Saturday 22 December 2018

ஊழல் ஒழிப்பு செய்தி;0033 அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தி வரும் கேபிள் ஆப்பரேட்டர்!

ஊழல் ஒழிப்பு சிறப்பு செய்தி :
LAACO :033/22.12.2018

குற்றம் நடந்து கொண்டிருப்பது  என்ன?

உண்மை சம்பவம்.

அரசிற்கு ஆண்டொன்றிற்கு சுமார் ₹ 36 இலட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு!

அரசு கேபிள் இணைப்பு வழங்கியதில் பெரும் ஊழல் -முறைகேடு!

ஆண்டொன்றிற்கு சுமார் ₹ ஒரு கோடியே என்பது இலட்சம் ரூபாய் கொள்ளை லாபம் ஈட்டிய  கேபிள் ஆப்பரேட்டர்.

நடவடிக்கை எடுப்பாரா? திருப்பூர் மாவட்ட செயல்துறை நடுவர் அவர்கள்!

குற்றவாளி யார்?

அரசு கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்
மோகன் ராஜ்
A.M.கேபிள் நெட்வொர்க்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டம்.

பாதிக்கப்பட்ட மனுதாரரின் புகார் கடிதம்.

மனுதாரர்:
செ.ராம்குமார்
S/O, செல்லைய்யா
99,B, திலகர் நகர்              அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652.

எதிர் மனுதாரர்கள் :
01:   மோகன்ராஜ்
A.M.கேபிள் நெட்வொர்க்
LCO NO :15233
105,குமரன் வீதி     
அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652          
               
02:  பொ.ஜெய்சிங்
தனி வட்டாட்சியர்/
மாவட்ட துணை மேலாளர்
தமிழ்நாடு அரசு கேபிள்  டி வி நிறுவனம்
திருப்பூர் மாவட்டம்

03: நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் அலுவலகம்,
மாவட்ட. ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :
மேலாண்மை இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. கார்ப்பரேசன்,
துகர் டவர்ஸ், 34,(123) 6வது தளம்,
மார்சல் ரோடு, எழும்பூர்,
சென்னை - 600 008.

அய்யா,

பொருள் : அரசு கேபிள் டி.வி  இணைப்பினை துண்டித்ததுடன் கூடுதல் கட்டணம் வசூலித்தும் இலவச செட்டா பாக்ஸ் இணைப்பு வழங்க மறுத்து வரும் ஏதிர்மனுதாரர் :01 என்பவர் மீதும் அரசு கேபிள் டிவி கணக்கில் செலுத்திய ₹.140.00 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை அரசு கணக்கில் செலுத்தாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதுடன் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எதிர்மனுதாரர் :01 என்பவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய எதிர்மனுதாரர் :02 என்பவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு கேபிள் இணைப்பினை வழங்க உத்தரவிடாமல் நுகர்வோராகிய எனக்கு மன உளைச்சலும் சேவை குறைபாடும் ஏற்படுத்தி உள்ள எதிர்மனுதாரர் :03 என்பவர் மீதும் குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் முறையீடு,

பார்வை :
01. மாத சந்தா செலுத்தியதற்கான அட்டையின் நகல்

02. எனது புகார் கடிதம் நாள்:  01-02-2018

03.எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் இருந்து வந்த பதில் கடிதம்  ந.க.எண் :45/2017,TACTV /TUP.நாள் :12-03-2018.

04. வங்கி வரைவோலை நாள் :26-03-2018 மற்றும் புகார் கடித நாள் :31-03-2018

05.எதிர் மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க .எண் :45/2017/TACTV /TUP. நாள் :04-04-2018.

06.எதிர்மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க.எண் :45/2017,TACTV / TUP.நாள் :10-04-2018

07.எதிர்மனுதாரர் :03என்பவருக்கு குறைதீர்க்கும் நாளில் நேரில் கொடுத்த எனது புகார் மனு நாள் : 07-05-2018.

08.எதிர்மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க. எண் :45/2017,TACTV /TUP.
நாள் :07-05-2018.

09: எதிர்மனுதாரர் :03 என்பவரிடம் கொடுத்த புகார் மனுவிற்கு சார் ஆட்சியரிடம் இருந்து வந்த விசாரணை அழைப்பாணை கடிதம் நாள் 17-07-2018.

10.அம்மா அழைப்பு மைய புகார் எண் :18082900292.

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் எதிர்மனுதாரர் :01 என்பவரிடம் இருந்து வைப்பு தொகை செலுத்தி அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ளேன்.

எனவே நான் ஒரு நுகர்வோர் ஆவேன்.

எதிர்மனுதாரர் :01.மோகன்ராஜ் என்பவர் LCO :15233 அரசு கேபிள் டி.வி உரிமம் பெற்றுள்ள கேபிள் டி.வி ஆப்பரேட்டர் ஆவார்.

எதிர்மனுதாரர் :01என்பரிடம் எனது வீட்டிற்கும், சலூன் கடைக்கும் சேர்ந்து இரண்டு அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளேன்.

பல ஆண்டுகளாக 01. எதிர்மனுதாரரிடம் கேபிள் இணைப்பு பெற்று மாத சந்தா செலுத்தி வருகிறேன்.

அரசு நிர்ணயம் செய்துள்ள மாத சந்தா  ₹ 70.00 ரூபாயினை பெறாமல் ₹100 ரூபாய் மாதசந்தா கூடுதலாக வசூலித்து வருகிறார்.
   
இந்நிலையில் எதிர்மனுதாரர் 01: என்பவரிடம் அரசு இலவச செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்க கோரினேன்.

ஆனால் அவர் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க இயலாது என்றும் தனியார் செட்டாபாக்ஸ் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பார்வை :02 காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பினேன். எதிர்மனுதாரர் :02 என்பவர் பார்வை :03இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்மனுதாரர் :01 என்பவர் எனது இரு கேபிள் இணைப்புகளையும் துண்டித்துவிட்டார்.

மாத சந்தா தொகையினையும் பெற மறுத்த காரணத்தினால் பார்வை :04 ல் காணும் வங்கி வரை வோலையை எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பினேன்.

பார்வை: 05 இல் காணும் கடிதத்தின் படி எதிர்மனுதாரர் :01என்பவருக்கு எதிர்மனுதாரர் :02 என்பவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆனால் நான் விசாரணைக்கு சென்ற போது எதிர்மனுதாரர் :01 என்பர் விசாரணைக்கு வரவில்லை.

துண்டிக்கப்பட்ட எனது வீட்டு கேபிள் இணைப்பினை எதிர்மனுதாரர் :01 என்பவர் மீண்டும் வழங்கினார்.

இந்த நிலையில் பார்வை :04 ல் காணும்  எனது வங்கி வரை வோலையை பார்வை :06 ல் காணும் கடிதம் வாயிலாக எதிர்மனுதாரர் :02 என்பவர் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

அரசு கேபிள் டிவி கணக்கில் செலுத்திய வங்கி வரைவோலை யை அரசு கணக்கில் வரவு வைக்காமல் எதிர்மனுதாரர் :02 என்பவர் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில் 02-05-2018 அன்று எதிர்மனுதாரர் :01 என்பவர் எனது வீடு மற்றும் கடை கேபிள் இணைப்பினை மீண்டும் துண்டித்து விட்டார்.

எனவே, எதிர்மனுதாரர் :02 என்பவரின் கைபேசிக்கு அழைத்து புகார் தெரிவித்தேன்.

எதிர்மனுதாரர் :02 என்பவர் 03-05-2018 அன்று மதியம் 3.00 மணிக்கு கேபிள் டிவி அலுவலகத்திற்கு நேரில் வர சொன்னார்கள்.

நான் நேரில் சென்றபோது எதிர்மனுதாரர் :01 என்பவர் விசாரணைக்கு வர வில்லை

எதிர்மனுதாரர்: 01 என்பவரை நேரில் சென்று சந்திக்கும்படி  எதிர்மனுதாரர் 02

என்பவர் தெரிவித்தார்கள். எனவே எதிர்மனுதாரர் 01 அலுவலகம் நேரில் சென்ற போது அங்கு அவர் இல்லை.

இந்நிலையில் 04.05.2018 அன்று எதிர்மனுதாரர் : 02 என்பவர் என்னை சந்திக்க வந்தார்.

எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பிய வங்கி வரைவோலையை எதிர்மனுதாரர் : 01 என்பவருக்கு தெரியாமல் அனுப்பி விட்டதாக எதிர்மனுதாரர் : 02 என்பவர் தெரிவித்தார்.

இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான நான் பார்வை : 07 ல் காணும் புகார் கடிதத்தினை குறைதீர்க்கும் நாளில் எதிர்மனுதாரர் : 03 என்பவரிடம் நேரில் கொடுத்தேன்.

இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பிணை எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீண்டும் வழங்கினார்.

பார்வை : 08 ல் காணும் கடிதம் எதிர்மனுதாரர் : 02 என்பவரிடம் இருந்து வரப்பெற்றது.

எதிர்மனுதாரர் : 03 என்பவரிடம்  கொடுத்த புகார்மனு மீது விசாரணை செய்வதற்காக பார்வை : 09 இல் காணும் கடிதம் சார் ஆட்சியரிடம் இருந்து வரப் பெற்றது.

31.07.2018 அன்று விசாரணைக்கு நேரில் சென்று இருந்தேன்,அங்கு சார் ஆட்சியர் விசாரணை செய்யவில்லை.அவரது உதவியாளர் விசாரணை செய்தார்கள். எதிர்மனுதாரர் : 01 என்பவரும் எதிர்மனுதாரர் : 02 என்பவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவதாக தெரிவித்தார்கள்.

விசாரணை திருப்தி அளிக்கவில்லை

இந்நிலையில் 29.08.2018 அன்று மீண்டும் எனது கடையின் கேபிள் இணைப்பினை எதிர்மனுதாரர் : 01 என்பவர் துண்டித்துவிட்டார்.

எனவே எதிர்மனுதாரர் : 02 என்பவரை கைபேசியில் அழைத்து புகார் தெரிவித்தேன்.

அவர் எதிர்மனுதாரர் : 01 என்பவரிடம் பேசும்படி தெரிவித்தார்.

எதிர்மனுதாரர் : 01 என்பவர் மாத சந்தா தொகை 100 ரூபாய் வீதம் செலுத்தினால் மட்டும் தான் இணைப்பு வழங்குவேன் என தெரிவித்தார்.

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக எனது புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் நுகர்வோராகிய என்னை அங்கும் இங்கும் அலைகழித்து மிகுந்த மன உளைச்சலினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

எதிர்மனுதாரர் : 02 என்பவரின் உத்தரவினை எதிர்மனுதாரர் : 01 என்பவர் கேட்க மறுக்கிறார்.

எதிர்மனுதாரர் : 03 என்பவரிடம் கொடுத்த எனது புகாரின் விசாரணை நிலுவையில் இருக்கும் காரணத்தினால் எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீண்டும் மீண்டும் எனது கேபிள் இணைப்பினை துண்டித்த வண்ணம் இருக்கிறார்.

பார்வை : 10 இல் காணும் அம்மா அழைப்பு மையத்திலும் புகார் அளித்துள்ளேன்.

எனவே தாங்கள் எனது புகார் மனு மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு  மாத சந்தா 70.00 ரூபாய்க்கு கேபிள் இணைப்பு வழங்கவும் ,அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்கவும் சட்ட விரோதமாக செயல்பட்டுவரும் எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும்,கடமை தவறிய எதிர்மனுதாரர் : 02 என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும்,எனது புகாரினை கால தாமத படுத்தும் எதிர்மனுதாரர் : 03, என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் இந்த புகார் மனு தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் :23

நாள்  : 13.09.2018                                              
இடம் : திருப்பூர்.

மாவட்ட துணை மேலாளரின் கடிதம் :

1100 அம்மா அழைப்பு மையத்தில் அளித்த  புகார் மீது நடவடிக்கை!!

சபாஷ்!!

திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி துணை மேலாளர் /தனி வட்டாட்சியர் பொ.ஜெய்சிங் அவர்களின் இறுதி எச்சரிக்கை!!

அரசு இலவச செட்டாபாக்ஸ் மூன்று தினங்களுக்குள் புகார் தெரிவித்த ராம்குமார் என்ற சந்தாதாரருக்கு வழங்கப்பட வில்லை எனில் திருப்பூர் அனுப்பர்பாளையம் A.M.கேபிள் நெட்வொர்க் கேபிள் டி.வி  உரிமத்தினை ரத்து செய்து புதிய ஆப்பரேட்டரை நியமனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
வாழ்த்துக்கள்.

அனுப்புநர் :
திரு.பொ.ஜெய்சிங்
தனி வட்டாட்சியர் துணை மேலாளர்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம்
திருப்பூர்

பெறுநர் :
திரு.மோகன்ராஜ்
A.M.கேபிள் நெட் வொர்க்
105 ,குமரன் வீதி
அனுப்பர்பாளையம்
திருப்பூர் .

ந.க.எண் :47/2018/TACTV.TUP : நாள் :21.12.2018

அய்யா,

பொருள் : புகார் மனு அம்மா தொலைபேசி மையம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் திருப்பூர் மாவட்டம் -திருப்பூர் வடக்கு வட்டம் -திரு. ராம் குமார் என்பவர் அரசு செட்டாபாக்ஸ் கேட்டு மனு தொடர்பாக,

பார்வை :அம்மா அழைப்பு மையம் Ref No: 18102200349 ,1811010 0187
நாள் :22.03.2018

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் டவுண் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த திரு.ராம்குமார் என்பவர் அரசு கேபிள் டி.வி. செட்டாபாக்ஸ் வழங்க கேட்டு நேரிலும் அரசு அதிகாரிகள் மூலம் பல முறை முறையிட்டும்  மனு செய்தும் இன்று வரை தனக்கு அரசு கேபிள் டி.வி. செட்டாபாக்ஸ்  வழங்க வில்லை என்றும் அனலாக் முறை நிறுத்தப்பட்டு விட்ட  நிலையில் செட்டாபாக்ஸ் வழங்கப்படாத தால் தனக்கு ஏற்பட்டுள்ள மன சிரமங்களுக்கு கேபிள் ஆப்பரேட்டர் தான் காரணம் என்றும் அம்மா அழை பேசி மையத்தில் மனு செய்துள்ளார்.

இது தொடர்பாக உங்களிடம் பலமுறை தொலைபேசியில் தெரிவித்தும் கடிதங்கள் அனுப்பியும் அதிகாரிகள் உத்தரவினை அலட்சியம் செய்து வருகிறீர்கள்.

மனுதாரரின் கோரிக்கை குறித்து இக்கடிதம் கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் செட்டாபாக்ஸ் வழங்கப்பட வில்லை எனில் உங்களது உரிமத்தை ரத்து செய்து உங்கள் பகுதியில் புதிய ஆப்பரேட்டரை  நியமனம் செய்ய ஆவண செய்யப்படும் என்பதினை இறுதியாக. தெரிவிக்கப்படுகிறது.

துணை மேலாளர் தனி வட்டாட்சியர்
அரசு கேபிள் டி.வி
திருப்பூர்

நகல் :
1.திரு.ராம்குமார்
த/பெ. செல்லையா
99 B திலகர் நகர் மேற்கு
அனுப்பர் பாளையம்
திருப்பூர் -641 652

2.மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்
சென்னை -அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

LAACO வின் கோரிக்கை :

1.மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர்  அரசு கேபிள் மூலம் 1010 சந்தாதாரர்களுக்கு மட்டுமே  இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் அளித்து அரசை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

2.புதுக்காலனி, திலகர் நகர், அனுப்பர்பாளையம், ஆத்துபாளையம் என பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கி உள்ளார்.

2. அரசு நிர்ணயம் செய்துள்ள மாத சந்தா  ₹ 70 க்கு பதிலாக ₹100 ரூபாய் சட்ட விரோதமாக வசூலித்து வருகிறார்.

அதன் மூலம் 15000 × ₹ 100 =₹ 15,00000
மாதம் சுமார் ₹15 இலட்சம் வீதம் ஆண்டொன்றுக்கு சுமார் ₹1,80,00000
ஒரு கோடியே என்பது இலட்சம் ரூபாய்  வருமானம் ஈட்டி வருகிறார்.

3.15000 × ₹ 20 = ₹ 3,00000
மாதம் சுமார் மூன்று இலட்சம் வீதம். ஆண்டொன்றுக்கு சுமார் ₹ 36,00000 முப்பத்தாறு இலட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வருகிறார்.

4. இன்றைய தினம் வரையிலும் 20 சந்தாதாரர்களுக்கு மட்டுமே அரசு இலவச செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்கி உள்ளார்.
அனலாக் முறை நிறுத்த பட இருப்பதால் இவர் மூலம் வழங்கப்பட்டுள்ள 20 செட்டாபாக்ஸ் மூலம் மாதம் ஒன்ற்கு 20× ₹ 62.50 = ₹ 1250 ரூபாய் மட்டுமே அரசுக்கு வருவாய்.

5.தனியார் செட்டாபாக்ஸ் இணைப்பினை கட்டாயப்படுத்தி அனைத்து சந்தாதாரர்களுக்கும் வழங்கி பல லட்சம் ரூபாய் மாதம் தோறும் கொள்ளை லாபம் ஈட்டி  வருகிறார்.

இதன் மூலம் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்.

6.அரசுக்கு ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பினை தடுக்கும் பொருட்டு தனி அலுவலர்களை நியமித்து மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கேபிள் இணைப்புகளையும் நேரடியாக சென்று தளஆய்வு செய்ய கோருகிறோம்.

7.அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ள அனைத்து சந்தாதாரர்களுக்கும் அரசின் இலவச செட்டாபாக்ஸ் வழங்கி அரசிற்கு வருவாய் இழப்பீடு ஏற்படாமல் தடுக்க  கோருகிறோம்.

8.சந்தாதாரருக்கு அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க பல முறை எச்சரித்தும் கடிதம் அனுப்பியும் அரசுத்துறை அலுவலரின் உத்தரவினை மதிக்காமல் சர்வாதிகாரியைப் போல் செயல் பட்டு வரும் மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் அரசிற்கு மிகுந்த அவமானம் என கருதுகிறோம்.

9.அரசை மோசடி செய்து அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பினை திட்டமிட்டு ஏற்படுத்தி வரும் மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் உரிமத்தினை உடனடியாக ரத்து செய்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யக்கோருகிறோம்.

10..அரசு கேபிள் உரிமத்தினை ரத்து செய்தாலும் அவருக்கு எந்த விதத்திலும் இழப்பு இல்லை.
எனவே இது நாள் வரை அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி மோசடி செய்த தொகை முழுவதினையும் அவரிடம் இருந்து அபராதத்துடன் திருப்பி வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ........!!

No comments:

Post a Comment