மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
பெறுநர் :
திரு. வாசுக்குமார் அவர்கள்
உதவி ஆணையர்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652
அய்யா,
கடிதம் எண் : LAACO/ CL /005 /TPR/2017 ;நாள் :30.11.2017
பொருள் :பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோருவது சம்பந்தமாக குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் முறையீடு,
தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டி 1998 ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை வைத்து வருகிறேன் .
மாநகராட்சி 1, 5, 14, 15. வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.
4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.
இந்த கழிவு நீர் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்
மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.
இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள
முதல் வார்டுக்கு மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.
கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.
இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக 28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன்.
ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை
437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.
மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும் வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால் சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.
மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!
நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்சாலையினர் சிறிய அளவிலான குழாய்களை பதித்து மண்ணால் மூடியும் தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.
மழை காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.
சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி இருப்பது மிகுந்த வேதனையையும் சொல்லொணா துயரத்தையும் அளிக்கிறது.
சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே! என வெற்று விளம்பர படுத்தும் கடமை தவறிய மாநகராட்சி அதிகாரிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
₹86.25 இலட்சம் செலவு செய்தும் பிரதான கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.
கோரிக்கை : 01
மழை காலங்களில் தாங்களும், பொறீயாளர்களும் இந்த சாலையில் நடந்தோ அல்லது இருச்சக்கர வாகனத்திலோ வந்து ஆய்வு செய்ய வேண்டுகிறோம் .
கோரிக்கை :02
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்
கோரிக்கை :03
தற்பொழுது சாலையின் நடுவில் டிவைடர் வைத்த காரணத்தினால் போக்குவரத்து இடையூறும் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. 437 மீட்டர் கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் சுத்தம் செய்ய வேண்டுகிறோம் .
கோரிக்கை :04
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.
கோரிக்கை ;05
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவு நீர்கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .
கோரிக்கை வைப்பது நமது கடமை!
பல முறை புகார் செய்தும் கடமை தவறிய அரசூழியர்கள் கண்டு கொள்வதில்லை!
லஞ்சம் பெறுவதினையும் ஊழல் செய்வதினையும் தான் கடமை என நினைக்கின்றனர் போலும் .
கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!
ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் செய்து தான் மக்கள் தங்கள் உரிமைகளை பெற வேண்டுமா?
தங்களிடம் நேரிலும் இது குறித்து முறையிட்டுள்ளேன்.
தாங்கள் தங்கள் கடமைகளை செய்வீர்கள் என எதிர் பார்க்கிறோம்.
நாள் :30.11.2017
இடம் : திருப்பூர்
மனுதாரர்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
No comments:
Post a Comment