Friday 24 November 2017

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்!

📢  *திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பிரசன்னா ராமசாமி  அவர்களின் சிறப்பு கவனத்திற்கு* !!

*குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4)இன் கீழ் முறையீடு*!!

*🏛 அரசுக்கும் ,  மாநகராட்சி  நிர்வாகத்திற்கும் பல லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்*!!

★பின்னலாடை உற்பத்தியில் பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுவதில்  குட்டி ஜப்பானாக திகழும் திருப்பூர்!

★பின்னலாடை தொழிற்சாலைகளை நம்பி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள்!

★இந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வாடகை வீடுகள்!

★பின்னலாடை தொழில் தொடர்பான பல்வேறு தொழிற்சாலைகள். நிறுவனங்கள், அலுவலகங்களில் செயல் படும் கட்டிடங்கள்!

*தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,  வீடுகள், கடைகள்,  வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் திரையரங்குகள்,மருத்துவமனைகள்  என எந்த ஒரு கட்டிடங்களும்  அரசு விதிமுறைகள் படி கட்டப்படுவதில்லை*!

★எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் அனைத்தும் சட்ட விரோதமாகவே கட்டப்பட்டுள்ளன.!

✅ முக்கிய காரணம்
கடமை தவறிய *லஞ்சம் வாங்கும் மாநகராட்சி பொறியாளர்கள் ,வரி வசூலர்கள், வருவாய் அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், இடைத்தரகர்கள் மற்றும் இவர்களை ஆட்டி படைக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் வாதிகள்*!!

*சரி இவர்களால் அரசுக்கு எவ்விதம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது*?

★ஆறு காம்பவுண்ட் வீடு,  எட்டு காம்பவுண்ட் வீடு .,பத்து காம்பவுண்ட் வீடு  பதினாறு காம்பவுண்ட் வீடு , நூறு காம்பவுண்ட ,வீடு  இரு நூறு காம்பவுண்ட் வீடு  என அடை மொழியுடன்  ஓடு,  சிமெண்ட் சீட்,  தார்சு என பல் வேறு கட்டுமானங்களை கொண்டு கட்டப்பட்ட  வாடகை வீடுகள் அல்ல அல்ல.!  வாடகை அறைகள்! ஏராளம்! ஏராளம்!

★பல அடுக்கு  மாடிகளை கொண்ட தொழிற்சாலை
கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கடைகள், அலுவலகங்கள்!

★இதில் பெரும்பாலான. கட்டிடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளது.

*மாநகராட்சியால் அனுமதி பெறப்பட்டு கட்டப்படும் கட்டிடங்களும் முறை கேடாகவே கட்டப்பட்டு வருகிறது*

★அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிட உரிமையாளர்கள்  விதி முறையா அப்படி என்றால் என்ன என கேட்கின்றனர் .

*வரி விதிப்புகள் செய்வதில் தான் ஏகப்பட்ட குளறுபடிகள்! வருவாய் இழப்புகள்*!!
😡😡😡😡😡😡😡😡😡😡😡

*கட்டிட அனுமதி பெற வேண்டுமானால் வரைபடம் தயாரித்து வழங்கும் மாநகராட்சியால்  அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் நேரடி தொடர்பு கொண்டு பல லட்சங்களை மனுதாரர்களிடம் இருந்து  லஞ்சமாக பெற்று கட்டிட  அனுமதி பெற்று தருகின்றனர்*! 

*குறிப்பிட்ட ஒரு தொகையினை லஞ்சமாக கொடுத்தால் கட்டிட பரப்பளவினை (சதுர அடி)  குறைத்து மதிப்பீடு செய்து அரையாண்டு  வரியினை குறைத்து வழங்குவார்கள்*!

*ஒரு வீடு அல்லது இரண்டு வீடுகளுக்கு மட்டும் வரி செலுத்தி விட்டு , பல வீடுகள் வரி விதிப்பு செய்யப்படாமல் முறை கேடாக கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர்*!

*பல லட்சக்கணக்கான பணத்தினை வாடகையாக பெறும் பலர் குறைந்த தொகையினை வரியாக செலுத்துகின்றனர்*!

*இதனால் மாநகராட்சிக்கு  மிகுந்த வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது*

★திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் அறுபது வார்டுகள்!

★பதினைந்து வார்டுக்கு ஒரு மண்டல அலுவலகம்!

★ஒவ்வொரு மண்டல  அலுவலகத்திற்கும் ஓரு உதவி ஆணையர் வீதம் நான்கு உதவி ஆணையர்கள்! 

★ஒரு மாநகராட்சி ஆணையர்!

★இவர்களுக்கு கீழ் பணியாற்றும் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் என பலதரப்பட்ட பல்வேறு  ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

*ஏன் இந்த முறை கேடுகள் இவர்களுக்கு தெரிவதில்லை*?

★தெரிந்திருந்தும் நடவடிக்கை  ஏன் எடுக்க வில்லை?

*இவர்களில் நேர்மையான அதிகாரிகள் யாரும் இல்லையா*?

★இவர்கள் யாருக்கு பயப்படுகின்றனர்?

*அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட இவர்கள் தான் முக்கிய காரணம்*?

எனவே,
*அரசுக்கு ஏற்பட்டு கொண்டிருக்கும் வருவாய் இழப்பினை சீர் படுத்தி வருவாயினை  பெருக்கிட மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய தங்களுக்கு முக்கிய பொறுப்பும் கடமையும் உள்ளது* .

*தங்கள் தலைமையில் நேர்மையான பொறியாளர்கள் அலுவலர்களை கொண்ட ஆய்வுக்குழு அமைத்து வார்டு வாரியாக ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அனைத்து விதமான கட்டிடங்கள்  ஒவ்வொன்றினையும்  தனித்தனியாக ஆய்வு செய்து முறை கேடாக செயல் படும் கட்டிடங்களுக்கு அபராதம் விதித்தும்*

*வரி செலுத்தப்படாத கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்தும்*

*சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அப்புற படுத்தியும்*

*மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாயினை பெருக்கிட வழி வகை செய்ய வேண்டுகிறோம்*🙏
✅✅✅✅✅✅✅✅✅✅✅
*கடமை தவறிய இதற்கு பொறுப்பு வகிக்கும் லஞ்ச அரசூழியர்கள் மீது கருணை காட்டாமல் பணி நீக்கம் செய்ய வேண்டுகிறோம்*🙏

*இந்த சீரிய பணியினை செய்ய தாங்கள் முன் வந்தால் பல கோடி கணக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைப்பது உறுதி*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
*திருப்பூர் மாநகராட்சி பகுதிகளை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய கோருகிறோம்*🙏

✍ *பல புகார்கள், தகவல்கள், ஆதாரங்கள், கோரிக்கைகள் எங்களுக்கு வரப்பெற்ற காரணத்தினால் இதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்* .👏
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
*சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு*
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
☎ உலாபேசி : 98655 90723
நாள் : 24.11.2017

No comments:

Post a Comment