📢 திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
👍👍👍👍👍👍👍👍👍👍👍
திருப்பூர் மாவட்டம்.
அவினாசி தாலுக்கா பெருமாநல்லூர் பிரசித்திப் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து 33 கடைகள் மற்றும் 29 குடியிருப்பு வீடுகள், தனியார் பள்ளி உட்பட பலர் ஆக்கிரமிப்புகள் செய்து கொள்ளை லாபம் அடைந்து வந்தனர்.
இதனால் அறநிலையத்துறைக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
பல புகாரினை தொடர்ந்து கடந்த 19 . 12. 2017. தேதி அன்று அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் இன்று 28-12-2017 திருப்பூர் உதவி ஆணையர் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றம் செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ✅
இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள், மற்றும் அரசியல் கட்சியினர் அமோக வரவேற்பு அளித்துள்ளனர் .👏
✍நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
28.12.2017
No comments:
Post a Comment