📢 *திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் பரபரப்பு*!!
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
*அரசியல் கட்சி விழாவா*?
*🏛அரசூழியர் இல்ல விழாவா*?
*திருப்பூர் மாவட்டம் வடக்கு வட்டம் அங்கேரி பாளையம் பகுதியில் மாநகராட்சி வாகனங்களும், ஊழியர்களும் இன்று பரபரப்பாகவும், சுறு சுறுப்பாகவும் பணி ஆற்றி கொண்டிருந்தனர்!*
*நல்லாற்றுக்குள் நேரடியாக செல்லும் கழிவு நீர் கால்வாய்களில் பல நாட்களாக தேங்கி நின்று சுகாதார கேடு ஏற்படுத்தி கொண்டிருந்த கழிவு நீரினை மாநகராட்சி கழிவு நீர் வெளியேற்றும் வாகனங்கள் மூலம் சேகரித்து கொண்டிருந்தனர்*!!
*இதனை பார்த்த நமக்கு இன்ப அதிர்ச்சி*!!
ஆச்சரியம்!
*ஏனென்றால் இதே பகுதியில் பல ஆண்டுகளாக மாநகராட்சி செப்டிக் டேங் கழிவு நீர் வாகனங்களில் கழிவு நீரினை சேகரித்து கொண்டு வந்து கடமை தவறிய சுகாதார அலுவலர் முருகன் தலைமையில் நல்லாற்றில் நேரடியாக விட்டு மாசு படுத்தி வந்தனர்*!!
*இது நமது நல்லாறு பாதுகாப்புக்குழு முயற்சியால் தற்பொழுது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது*
*பரவாயில்லையே*?
*தவறு செய்த மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மனம் திருந்தி தமது கடமைகளை ஒழுங்காக செய்கிறார்களோ என நினைத்தோம்*!!
*சாலை ஓரங்களில் இருந்த குப்பை கழிவுகள் அனைத்தும் அகற்றி கொண்டிருந்தனர்*!!
*சாலையின் இரு புறங்களிலும் பீளீச்சிங் பவுடர் , சுண்ணாம்பு பவுடர் போட்டு பளிச்சென்று காணப்பட்டது*!!
*அந்த பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது*!!
*ஏதோ பூப்பு நன்னீராட்டு விழாவாம்*!!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் முத்து கிருஷ்ணன் திருமண மண்டபம் முழுவதும் இரு புறமும் கலர் கலராய் கொடிகள் தோரணங்கள் என அமர்க்கள படுத்தி இருந்தனர்*!! 🏴🏳🌲?🌻🌼🌸🌺🍁🌲🌺🌸🌹🌷
*ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் விழாவிற்கு வருவதாக பிளக்ஸ் பேனரில் காணப்பட்டது*!!
ஓகோ! அப்படியானால்,
*இது ஆளும் கட்சியை சார்ந்தவரின் மகளுக்கு நடக்கும் பூப்பு நன்னீராட்டு விழாவாக இருக்கும். அதனால் தான் நமது மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் சுகாதாரமாக வைத்துள்ளனர் போலும் என நினைத்தோம்*
*ஆனால் அடுத்த பிளக்ஸ் பேனரை பார்க்கும் போது நமக்கு மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி*!!
ஆம்.
ஆர். மகேஸ்வரி
*கொமாரபாளையம் & பவானி நகராட்சி ஆணையர்* அவர்களது மகள் *மதுமிதா என்பவருக்கு தான் *பூப்பு நன்னீராட்டு விழாவாம்*!
*ஆளும் கட்சியின் அசைக்க முடியாத உண்மை விசுவாசி என்பதினை இதன் மூலம் காண முடிந்தது*!! 👍👍👍
*அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் ஒரு நகராட்சி பெண் ஆணையர் விழா எடுப்பது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக தான் இருக்கக்கூடும்*!! 👍
*எப்படியோ இந்த மாதிரி ஆளும் கட்சியின் விசுவாசிகளாகிய அரசூழியர்கள் அடிக்கடி திருமண மண்டபங்களில் விழா நடத்தினால் நமது மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் சுகாதாரமாக வைத்திருப்பார்கள் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்*!!
*பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலை பணி இதன் காரணமாக தான் சில நாட்களுக்கு முன் அவசர அவசரமாக நெடுஞ்சாலை துறையினரால் தார்ச்சாலை போடப்பட்டிருக்குமோ*
🏛 *அரசூழியர் என்பதால் காவல் துறையில் சட்டப்படி அனுமதி பெற்று தான் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பார்கள் என நம்புகிறோம்*!! ✅
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர்
☎உலாபேசி :98655 90723
29.11.2017
No comments:
Post a Comment