📢 #ஊழல் ஒழிப்பு செய்தி :0020 /21.05.2017
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
குற்றம் நடைபெற்று கொண்டிருப்பது என்ன?
உண்மை சம்பவங்கள்!
குற்றவாளிகள் யார்?
மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள்! 🏛
முக்கிய அறிவிப்பு!!✅
★நண்பர்களே! பெற்றோர்களே!!
உங்கள் மழலை குழந்தைகளை Pre.KG என்னும் ஆரம்ப நிலை வகுப்பில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
அப்படியானால் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
★நர்சரி, மற்றும் பிரைமரி பள்ளிகளில் மட்டும் உங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வையுங்கள்.
★தயவு செய்து தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் சேர்க்காதீர்கள்!
★ஏனென்றால் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் நடத்த அரசு அனுமதி கிடையாது.
★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் Pre.KG வகுப்புகள் சட்டத்துக்கு புறம்பாக நடை பெற்று வருகிறது.
★கல்வியை வியாபாரமாக்கி கோடி கோடியாய் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகிகள்.
★இந்த கல்வி கொள்ளையர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் கடமையை செய்ய தவறுகின்றனர்.
★காரணம் கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்ச பணம்.
★லஞ்சம் என்னும் மலம் தின்னும் மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர் .
★மாணவ, மாணவிகள் குழந்தைகளின் நலனில் இவனுகளுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.
★பள்ளிக்கல்வி துறையின் மாணவர்கள் பாதுகாப்பு நலன் அரசாணைகளை தனியார் பள்ளிகள் முழுமையாக கடை பிடிப்பதாக போலியான ஆவணம் தயாரித்து பள்ளிக்கல்வி துறையையும் அரசையும் ஏமாற்றி வருகிறார்கள்.
★மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிந்திருந்தும் கண் இருந்தும் குருடர்களாய் காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் எதுவும் தெரியாத நேர்மையானவர்களாய் வலம் வருகின்றனர்.
★புகார்அளித்தாலும்✍ நடவடிக்கை எடுப்பதில்லை!
காரணம் லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம் மட்டுமே!
★ஒரு பள்ளி செயல்பட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் லஞ்சம் கொடுத்து போலி சான்றிதழ்களாக பெற்று பள்ளி நிர்வாகிகள் மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர்களிடம் வழங்குகின்றனர்.
★இந்த கேடு கெட்ட ஆய்வாளர்கள் பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்ததாக போலியான ஆய்வறிக்கை தயார் செய்து மெட்ரிக்பள்ளி இயக்குநரிடம் கொடுத்து பள்ளியின் உரிமத்தினை புதுப்பித்து கொடுக்கின்றனர்.
★மெட்ரிக்பள்ளி நிர்வாகிகளுக்கு என்று ஒரு சங்கம் உண்டு.
இவர்கள் ஏன் இதனை கண்டு கொள்வதில்லை?
★கும்பகோணத்தில் 94 மழலை குழந்தைகள் தீயில் கருகி மடிய காரணம் யார் ?
★போதும்! இனி மேல் இது போன்றதொரு துயர சம்பவம் வேண்டாம் 😂😂
★அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அரசுக்கு எதிராகவும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் செயல் படும் மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்களே!
★தமிழகத்தில் ஏதாவது ஒரு தனியார் பள்ளியாவது அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் நடை பெறுகிறது என உங்களால் சொல்ல முடியுமா?
★மானம் கெட்டவர்களே!
உடனடியாக சட்டத்திற்கு எதிராக. Pre.KG வகுப்புகள் நடத்தும் மெட்ரிக்மேல்நிலை பள்ளிகளின் உரிமத்தினை ரத்து செய்யுங்கள்.
★அந்த பள்ளிகளில் பயிலும் மழலை குழந்தைகளை காப்பாற்றுங்கள்!
★இல்லையெனில் நாடு முழுவதும் உள்ள உங்கள் அலுவலகத்தினை முற்றுகை இடும் சூழ்நிலை விரைவில் உருவாகும்
★விடமாட்டோம் கல்வியின் பெயரால் கொள்ளை அடிக்கும் கயவர்களையும் அதற்கு துணை போகும் கல்வி அதிகாரிகளையும்.
கல்வி விழிப்பறிவுணர்வு பணியில் .,.🤝
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
363, காந்தி ரோடு, பெரியார் காலனி,
திருப்பூர் -641 652.
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
உதவி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
செய்தியாளர்
☎உலாபேசி :98655 90723
அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
சுதந்திர இந்தியா மாத இதழ்
செய்தி ஆசிரியர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
செய்தியாளர்
☎உலா பேசி :98655 43303
குறிப்பு : நண்பர்களே! பெற்றோர்களே!
Pre.KG வகுப்பு நடத்தும் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளின் விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.👆 நன்றி.🙏
No comments:
Post a Comment