இந்திய குடிமக்கள் அனைவரும் காவல் துறை உளவாளிகளா?
(POLICE. INFORMER.) ?
ஆம் / YES
" சட்டம் தெரிந்து கொள்வோம் :"
குற்ற விசாரணைமுறைச்சட்டம் -1973
CRIMINAL. PROCEDURE. CODE - 1973
கு.வி.மு.ச - பிரிவு : 39
CrPc. Section. : 39
சில குற்றங்கள் குறித்து பொது மக்கள் தகவல் கொடுக்க வேண்டும்
PUBLIC TO GIVE INFORMATION OF CERTAIN OFFENSES .
ஒரு குற்றம் ஏற்கனவே நடந்தது !
குற்றம் நடந்து கொண்டிருப்பது!
குற்றம் நடக்க இருப்பது!
பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிய வந்தால் அருகில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கோ, நீதிமன்ற நடுவருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்
என்னென்ன தகவல்களை தெரிவிக்கலாம்?
அரசுக்கு எதிரான. குற்றங்கள்!
பொது அமைதிக்கு விரோதமான குற்றங்கள்.!
உணவு பொருட்கள், மருந்துகளில் கலப்படம் செய்பவர்கள்.!
அரசு ஊழியர்கள் செய்யும் நம்பிக்கை மோசடிகள்!
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்.
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் .!
விபச்சாரம் செய்பவர்கள்.!
கள்ளச்சாராயம் விற்பவர்கள்.!
அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூல் செய்பவர்கள்.!
M R P விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள்.!
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் புரிபவர்கள்!
தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள்.!
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள்.!
சூதாட்டம் , ஆயுதங்களுடன் கூடி நிற்பவர்கள்.!
பொதுமக்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் தீங்கு செய்தவர்கள்
அல்லது செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது செய்ய நினைப்பவர்கள்
யாராக இருப்பினும் குற்ற விசாரணை முறைச்சட்டம் 39 ன்படி காவல் துறை (அ) நீதிமன்றத்தில் புகார் செய்யும் உரிமை வழங்கப் பட்டுள்ளது.
புகார் எப்படி யாருக்கு செய்வது?
காவல்துறை தொடர்பு எண் இல்லையா கவலை வேண்டாம்.!
அழையுங்கள் :100 க்கு
உங்கள் கடமையை செய்யுங்கள்!
என்ன நண்பர்களே!
கு.வி.மு.ச :39
பயன் படுத்துங்கள் உங்களின் உரிமையை!
இப்போது நாம் அனைவரும் காவல்துறை உளவாளிகள் தானே?
அன்புடன்.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
உலா பேசி : 98655 90723
No comments:
Post a Comment