Monday 17 December 2018

ஊழல் ஒழிப்பு செய்தி:0032 அரசு பள்ளி மாணவனை கடித்து குதறிய தெரு /வெறி நாய்!

ஊழல் ஒழிப்பு செய்தி :
LAACO ; 0032 /19.12.2018

குற்றம் நடந்தது என்ன?

நெஞ்சை பதற வைத்த
உண்மை சம்பவம்!

அரசு பள்ளி மாணவனை கடித்து குதறிய தெரு நாய் /வெறி நாய்.

குற்றவாளிகள் யார்? யார்?

1.ஆபத்துக்கு அவசர சிகிச்சை அளிக்க தவறிய திருப்பூர் 4.வேலம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

2.தெரு நாய் /வெறி நாய்களிடமிருந்து திருப்பூர் மாநகர மக்களை பாதுகாக்க தவறிய திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை.

3.மாநகராட்சி உரிமம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சுகாதார சான்று பெறாமல்  சட்ட விரோதமாக செயல் படும் நியூ மதினா மட்டன் சிக்கன் ஸ்டால்.

குற்றம் நடந்த இடம் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை நியூ மதினா மட்டன் சிக்கன் ஸ்டால்.

திருப்பூர் அங்கேரிபாளையம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த முருகேசன் பரிமளா ஏழை கூலி தொழிலாளியின் மகன் 14 வயதான பால கிருஷ்ணன் .

இவர் அங்கேரிபாளையம் V.K. அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில் 16.12.2018 அன்று காலை 7.00 மணி அளவில் தனது சக நண்பர்கள் இருவருடன் அனுப்பர்பாளையம் வார சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக அவரது வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கேரிபாளையம் சாலையில் செயல் பட்டு வரும் நியூ மதினா மட்டன் சிக்கன் கடையின் முன்புறம் இருந்து ஆவேசமாக பாய்ந்து வந்த இரு நாய்களில் ஒன்று மாணவனின் தொடையை கடித்து குதறியது.

இரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த மாணவனை சக நண்பர்கள் நாயிடம் இருந்து மீட்டு அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் கேட்டு பதறி அடித்து ஓடி வந்த பெற்றோர் கால்களில் இருந்து இரத்தம் வடிந்து வலியால் துடித்து கொண்டிருந்த மகனை தூக்கி கொண்டு உடனடியாக  4.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவரும் இல்லை .செவிலியரும் இல்லை.
அங்கிருந்த இளம் பெண்ணிடம் சிகிச்சை அளிக்கும் படி வேண்டியுள்ளனர்.

மருத்துவர் 10 மணிக்கு தான் வருவார்.
நாய்கடிக்கான. ஊசி மருந்து  ஒருவருக்கு போட முடியாது. ஐந்து நபர் நாய்கடிபட்டு வந்தால்  தான் போட முடியும் எனவே 10 மணிக்கு மேல் வருமாறு திருப்பி அனுப்பியுள்ளார்.

இரத்தம் சொட்ட சொட்ட வந்த மாணவனுக்கு முதல் உதவி சிகிச்சை கூட அளிக்காமல் திருப்பி அனுப்பியது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியும் மன வருத்தமும் ஏற்பட்டுள்ளது.

நாயின் கூரிய பற்கள் தொடை பகுதியில் ஆழமாக சதையை துளைத்து
இரத்தம் நிற்காமல் வெளியேறி கொண்டிருந்ததினால் கடித்த நாய் ரேபிஸ் போன்ற வெறி நாயாக இருந்தால் என்ன செய்வது என  பதட்டமடைந்த பெற்றோர்  மகனின் உயிரை காப்பாற்ற அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வெளி நோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டு  OP No :200096180000637005. சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20.12.3018, 24.12.2018 மற்றும் 14.01.2018 ஆகிய நாட்களில் வந்து ஊசி போட வேண்டும் என துண்டு சீட்டில் எழுதி கொடுத்துள்ளனர்.

தற்பொழுது அரை இறுதி தேர்வு நடை பெற்று வரும் நிலையில் நாய்கடியால் பாதிக்கப்பட்ட மாணவன் மிகுந்த மன துயரத்தில் உள்ளான்.
நாய் கடிக்கும் போது ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தேன் இல்லை என்றால் சதையை கடித்து எடுத்திருக்கும் என கண்ணீர் மல்க கூறினான்.  எனது உயிருக்கு ஏதேனும் ஆபாத்தா அண்ணா என நம்மிடம் கேட்டான்.
ஒரு கணம் திகைத்து போய் விட்டோம்.
தம்பி எதுவும் ஆகாது ..
தொடர்ந்து மருத்துவமனை சென்று ஊசி போட்டு பத்தியம் இரு தம்பி என ஆறுதல் கூறினோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவனின் பாட்டியையும் இதே நாய் கடித்து குதறியதாக மேலும் அதிர்ச்சியான செய்தியையும் நம்மிடம் கூறினார்கள்.

இது போல் தெருநாய் / வெறிநாய் கடியினால் பலர்  பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கோரிக்கை :

1. தெரு நாய் / வெறி நாய்களினால் திருப்பூர் மாநகர மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பாக மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு புகார் மனு  ,11,2018 அன்று அனுப்பப்பட்டது.
ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை.

2.திருப்பூர் மாநகரம் முழுவதும் புற்றீசல் போல் மாநகராட்சி உரிமம் பெறாமல் விதிமுறைகள் மீறப்பட்டு  சட்ட விரோதமாக  செயல் படும்  கோழிக்கடைகள்,

கோழி விற்பனை செய்யும் கடைகளில் எந்த பாதுகாப்பு வசதிகளும் கிடையாது.
கோழி கழிவுகளினால் துர்நாற்றம்.
ஈக்கள் பெருமளவில் காணப்படுவதினால் பொது சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

மாமிசம் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் சுகாதார சான்றுகள் பெற வில்லை.

ஆடு மாடு மீன் கோழி என மாமிசம் விற்பனை செய்யும் கடைகளின் முன் சுமார் பத்து தெரு நாய்கள் எப்போதும்  காணப்படுகிறது.

கடைகாரர்கள் தூக்கி வீசும் மாமிச கழிவுகளை உண்ணும் தெரு நாய்கள் சாலையில் செல்பவர்களை கடித்து குதறுகிறது.

மாநகராட்சி சுகாதார துறையினரும் உணவு பாதுகாப்பு துறையினரும் அனைத்து கடைகளையும் உரிய முறையில் ஆய்வு செய்து சட்ட விரோதமாக செயல் படும் மாமிச கடைகளையும்  மாநகராட்சி ஆடு வதை கூடங்களை பயன் படுத்தாத கடைகளையும் தடை செய்யக்கோருகிறோம்

3.மாமிச கழிவுகளை நல்லாற்றிலும் மாநகராட்சியால் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் இரவு நேரங்களில் கொட்டுகிறார்கள் .
துர்நாற்றம் வீசுவதுடன் பொது சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்தி வருகிறார்கள்.வர்த்தகர்களிடமிருந்து தினமும் சேகரமாகும் மாமிச கழிவுகளை மாநகராட்சி சுகாதாரதுறையினர் அப்புறப்படுத்த கோருகிறோம்.

4.தெரு நாய் /வெறி நாய் கடிபட்டு இரத்தம் சொட்ட வந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை செய்யாமல் கொஞ்சமும் கூட ஈவு இரக்கம் இல்லாமல் திருப்பி அனுப்பிய 4.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார  நிலைய பெண் பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

5.நாய்கடிக்கு போடப்படும் ஊசி மருந்து விலை உயர்வானதாம் .ஒரு நபருக்கு போட முடியாதாம்.
ஐந்து நபர்கள் ஒரே நேரத்தில் நாய்கடிப்பட்டு வந்தால் தான் போட முடியும் என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 24 மணி நேரமும் நாய்கடிப்பட்டு வருபவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக சிகிச்சை அளிக்க மாவட்ட சுகாதாரத்துறை  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

6..தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் தமிழக முதல்வரை தலைவராக கொண்டு செயல் படும் நிலையில் தெரு நாய்களின் நலன் கருதி அனைத்து தெரு நாய்களையும் அரசு செலவில் பாதுகாக்க கோருகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி : 98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .....

No comments:

Post a Comment