை அடித்து பொது சொத்துக்களை ஆக்கிரமித்து சுக போக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் .

★வாக்கு என்னும் உரிமையை கேட்டு பெறாமல் விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர் .

★இன்றைய சூழ் நிலையில் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்தால் நமது இந்திய தேசத்தை லஞ்சம் , ஊழல் , பசி , பட்டினி , வறுமை , இல்லாத வல்லரசு நாடாக மாற்ற முடியும் செய்வார்களா ?

★செய்ய மாட்டார்கள் எவனுக்கும் நாட்டின் மீதும் , நாட்டு மக்களின் மீதும் எந்த விதமான அக்கறையும் இல்லை ,

★எல்லாம் வெளி வேஷம் .

★பல்லாயிரகணக்கான அரசியல் கட்சிகள் ,

★பல கட்சிகளை சார்ந்த தலைவர்கள் .

★இவர்களின் பின்னால் இவர்களை தலைவனாக ஏற்றுக் கொண்டு தொண்டர்களாய் திரியும் மக்கள் கூட்டம் .

★அரசியல் தூய்மையானது .
புனிதமானது .
ஆனால் ,
அரசியலை வைத்து கேவலமான பிழைப்பு நடத்துகிறவன் தான் கேவலமானவன் .

★ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களை முட்டாளாக்குகின்றனர் .

★இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு போதிய விழிப்பறிவுணர்வு இல்லாதது தான் .

★அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்தவனும் கூட்டு களவாணிகளே .

★நேர்மையான தியாக மனப்பான்மையுள்ள அரசியல் வாதிகள் எத்தனை பேர் உள்ளனர் அவர்களை அடையாளம் காட்ட முடியுமா ?

★கேடுகெட்ட அரசியல்வாதிகளை தூக்கி எறியுங்கள் .

★இளைஞர்களே அரசியலுக்கு வாருங்கள் .

★மக்கள் பிரதிநிதிகளாக போட்டி இட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள் .

★ஆனால் ,
கவனம் தேவை ,
கேடுகெட்ட அரசியல்வாதிகள் உங்களையும் ஏமாற்றி அவர்கள் பக்கம் இழுத்து விடுவார்கள் .

★ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே அளப்பறிய சாதனைகள் செய்ய இயலும் .

★இனி மாற்றம் என்பது தூய்மையான அரசியலே !

★இளைஞர்களே ,
ஒன்று திரளுங்கள்
இந்த நாடு உங்களை நம்பி தான் இருக்கிறது .

★மாறுங்கள் ! மாற்றுங்கள்

★இந்த சமுதாயத்திற்காக உங்களை அர்ப்பணியுங்கள் ,

★வெற்றி தோல்விகளை பற்றி கவலைப் படாதீர்கள் .

★நமது லட்சியத்தில் மட்டுமே முழு நம்பிக்கை கொண்டு முன்னேறி செல்லுங்கள் .

★நாம் எதிர்பார்த்த மாற்றம் நிச்சயம் ஒரு நாள் வரும் .

★அப்போது சாக்கடையாக மாற்றப் பட்ட அரசியல் புனிதமாகும் .

★கேடுகெட்ட அரசியல்  வாதிகள் காணாமல் போவது உறுதி .?

★இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல் . .........!!

நட்புடன் ,
நாஞ்சில் கோ..கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் .-641652
உலாபேசி : 98655 90723
04.09.2016

No comments:

Post a Comment