Saturday 22 October 2016

அரசு அதிகாரிகள் யார் ?

அரசு அதிகாரிகள் யார் ?

யார் இந்த அரசூழியர்கள் ?

பொது மக்களுக்கு இவர்கள் அதிகாரிகளா ? எஜமானர்களா ?

இல்லை ! இல்லை ! இல்லவே இல்லை .!

அப்போ இவர்கள் யார் ?

இவர்கள் அனைவரும் மக்களுக்கு பணி செய்ய நியமிக்கப்பட்டு அரசு ஊதியம் பெறும்  அரசு ஊழியர்கள் தான் !

இவர்களின் பணி என்ன ?

ஒரு அரசு என்பது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் !

மக்கள் நலன் கருதி பல் வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது .!

இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக பல தரப்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .!

இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே .!!

மக்கள் தான் இவர்களுக்கு எஜமானர்கள் .!

மக்களே! நீங்கள் எஜமானர்களாக இருக்கும் போது உங்களின் வேலைக்காரர்களிடம் கை கட்டி  வாய் பொத்தி நிற்க வேண்டுமா ?

தேவை இல்லை .! தேவை இல்லை .!!

மக்களிடம் இருந்து பெறப்படும் பல்வேறு வகையான  வரி இனங்கள் , கட்டணங்களில் இருந்து தான் அரசு அலுவலக செலவினங்களும் , அரசு ஊழியர்களுக்கு ஊதியங்களும் , சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது .!

பணி ஒய்வு பெற்ற பின்னரும் ஒய்வூதியம் வழங்கப்படுகிறது .!

அரசு அதிகாரிகள் என்பவர்கள் அந்தந்த துறைகளில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு தான் அதிகாரிகளே தவிர பொதுமக்களின் அதிகாரிகள் அல்ல !

ஆனால் , நடந்து
கொண்டிருப்பது என்ன ?

அரசு பணியாளர்கள் தங்களை எஜமானர்கள் போல் நினனத்து கொள்கின்றனர் .!

இவர்களை நம்பி வரும்
பொது மக்களை அலை கழித்து மிகவும் கேவலமாக நடத்துகின்றனர் .!

இவர்களுக்கு ஏதோ வானளாவ அதிகாரம் வழங்கப்பட்டு  உள்ளதாக மிரட்டுகிறார்கள் .!

உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக பொய்யான புகார் அளிக்கின்றனர் .!

அரசு வழங்கும் ஊதியங்களையும் , சலுகைகளையும் பெற்றுக் கொண்டு
சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் ஏழை எளிய மக்கள்  நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை .!

மேலும் ,

பொதுமக்களிடம் கையேந்தி லஞ்சம் என்னும் பிச்சை எடுக்கின்றனர் .!

இப்போது இவர்கள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் பிச்சைக்காரர்களை விட மிகவும் மகா கேவலமானவர்கள் .!!

இந்த லஞ்சம் வாங்கி உல்லrrச வாழ்க்கை வாழும் கயவர்களை கண்காணித்து தண்டனை பெற்றுக் தந்து  சிறையில் அடைக்க இவர்களுக்காக ,

மத்திய ,மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகங்கள்(  லஞ்ச ஒழிப்புத் துறை) செயல் பட்டு வருகிறது .

பொது மக்களை அதிகாரம் செய்ய எந்த அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை .!

மக்கள் சாசனப் படி குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் மக்கள் கோரும் சான்றிதழ்களையும் , சலுகைகளையும் வழங்க வேண்டும் .!

உயர் நீதிமன்ற உத்தரவு  படி ,
பொது மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களின் மீது 21.09.2015 நாளிட்ட அரசாணை எண் : 99 ன்  கீழ் முப்பது தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .!

மக்கள் பணி செய்யாத ஊழியர்கள் அனைவரும் கடமை தவறிய கேடு கெட்ட  அலுவலர்களே !

இவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம்  1860 சட்டப் பிரிவு  -166 ன் கீழ் ஒர் ஆண்டு சிறைத் தண்டனை உண்டு .!

உங்கள் வேலைக்காரர்களிடம் நீங்கள் உங்கள் கோரிக்கைக்காக செல்லும் போது அல்லது கடிதம் எழுதும் போது உயர் திரு , மாண்புமிகு ,  தயவு செய்து , தாழ்மையுடன் , தயவுடன் , தயவாய் ,கீழ் பணிந்து , தங்கள் உண்மையுள்ள , கருணையுடன் , கருணை கூர்ந்து , பிரார்த்திக்கிறேன்  , போன்ற யாசக வாசகங்களை உபயோக படுத்த வேண்டாம் .!

அரசு ஊழியர்கள் அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதும் போது இவ்வாறான யாசக வாசகங்களை பயன்  படுத்துவது அவர்களின்  வழக்கம் .!

பொது மக்கள் எவரும் இவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியமில்லை .!

பொது மக்கள் தான் இவர்களுக்கு எஜமானர்கள் .!!

எனவே ,

அரசுத் துறை அலுவலகங்களுக்கு உங்கள் தேவைக்காக செல்லும் போது நீங்கள் தான் எஜமானர்கள் என்ற உணர்வுடன் செல்லுங்கள் .!

உங்கள் வேலைக்காரர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்து தான் பணி புரிய வேண்டும் .!

அப்போது தான் அவர்கள் என்ன வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என உங்களுக்கு தெரிய வரும் .!

இவர்கள் அனைவரும் அரசு அலுவலக நடைமுறை விதிகளை கண்டிப்பாக கடை   பிடிக்க வேண்டும் .!

தவறும் ஊழியர்கள் மீது சட்ட ரீதியான  ஒழுங்கு நட  வடிக்கை எடுக்க  பரிந்துரைக்கலாம் .!!

லஞ்சம் கேட்டால்
லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்யுங்கள் !

என்ன நண்பர்களே !

யானையின் பலம் யானைக்கு தெரியாது .!

அது போல் நமது பலமும்  ,உரிமையும்  தெரியாமல் தாழ்வு மனப்பான்மையுடன் பலரும் கோழைகளாக சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வருகிறோம் .!

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெரியுங்கள் .!!

தன்னம்பிக்கை கொள்ளுங்கள் .!

நீங்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த சாதனையாளர்கள் தான் .!

நமது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நாம் ஒவ்வொருவருக்கும் கடமையையும் , அதிகாரத்தையும் இந்திய அரசியலமைப்பு சாசனம் -1950 கோட்பாடு 51(A)ஒ வழங்கியுள்ளது ...........!!!!!!

சட்ட விழிப்புணர்வு பணியில் , பொது நலன் கருதி வெளியிடுவோர் ,

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு ,
363, காந்தி ரோடு , பெரியார் காலனி ,
திருப்பூர் -641 652

நீங்கள் யாரேனும் கடமை தவறிய அரசூழியர்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அழையுங்கள் .!!

LAACO நாஞ்சில் K.கிருஷ்ணன்
நிறுவனர்
98655 90723

அரியலூர் R. சங்கர்
மாநில தலைவர்
98655 43303
.

No comments:

Post a Comment